சனி கிரக நிலவில் வசிக்கும் ஏலியன்கள்: கண்டறிந்த நாசா .!
சனி கிரக நிலவிஏலியன்கள் வாழ்கை நடத்த ஏற்ற கால நிலைகள் அங்கு இருக்கின்றன. இதனால் ஏலியன் சனி கிரகத்தில் தங்களது ராஜ்ஜியத்தை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றனர் என்று சர்வதேச விஞ்ஞானிகள் குழுவும் உறுதி செ
சனி கிரக நிலவிஏலியன்கள் வாழ்கை நடத்த ஏற்ற கால நிலைகள் அங்கு இருக்கின்றன. இதனால் ஏலியன் சனி கிரகத்தில் தங்களது ராஜ்ஜியத்தை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றனர் என்று சர்வதேச விஞ்ஞானிகள் குழுவும் உறுதி செய்துள்ளது.

சனி கிரகத்தில் பனி சூழ்ந்த பகுதியாகவும் இருப்பதால் ஏலியன்கள் வாழ்கை நடத்த இது ஏதுவாக அமைந்துள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

சனி கிரகம்:
சனி (Saturn) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சனி கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன.
சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும்.
வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும். இதன் சராசரி ஆரம் புவியினுடையதை விட ஒன்பது மடங்காகும். புவியின் அடர்த்தியில் எட்டில் ஒருபங்கே இருந்தபோதும் தனது பெரிய அளவினால் புவியை விட 95 மடங்கு நிறையுடையதாக உள்ளது.

வரலாறு:
1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார். அதைபார்த்து கலிலியோ வளையங்களை ஒன்றை மற்றொரு தொட்ட மூன்று தனித்தனி கிரகங்கள் என்று நினைத்தார்.1655 ஆம் ஆண்டில், கிறிஸ்டியன் ஹிகென்ஸ் சனியை சுற்றிய வளையங்களை கண்டறிந்த முதல் அதிகாரபூர்வ நபராவார். கலிலி காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், அவர் சனி "எங்கும் தொட்டு, ஒரு மெல்லிய, தட்டையான,வளையத்தால் சூழப்பட்டுள்ளது என கண்டறிந்தார்.

தண்ணீர்:
சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில ஜெர்மனியைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் பால் ஹார்டாக் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சனி கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர்.

நிலவுகள்:
சனி கிரகத்தை சுற்றி பல சந்திரன்கள் உள்ளன. அவற்றில் அக்கிரகத்தின் மேல் பகுதியில் ஆறாவது மிகப்பெரிய சந்திரன் உள்ளது. அது முழுவதும் ஐஸ் கட்டினால் மூடப்பட்டுள்ளது. இதனால் சனிகிரகத்தில் மழை பெய்து அதன் மூலம் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அங்கு ஆவி நிலையில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்துள்ளது.

வாய்ப்பு அதிகம்:
இவை சனி கிரகத்தை சுற்றி வட்டவடிவில் உள்ளது. இது அந்த கிரகத்தின் சுற்றளவை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. இதனால் இங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரஜன் பட்டைகள்:
சனியின் வளிமண்டலத்தின் வெளி பகுதியில் 3% ஹீலியம், 0.4% மீத்தேன் மற்றும் 0.01% அம்மோனியா, மற்றும் 96% ஹைட்ரஜன் கொண்டது. மற்றும் அசிடிலின்,ஈதேன் மற்றும் பாஸ்பீன் மிக சிறிய அளவில் உள்ளன.
சனியின் மேகங்கள் வியாழன் காணப்படும் மேகப்பட்டைகள் போன்ற, ஒரு பட்டை முறையில் பூமத்தியரேகையில் பரந்துள்ளன. சனி குறைந்த மேக அடுக்கு நீர் பனி சேர்ந்து 10 கிமீ (6 மைல்) தடித்தது. இங்கு வெப்பநிலை மிகவும் குறைவாக உள்ளது.மேல் அடுக்கு, 77 கிமீ (48 மைல்) தடித்த, அம்மோனியம் ஹைட்ரோ சல்பைடு பனியால் உருவாக்கப்பட்டது.அதற்கு மேலே உயர்ந்த அடுக்கு ஹைட்ரஜனால் உருவாக்கப்பட்டது.

வேற்று கிரக வாசிகள் வாழும் சூழ்நிலை:
சனி கிரகத்தில் பனி சூழ்ந்த சந்திரன்கள் கிரகங்கள் இருப்பதால், அங்கு ஏலியன்கள் வாழும் சூழ்நிலை இருக்கின்றது. மேலும், சிலிக்கான தூசி துகள்களும் காணப்படுகின்றது. மேலும், அவர்கள் வாழ தேவையான நீர் நிலைகளும் சனிக் கிரகத்தை ஒட்டி அமைந்துள்ளது என்று சர்வதேச விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தொல் பொருள் ஆய்வு:
மெத்தனோத்ததோர்மோகோகஸ் ஒக்கன்கென்சியி எனப்படும் தொல்பொருள் ஆய்வு மூலம் வேற்று கிரக வாசிகள் வாழும் சூழலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
என்சிலாடஸில் மீத்தேன் இருப்பதையும் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான உருவாகி இருப்பதையும் செயற்கைகோள் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
என்சிலாடஸின் ப்ளூமில் காணப்படும் சிஎச் 4 (மீத்தேன்) மெத்தனோஜன்கள் உற்பத்தி செய்யப்படலாம் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

ஏலியன்கள் வாழ்கை:
சனி கிரகத்தில் ஏலியன்கள் வாழ்வதற்கான தக்க சூழ்நிலை இருக்கின்றது என்று விஞ்ஞானி எம். ஓகினாவென்ஸிலிருந்து வெளிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாசா காசினி விண்கலம்:
நாசா காசினி விண்கலம் சனி கிரகத்தின் உள்ள நிலாவில் பார்மால் டிஹைடின் இருப்பதை கண்டறிந்துள்ளது. ஏலியன் வாழ்வதற்கான அனைத்து சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சனியின் நிலவில் ஏலியன்கள்:
சனியின் நிலவில் ஏலியன்கள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன என்று நாசா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும் இதுகுறித்து செயற்கைகோள் புகைப்படங்களை கொண்டும் ஆராய்ச்சி செய்தும் அவர்கள் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








