மனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.!
இருந்தாலும் அவனுக்கு காம இச்சைக்கள் இருந்தாலும், நம்பிக்கை இல்லாமலும், போதிய சுகம் கிடைக்காமலும் ரோபோக்களுடன் பாலியல் உறவு கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் மனித-மனித இணை சேர்க்கை இல்லாததால் மனித
மனித குலத்திற்கு ஆக்க பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது ரோபோக்கள். எத்தனையோ நல்ல விஷயங்களுக்கு ரோபோக்கள் பயன்பட்டாலும், இன்று டெக்னாலஜி பாலியலுக்கு வந்தது தான் பெரும் அச்சமாக மாறியுள்ளது.

முன்பு எல்லாம் மனிதன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தான். நவீன காலத்தால் பொருளாதாரம் என்னும் பேய் கிட்ட மாட்டிக் கொண்டதால், குடும்பத்தையும் தாண்டி இன்று மனிதன் தனியாக வாழத் துவங்கி விட்டான்.
இருந்தாலும் அவனுக்கு காம இச்சைக்கள் இருந்தாலும், நம்பிக்கை இல்லாமலும், போதிய சுகம் கிடைக்காமலும் ரோபோக்களுடன் பாலியல் உறவு கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் மனித-மனித இணை சேர்க்கை இல்லாததால் மனித குலம் அழிவு பாதையை நோக்கி கொண்டிருக்கின்றது.

உலக மக்கள் தொகை:
ஐக்கிய நாடுகள் சபையின் 2017ம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகில் மக்கள் தொகை 760 கோடியாகும். உலகில் சமீபத்தில் புள்ளிவிவரங்களின்படி 70.1 சதவீதம் மக்கள் வெறும் 20 நாடுகளின்தான் இருக்கின்றனர்.
சீனாவில் 18.5 சதவீதமும், இந்தியாவில் 17.9 சதவீதமும், அமெரிக்காவில் 4.3 சதவீதமும், ரஷ்யாவில் 1.9 சதவீதம் தாய்லாந்தின் மக்கள் தொகை 0.9 சதவீதம் அதனால் எஞ்சியுள்ள 213 நாடுகளில் உள்ள மக்கள் தொகை 29.8 சதவீதம் தான்.

ரோபோட்கள்:
இன்று ரோபோட்கள் இன்று அனைத்துறைகளிலும் பெருகி விட்டன. இது மனித குலத்திற்கு ஆகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. மருத்துவம், வாகனம், கட்டமைப்பு, தொழிற்சாலைகள், உணவு மற்றும் பரிமாறுதல் உள்ளிட்ட துறைகளிலும் இருந்தன.
ஆனால் இன்று ஏஐ ( ஆர்டிபிசியல் இன்டலிஜென்ட்) ரோபோக்கள் அதிகளவில் நுழைந்துள்ளன. மேலும், இவைகளால் மனிதனின் தேவைகளை நன்கு உணர்ந்தும் உதவ முடியும்.

விருப்பமற்ற மனித குலம்:
இன்று மனிதன் தனியாக வாழ துவங்கி விட்டதால், தன்னை அன்போடும் அரவணைப்பு பார்த்துக் கொள்ள ஆணுக்கு பெண்ணோ, பெண்ணுக்கு ஆனோ தேவைப்படுகின்றனர்.
ஆண்-பெண் புரிந்துணர்வு கெட்டதால், நம்பிக்கை இழந்து தனிமையில் வாழ துவங்கியுள்ளனர். இதனால் அவர்களுக்கு செக்ஸ் பொம்மைகளும், ரோபோட்களும் தேவைப்படுகின்றது.

வாழ்கையில் ரோபோட்கள்:
ஜப்பான், ஸ்பெயின், ஸ்காட்லாந்த், ஸ்பெயின், பிரான்ஸ், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் செக்ஸ் ரோபோட்கள் மற்றும் ரோபோட்களுடன் மனிதன் வாழத் துவங்கி விட்டான்.

ஏஐ தொழில் நுட்பத்தில் செக்ஸ் ரோபோ:
தற்போது ஏஐ தொழில் நுட்பத்தில் செக்ஸ் ரோபோக்கள் இருப்பதால் ஆணுக்கு சுகம் வேண்டும் என்றால், பெண் தோற்றமுள்ள ரோபேக்களுடன் உறவு கொள்கின்றான்.
பெண்ணுக்கு சுகம் வேண்டும் என்றால் ஆண் தோற்றத்தில் இருக்கின்ற ரோபோக்கள் உடன் உறவும் கொள்கின்றனர். இவ்வாறு ஏஐ ரோபோட்கள் உடல் நீண்ட நேரம் உறவும் கொள்கின்றனர். அப்படியே உறவும் கொண்டால் மனிதனை கொண்டதை போல ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ், ஸ்பெயின்:
ஸ்பெயின் பார்சிலோனோவில் கடந்த 2017ல் செக்ஸ் பொம்மைகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது விபச்சாரத்திலும், ஆண், பெண் ஏஐ ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. அதில், ஆண்ணை போல கட்டுமஸ்தான ரோபோக்களும், பெண்ணை போல கட்டழகு ரோபோக்களும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு மணி நேரத்திற்கு 120 யூரோ (ரூ.9,000) சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
இதபோல பிரான்ஸ்சிலும் ரோபோக்கள் ஒரு சில இடங்களில் காணப்படுகின்றது.

ஜெர்மனி:
கடந்த 2017ம் ஆண்டு ஜெர்மனியில் 29 வயதான எலெலின் ஸ்க்வார்ஸால் நடத்தப்பட்டது. இதில் செக்ஸ் பொம்மைகள் முதலில் பயன்படுத்தப்பட்டன.
தற்போது ஒரு சில இடங்களில் செக்ஸ் ரோபோக்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு € 80 (ரூ.6,400) வசூலிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து:
இங்கிலாந்தில், 40 வயதான கிரஹாம் என்பவர் முதலில் பொம்மைகளை விபச்சாரத்திற்கு பயன்படுத்தினார். தற்போது அங்கும் பல்வேறு இடங்களிலும் ரோபோட்கள் வரத் துவங்கி விட்டன. ரோபோட் மற்றும் பொம்மைகளுடன் 70 சதவீதம் பேர் வாழத் துவங்கி விட்டனர்.
சேவை கட்டணமாக £100 to £ 2000 ( ரூ. 9000 முதல் 1,80,000 வரை) வசூலிக்கப்படுகின்றது.

ஸ்காட்லாந்து:
ஸ்காட்லாந்த் லாங்கார்ஷயர் குவாட்டர் கிராமத்தில் 25 வயதான ஸ்டீவன் க்ரா போர்ட் என்பவர் முதலில் விபச்சாரத்திற்கு பொம்மையை பயன்படுத்த துவங்கினார். இந்த நாட்டில் ஏராளமான பொமைகளும் ஒரு சில இடங்களில் ஒரு பாலினர்களுக்கும் ரோபோட்களும் செக்ஸ் உறவுக்காக பயன்படுத்த துவங்கி விட்டனர்.

ஜப்பான்:
ஜப்பான் என்றாலே ரோபோட்களும், விபச்சாரமும், ஆபாச வலைதளங்களுக்கு பெயர் போனது. தற்போது இந்த நாட்டில் பலரும் திருமணம் செய்யாமலும், செய்தாலும் உறவு கொள்ளாமலும் வாழ்கின்றனர்.
ஒரு சிலர் ரோபோட்களுடன் திருமணம் செய்து கொண்டு அதனுடன் உறவு வைத்துக் கொண்டு வாழ்கின்றனர். ரோபோட்களை வைத்துக் கொண்டு விபச்சாரமும் நடக்கின்றது.

அழியும் மக்கள் தொகை:
மனித குலம் வாழ வேண்டும் என்றால் மனிதனை திருமணம் செய்து, இல்லறம் நடத்தினால் தான் வாழ முடியும். ரோபோட்களுடன் திருமணம் செய்து இச்சையை தீர்த்துக் கொண்டால், சுகம் மட்டுமே கிடைக்கும். ஆனால் மனித பிறப்பு தடை படும். உலக மக்கள் தொகையும் வீழ்ச்சியடையும். மனித இனமும் இப்படி சென்றால் நாளைடைவில் அழிந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications