பொருளாதார தடை உத்தரவு: அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்த மோடியின் ராஜ தந்திரம்.!
இந்நிலையில், இதை மீறியும் இந்தியா- ரஷ்யா இடையே எஸ்-400 ஏவுகணை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து இந்தியா மீது பொருளாதார தடை உத்தரவு விதிக்கவும் அமெரிக்கா தயாரானது.
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்தது. ரஷ்யாவிடம் அணு ஆயுதங்களை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில், இதை மீறியும் இந்தியா- ரஷ்யா இடையே எஸ்-400 ஏவுகணை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து இந்தியா மீது பொருளாதார தடை உத்தரவு விதிக்கவும் அமெரிக்கா தயாரானது.
தற்போது மோடியின் ராஜதந்திரத்தால், இந்த தடை உத்தரவுக்கும் தடை ஏற்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தான் நிலை:
பாகிஸ்தானிடம் 20 அதிநவீன போர் விமானங்களும், எப்-16எஸ், ஜே ஜே 17 போர் விமானங்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், சீனாவிடம் 1,700 போர் விமானங்களும் இருக்கின்றன. 4ம் தலைமுறைக்கான 800 போர் விமானங்களும் இருக்கின்றன. அத்துமீறும் சீனா- பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதங்களையும் முறியடிக்கவே இந்தியா எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இந்தியா முன்வந்தது.

எஸ்-400 ஏவுகணை:
ரஷ்யாவிடம் இந்தியா ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் ( 5.43 பில்லியின் டாலர்) 5 ஏவுகணைகளை வாங்க முன் வந்துள்ளது. எஸ் 400 டிரையம்ப் வகையைச் சேர்ந்த ஏவுகணைகள் நடமாடும் ஊர்தியிருந்து புறப்பட்டு வானில் பறக்கும் விமானத்தையோ தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. போர்க் காலங்களில் நாட்டில் உள்ள முதன்மையாக நகரங்களையும் அணு ஆயுத அமைப்புகளையும், எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகளுக்குச் சிக்காமல் தாக்காமல் காக்க முடியும்.
மேலும் ஓரே ரேத்தில் 90 இடங்களில் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டுள்ளது. மேலும், இந்த ஏவுகணை 4 வகையில் இலக்கைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை:
ரஷ்யாவிடம் அணு ஆயுதங்கள் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இதைப் பொருட்படுத்தாமல் இந்தியாவில் நடந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் உடன் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 19வது உச்சி மாநாடும் கலைக்கட்டியது.
இதை அமெரிக்கா உடனடியாக எச்சரிக்கை விடுத்தது. மேலும், இந்தியா மீது பொருளாதார தடை உத்தரவுக்கும் நடவடிக்கை எடுத்தது.

சீனாவைக் காரணம் காட்டினர்:
இந்தப் பொருளாதார தடை உத்தரவு அதிபர் டிரம்புக்கு மட்டும் இருப்பதால், உடனடியாக மற்றொருபுறம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கும், அதிபர் டிரம்புக்கும் சீனாவை சுட்டி காட்டி விளக்கமும் கொடுக்கப்பட்டது.
மேலும், மோடி அமெரிக்கா இந்தியா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கத் தனது ராஜதந்திரத்தையும் கையில் எடுத்தார். அதனால் தான் இந்தியா மீது அமெரிக்காவால் இன்று வரை பொருளாதா தடை உத்தரவையும் விதிக்க முடியவில்லை.

சீனாவைச் சமாளிக்கவும், தடைக்கும் அல்வா:
இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவை எதிர்கொள்வதற்கு இத்தகையை நவீன ஆயுதங்கள், வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர் இந்திய கடற்படைக்கு தேவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 24 எம்ஹெச் 60 ரோமியோ நவீன ஹெலிகாப்டரை உடனடியாக வழங்குமாறு கேட்டு இந்தியா தரப்பில் இருந்து அமெரிக்காவிற்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

24 ரோமியோ ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா:
அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

மோடியின் அல்வா பிளான்:
பொருளாதாரத் தடை உத்தரவு இந்தியா மீது நேரடியாக விதிக்கப்படாமல் இருந்தாலும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க அமெரிக்காவுடன் இந்தியா இந்த எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிப்காப்படரை வாங்குகின்றது. ரஷ்யாவிடம் 40 ஆயிரம் கோடியில் வாங்கி ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் அதிகமாக இருந்தாலும், அதை விடக் குறைவாக 13 ஆயிரம் கோடியில் 24 ரோமியோ ஹெலிகாப்படர்களை வாங்குகின்றது.

சுந்தரி அக்கா பேரை சொல்லி தடை உடை:
இது அமெரிக்காவின் தடை உத்தரவுக்கும் அல்லா கொடுப்பது போல் இருக்கின்றது. சீனா ஆனா சுந்தரி அக்கா பேரை சொல்லி, பொருளாதாரத் தடையை உடைத்தார் மோடி.


Click it and Unblock the Notifications