Home
Scitech

உலக பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு புதிய தீர்வு இந்திய மாம்பழங்கள் தான்! புதிய ஆராய்ச்சியாளர் ரிப்போர்ட்!

உலகில் உள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டிற்குத் தீர்வாக இந்தியாவில் விளையும் மாம்பழங்கள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளார். இந்த ஆராய்ச்சியாளர் மாம்பழ தோலிலிருந்து பயோபிளாஸ்டிக் பொருளைத் தயாரித்துள்ளார். மேலும் இது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்குத் தீர்வாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் குப்பைகளைச் சமாளிக்க முக்கிய தீர்வு

பிளாஸ்டிக் குப்பைகளைச் சமாளிக்க முக்கிய தீர்வு

நமது பெருங்கடல்களில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைச் அகற்றுவதற்கும், சமாளிப்பதற்கும் பல்வேறு வழிகளைப் பல நாடுகளில் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இந்த சிக்கலிற்கான முக்கிய தீர்வு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதிலேயே உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள்

பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள்

இதைச் சரி செய்வதற்கான சிறந்த வழி, பிளாஸ்டிக்குகளுக்குப் பதிலாக நாம் பயன்படுத்தக்கூடிய மாற்று பொருட்களை உருவாக்குவது தான். நாம் உருவாக்கும் இந்த புதிய பொருள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருளாக இருக்க வேண்டும், அதுவும் இந்த பொருட்கள் இயற்கைக்கு ஆபத்து விளைவிக்காத பொருட்களாக இருக்க வேண்டியது அவசியம்.

 டென்சிபல் மாண்டினோலா

டென்சிபல் மாண்டினோலா

சான் கார்லோஸ் பல்கலைக்கழகத்தின், 23 வயது பட்டதாரியான டென்சிபல் மாண்டினோலா பயோபிளாஸ்டிக் துறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார். இந்த ஆராய்ச்சியாளர் தான் தற்பொழுது இருக்கும் பிளாஸ்டிக்கிற்கு தீர்வாக இயற்கைக்கு ஏற்ற மற்றும் தண்ணீரில் கரையக் கூடிய பியோபிளாஸ்டிக் பொருளைக் கண்டுபிடித்துள்ளார்.

இயற்கை முறையில் பயோபிளாஸ்டிக்

இயற்கை முறையில் பயோபிளாஸ்டிக்

மலிவு விலையில் கிடைக்கும் கரிம கழிவுகளிலிருந்து பயோபிளாஸ்டிக் உருவாக்க டென்சிபல் மாண்டினோலா முடிகிறது செய்திருக்கிறார். கடல் பாசி மற்றும் மாம்பழ தோலைச் சேர்த்து புதிய பயோபிளாஸ்டிக் பொருளை இயற்கை முறையில் ஆபத்தான இரசாயனம் எதுவும் இல்லாமல் உருவாக்கியுள்ளார்.

எளிதாய் கரைந்துவிடும் பயோபிளாஸ்டிக்

எளிதாய் கரைந்துவிடும் பயோபிளாஸ்டிக்

இவர் உருவாகியுள்ள பயோபிளாஸ்டிக், பிளாட்டிக்கிற்கு நிகரான பொருளாக மிகவும் வலுவாகவும், நெகிழ்வாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவர் உருவாகியுள்ள பயோபிளாஸ்டிக்கின் சிறப்பே, இவை இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனங்கள் எதுவும் இல்லாமல் எளிதாய் கரைந்துவிடும் என்பது தான்.

பிளாஸ்டிக் மாசுபாட்டை இந்தியா ஒழிக்கும்

பிளாஸ்டிக் மாசுபாட்டை இந்தியா ஒழிக்கும்

உலகிலேயே அதிக மாம்பழம் உற்பத்தி செய்வது யார் தெரியுமா? உலகின் மொத்த மாம்பழங்களில் பாதியை இந்தியா தான் உற்பத்தி செய்கிறது. உலக நாடுகள் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்க சீறப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது, இந்த பிரச்சனைக்குத் தீர்வாக இந்தியாவில் விளையும் மாம்பழ தோள்கள் இருக்கப்போகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Researcher Made Bioplastic From Mango Peels That Could Save Planet Earth From Plastic Pollution : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X