தொல்லியல் அறிஞர்களை குழப்பத்தில் ஆழ்த்திய 1000ஆண்டு பழமையான எலும்புக்கூடு!
1928 ஆம் ஆண்டில் ப்ராக் கோட்டைக்குள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடைக்காலத்தைச் சேர்ந்த ஒரு எலும்புக்கூடு, பின்னர் பயங்கரமான நாஜி பிரச்சாரமாக பயன்படுத்தப்பட்டாலும், தொடர்ந்து விஞ்ஞானிகளை குழப்பிவருகிறது.

10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் ஒருவன், ஒரு வாள் மற்றும் இரண்டு கத்திகளுடன் புதைக்கப்பட்டது நீண்ட காலமாக கல்வியாளர்கள் மத்தியில் உச்சபட்ச விவாதத்தின் மைய புள்ளியாக இருந்துவருகிறது.
யார் அந்த நபர், எதற்காக இவ்வாறு புதைக்கப்பட்டார் என்பது பற்றி வல்லுநர்களிடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இதன் மூலம் இந்த கோட்டை ஜெர்மனிக்கு சொந்தமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஹிட்லரின் அரசாங்கம் கூறியது.

எலும்புக்கூடு பின்னர் மற்றொருமொரு விசித்திரமான தோற்றத்தை பயன்படுத்தி, சோவியத்-ஐ சேர்ந்தவர்களும் நாஜிக்களின் அதே தந்திரத்தை பயன்படுத்தி இந்த பகுதி சோவியத்திற்கு சொந்தமானது உரிமை கொண்டாடினர்.
சமீபத்திய ஆய்வுகளின் படி அவர் அண்டை பிராந்தியத்தில் இருந்து வந்த ஸ்லேவிக் மொழி பேசுபவராக இருக்கலாம் எனவும், மேலும் பழங்கால நோர்ஸ் மற்றும் ஸ்லாவோனிக் மொழிகளில் சிறந்து விளங்கியிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

ஏன்டிக்விடி ஜேர்னலில் வெளியிடப்பட்ட இந்த புதிய ஆய்வு, முந்தைய அனைத்து பகுப்பாய்வுகளையும் கோட்பாடுகளையும் ஆராய்ந்து ஒரு முடிவை எட்ட முயற்சித்தது. இருப்பினும் இந்த இருண்ட படத்திற்கு எந்த தெளிவையும் கொண்டு வர இதன் ஆராய்ச்சியாளர்கள் தவறிவிட்டனர் .
இந்த எலும்புகளின் தோற்றத்தை திட்டவட்டமாக ஆராய்ச்சியாளர்களால் முடிவு செய்ய முடியவில்லை. ஆனால் சாத்தியமான விளக்கங்களுக்கு சில தெளிவான முடிவுகளை வழங்க முடிந்தது.
அவர்கள் இதுகுறித்து எழுதும்போது: 'இந்த பொருட்களின் கலாச்சாரம் என்பது வாள், கோடாரி மற்றும்' ஃபயர் ஸ்ட்ரைக்கர் '(வைகிங் கருவிகளின் பொதுவான பகுதி) வெளிநாட்டு (அதாவது செக் அல்லாத) பொருட்கள் மற்றும் வாளி மற்றும் கத்திகள்போன்ற உள்நாட்டு பொருட்களின் கலவையாகும்' என்கின்றனர்

ப்ராக் கோட்டையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட 1,500 ஆரம்பகால இடைக்கால கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே வாள் இது என்பதால், குறிப்பாக இந்த வாள் மிகவும் தனித்துவமானது என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
சமீபத்திய ஆய்வுகளின் படி அவர் அண்டை பிராந்தியத்தில் இருந்து வந்த ஸ்லேவிக் மொழி பேசுபவராக இருக்கலாம் எனவும், மேலும் பழங்கால நோர்ஸ் மற்றும் ஸ்லாவோனிக் மொழிகளில் சிறந்து விளங்கியிருக்க சாத்தியமுள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
11 ஜூலை 1928 இல், ப்ராக் கோட்டையின் முற்றத்தின் கீழ் ஒரு ஆணின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

முதன்முறையாக எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட கோட்டையின் ஆரம்ப கட்டங்களை ஆய்வு செய்யும் நோக்கில் தேசிய அருங்காட்சியகம் தலைமையில் அப்பகுதியை அகழ்வாராய்ச்சி செய்யும் திட்டம் துவங்கியது.
இந்த இடம் ஒரு பழைய புதைகுழியின் விளிம்பில் அமைந்திருந்தது மற்றும் அந்த இடத்தில் இருந்து ஒரு மலை கோட்டை கட்டப்பட்டுள்ளது. இது கி.பி 800-950 / 1000 காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம்.
அதில் எஞ்சியிருந்த கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வாள் உட்பட பல ஆயுதங்கள் அங்கு இருந்தன.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் போராடிய உக்ரேனியரான இவான் போர்கோவ்ஸ்கே இதைக் கண்டுபிடித்தார்.

1939 இல் நாஜி வீரர்கள் செக்கோஸ்லோவாக்கியா மீது படையெடுத்தனர் மற்றும் இதை கண்டுபிடித்தவர் ஒரு ஊழலில் சிக்கியதுடன், எலும்புக்கூட்டின் உண்மையான அடையாளத்தை மறைக்க சதி செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நாஜிக்கள் இந்த எச்சங்கள் ஜெர்மானிய அல்லது வைக்கிங்-ஐ சேர்ந்தவை எனவும், ஆனால் நிச்சயமாக ஸ்லாவிக் அல்ல எனவும் வாதிட்டனர்.
ஜெர்மன் பாரம்பரியம் எல்லையில்லாமல் பரந்து விரிந்த ஒன்று என்ற தங்கள் கூற்றை ஒரு உண்மையான விஷயம் என்ற நம்பகத்தன்மையைச் சேர்க்க நாஜிக்கள் இந்த ஆதாரமற்ற சித்தாந்தத்தை முன்வைத்தனர்.
இந்த அறியப்படாத எச்சங்கள் ஒரு பெரிய சொல்லாட்சியின் ஒரு பகுதியாக மாறியதுடன் ஒரு தேசிய அடையாளமான ப்ராக் கோட்டை ஜெர்மனியைச் சேர்ந்தது என்று கூறப்பட்டது.
போர்கோவ்ஸ்கே தனது பகுப்பாய்வை வெளியிட முயற்சித்ததாக கருதப்படுகிறது. ஆனால் அவர் அவ்வாறு செய்தால் வதை முகாமில் சிறையில் அடைக்கப்படுவார் என்று அச்சுறுத்தப்பட்டார்.

செக்கோஸ்லோவாக்கியா சோவியத்துகளால் ஆக்கிரமிக்கப்பட்டபோது, 1945 ஆம் ஆண்டில் இந்த கண்டுபிடிப்பாளரின் கதை எலும்புக்கூட்டின் கதையைப் போலவே அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


Click it and Unblock the Notifications