இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவிடம் அணு ஆயுதம் வாங்கும் பாகிஸ்தான்.!
இந்தியா ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரக் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களையும், பாகிஸ்தான் ராணுவ முகாமையும் தாக்கி அழித்துள்ளது. இந்தியா நடத்திய தாக்குதல்களால் பாகிஸ்தான் நிலை குலைந்துள்ளது.
இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் புலி வாலை பிடித்து பேன் பார்க்க, காக்கா பிடிக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளது. இப்போது பாகிஸ்தான் சீனாவையும் தாண்டி அணு ஆயுதங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியா ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரக் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களையும், பாகிஸ்தான் ராணுவ முகாமையும் தாக்கி அழித்துள்ளது. இந்தியா நடத்திய தாக்குதல்களால் பாகிஸ்தான் நிலை குலைந்துள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷ்யாவிடம் இருந்து ஜிபிஎஸ் பொருத்திய 600 பீரங்கி டாங்கிகளை பாகிஸ்தான் வாங்குகின்றது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்:
பதான்கோட் விமானபடைதளத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிர வாதிகள் முகாம் பாகிஸ்தானில் எல்லைகளில் பதுங்கி இருந்தன. இதை அழிக்க இந்தியா ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்கே ஊடுருவி தாக்குதல் நடத்திய தீவிர வாதிகள் முகாமை அழித்தது.

தாக்குதல்களில் தோல்வி:
இந்தியா ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பல்வேறு நேரங்களிலும் தோல்லியை சந்தித்தது. இந்தியா ராணுவத்தை எதிர்த்து அடிக்க முடியாமலும், நவீன ஆயுதங்கள் இல்லாமலும் தள்ளாடியது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை:
இந்தியா சீனா, பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல்கள் மற்றும் டிரோன், ஏவுகணை உள்ளிட்டவைகளை எதிர் நாட்டு எல்லையிலே தாக்கி அழித்து விடும் எஸ்-400 ஏவுகணை, போர் விமனாம் உள்ளிட்டவைகளை 380 கி.மீ அப்பால் தாக்கி அழித்து விடும்.

ஓரே நேரத்தில் 90 இடங்களில் தாக்குதல்:
எஸ்-400 ஏவுகணை ஓரே நேரத்தில் 90 இடங்கில் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டுள்ளது. 4 விதங்களில் எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. ரூ.45 ஆயிரம் கோடியில் 5 நடமாடும் ஏவுகணைகளை வாங்குகின்றது.

கிரிக்கோவிச் போர் கப்பல்:
மேலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா 4 கிரிக்கோவிச் போர் கப்பல்களை வாங்குகின்றது. மேலும், இது இந்திய ஆழ்கடல் பகுதியிலும் தாக்குதல் நடத்த முடியும்.
ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் அமெரிக்காவுக்கும் சவால் விடும் வகையில் இருக்கின்றது. இதில் பல்வேறு தொழில் நுட்ப வசதிகளும் இருக்கின்றது.

தரமான அணு ஆயுதங்கள்:
ரஷ்யாவிடம் தரமான தொழில்நுட்பம் மற்றும் தாக்குதல் நடத்த ஏதுவான ஏராளமான அணு ஆயுதங்கள் இருக்கின்றன. தற்போது வரை சீனாவின் கண்டுபிடிப்பு உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றது பாகிஸ்தான். இந்நிலையில்,சீனாவையும் தாண்டி ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

எல்லையில் கண்காணிக்கும்:
பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வரும் 2025-ம் ஆண்டுக்குள் போர் ஆயுதங்களை மேம்படுத்தி எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த முடிவு செய்தது.

600 பீரங்கி:
இருகட்டமாக ரஷியாவிடம் இருந்து T-90 உள்ளிட்ட சுமார் 600 பீரங்கி டாங்கி வாகனங்களை வாங்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

எல்லையில் நிறுத்தப்படும்:
இந்த பீரங்கிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரமுள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. இவை ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தப்படலாம் என கருதப்படுகிறது.

இத்தாலில் இருந்து 120 துப்பாக்கி:
இத்தாலியில் இருந்து ‘எஸ்.பி. மைக்' ரகத்தை சேர்ந்த 245 அதிநவீன துப்பாக்கிகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளதாகவும் அவற்றில் 120 துப்பாக்கிகள் வந்து சேர்ந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தியா மீது தாக்குதல்:
இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் மிகவும் நட்புறவு நாடான ரஷ்யாவிடம் இருந்தே அணு ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகின்றது. ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் இந்தியா ராணுவத்திடம் இருப்பதால், புலி வாலை பிடித்து பாகிஸ்தான் பேன் பார்க்க ஆரம்வைத்து விட்டது.


Click it and Unblock the Notifications