அதிசக்திவாய்ந்த துகள் முடுக்கியை கட்டமைக்க விரும்பும் இயற்பியலாளர்கள்!
தற்போதுள்ள நிலையான அமைப்பு பிரபஞ்சத்தையும் அதன் உள்ளார்ந்த செயல்பாடுகளையும் விளக்கியிருந்தால் அதுவே போதுமானதாக இருந்திருக்கும்.
இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியுள்ள துகள்கள் நமக்கு தெரியாத, நம்மால் புரிந்துகொள்ள முடியாத விதிகளால் வழிநடத்தப்படுகின்றன.
ஆனால் துகள் முடுக்கிகள்(particle accelerators) எனும் மிகப்பெரிய இயந்திரங்களை பயன்படுத்தி ஒளியின் வேகத்தில், நமக்கு தெரிந்த துகள்களை ஒன்றோடு ஒன்று மோதவிடுவதன் மூலம், இயற்பியலாளர்களால் சிலநேரங்களில் கண்ணுக்கு தெரியாதவற்றை காணமுடியும்.

தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிசக்திவாய்ந்த துகள்முடுக்கிய உருவாக்க திட்டமிடுகின்றனர். சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் (CERN) உள்ள 'லார்ஜ் ஹாட்ரன் கோலிடர்' என அழைக்கப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவுள்ள தற்போதையை மிகப்பெரிய துகள்முடுக்கியை காட்டிலும் 4 மடங்கு பெரியதாக இந்த புதியதை வடிவமைத்துள்ளனர்.
இந்த 'லார்ஜ் ஹாட்ரன் கோலிடர்' எளிதில் பிடிபடாத ஹிக்ஸ் போசன்-ஐ கண்டறிந்து பெயர்பெற்றது.எப்படி துகள்கள் தங்களது நிறையை பெறுகின்றன என்பதை விளக்கும் இந்த ஹிக்ஸ் போசன், நிலையான அமைப்பு(எப்படி விசை மற்றும் துகள்கள் பிரபஞ்சத்தில் இணைகின்றன என்பதற்கான தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட துகள்-இயற்பியல் வழிகாட்டி) மூலம் ஒரு எல்லைக்கு மேல் கண்டறிய இயலாத துகள்களையும் கண்டறிந்துள்ளது.
தற்போதுள்ள நிலையான அமைப்பு பிரபஞ்சத்தையும் அதன் உள்ளார்ந்த செயல்பாடுகளையும் விளக்கியிருந்தால் அதுவே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் அதனால் அவ்வளவு சிறப்பாக செயல்பட முடியவில்லை. எடுத்துக்காட்டாக, கண்ணுக்கு தெரியாத விசை ஈர்ப்புவிசையை நோக்கி செலுத்தும் இருண்ட துகள்களை கணக்கில் கொள்ளாது.
எனவே மிகப்பெரிய அதிசக்திவாய்ந்த இயந்திரம், எப்படி இந்த இருண்ட துகள்கள் உருவாகின, ஏன் பிரபஞ்சமானது விசித்தர எதிர்துகள்களை காட்டிலும் அதிக துகள்களால் உருவாக்கப்பட்டது என்பதற்காக விளக்கம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
"ப்யூட்சர் சர்குலர் கொலீடர்"(Future Circular collider) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய துகள் முடக்கி 80 முதல் 100 கிலோமீட்டர் நீளமுடையதாக இருக்கும் எனவும், இதன்மூலம் துகள்கள் வேகமெடுக்கவும், ஆற்றலை பெறவும் அதிக தொலைவு கிடைக்கும் என 150 பல்கலைகழகங்களை சேர்ந்த 1300 ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உருவாக்கிய வடிவமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக இந்த எப்சிசி இயந்திரம் கட்டமைக்கப்படும். எப்சிசி முதல் இயந்திரம் எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான்களை மோதவிடும். இரண்டாவது ப்ரோடான்கள் மற்ற ப்ரோடான்களுடன் மோதவிடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டு முயற்சிக்கப்பட்டால், இயந்திரத்தை வடிவமைத்து, கட்டமைத்து பரிசோதிக்க 20 ஆண்டுகள் ஆகும். இந்த இரு இயந்திரங்கள் மற்றும் சுரங்கத்திற்காக 27பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications