ஆற்றல்மிக்க அபாயங்களை சந்திக்கப்போகும் க்யூபி-50..!
நமது வளிமண்டலத்தில் உள்ள வெளிப்புற அடுக்கு பற்றி அறிவு ஒப்பீட்டளவில் மட்டும் தான் நமக்குள்ளது. அதனை மேலும் அதிகமாய் புரிந்துகொள்ள, சர்வதேச விஞ்ஞானிகள் குழு பூமியின் தெர்மோஸ்பியருக்கு க்யூப்சாட்ஸ் எனப்படும் 50 மினி செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவி ஆராய தயாராக உள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 200 மற்றும் 380 கிலோமீட்டர் இடையே அமைந்துள்ள தெர்மோஸ்பியர் பற்றி மேலும் அறிந்துகொள்ளவது மிகவும் கடினமாகும் ஏனெனில் விண்வெளியின் கடுமையான நிலைமைகளில் இருந்து நம்மை பாதுகாப்பதே அது தான்.

எப்படி :
பூமியில் இருந்து தெர்மோஸ்பியருக்கு 50 மினி செயற்கைக்கோள்கள் வரை அனுப்புவதற்கு பதிலாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவைகளை தொடங்கினால் எப்படி வெளி மண்டலம் செயல்படுகிறது என்ற தரவுகளை அவைகள் அளிக்கும்.

புரிந்து கொள்ளமுடியாத :
அந்த குறிப்பிட்ட பகுதியானது சரியாக புரிந்து கொள்ளமுடியாத மற்றும் அளவிட கடினமான ஒன்றாக உள்ளது.

இரண்டிற்கும் :
இன்னும் அது பூமி கிரகம் மற்றும் விண்வெளி ஆகிய இரண்டிற்கும் இடையிலேயான இடைமுகமாகத் தான் திகழ்கிறது.

ஆற்றல் :
அங்குதான் சூரியனின் புற ஊதா மற்றும் எக்ஸ்-ரே கதிர்வீச்சின் பெரும்பகுதி மோதுகிறது மற்றும் சக்தி கட்டமைப்புகள் மற்றும் தகவல்தொடர்பு பாதிக்கும் ஆற்றல்மிக்க அபாயங்களை அது உருவாக்குகிறது.

க்யூபி-50 :
தொடங்கப்பட இருக்கும் 50 க்யூப் சாட்கள் ஆனது க்யூபி-50 என்னும் சர்வதேச திட்டத்தின் கீழ் இயக்கப்பட இருக்கிறது.

28 நாடுகள் :
ஐரோப்பா , ஜப்பான், அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 28 நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பகுதியாக இருக்கும்.

1 கிலோகிராம் :
மினி செயற்கைகோள்கள் சுமார் 10 செ.மீ (ஒவ்வொரு பக்கத்திலும்) அளவிலும், 1 கிலோகிராம் எடையுள்ளதாகவும் இருக்கும்.

மேலும் படிக்க :
நாசா : 'என்னமா இப்படி பண்றீங்களே மா'?
சூரியனுக்கு அருகிலேயே ஒரு வாழத்தகுந்த கிரகம், ஏலியன் கிரகமா..?
சாதித்தது சீனா, மிரட்சியில் சூப்பர் பவர் நாடுகள்..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications