மின்னலில் 1.3பில்லியன் வோல்ட் மின்சாரம் கண்டுபிடிப்பு: உலகை மிரட்டிய குளுகுளு ஊட்டி.!
இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த ராஜ்பவன் காஸ்மிக் கதிர் ஆய்வத்தின் நடத்திய ஆய்வில், 1.3 மில்லின் வோலட் மின்னழுத்தம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. மேலும், இதை எவ்வாறு இதை மின் பயன்பாட்டிற்கு கொண்டு வருது
மழை பெய்யும் முன்னரோ இல்லை, பெய்து கொண்டிருக்கும் போதே மின்னல் ஏற்படும். நமக்கு எல்லாம் தெரிந்தது தான். இதில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா என்பது பல்வேறு நாட்டினரும் ஆராய்ச்சி செய்து வந்தனர்.
இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த ராஜ்பவன் காஸ்மிக் கதிர் ஆய்வத்தின் நடத்திய ஆய்வில், 1.3 மில்லின் வோலட் மின்னழுத்தம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது.

மேலும், இதை எவ்வாறு இதை மின் பயன்பாட்டிற்கு கொண்டு வருது என்றும் சாத்திய கூறுககைள முன் வைத்துள்ளது.
எப்போதும் குளுகுளு என்று காணப்படும் ஊட்டி தற்போது உலகையே மிரட்ட புரட்டி போட்டுள்ளது.

நீலகிரி மலை மாவட்டம்:
நீலிகிரி மலை மாவட்டமாக இருக்கின்றது. சமவெளி பகுதிகளை காட்டிலும், இங்கு பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர்.

வான் மற்றும் வானிலை ஆராய்ச்சி மையம்:
இங்கு வானிலை மற்றும் வானியல் ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன.
ஊட்டி ராஜ்பவன் மாளிகை வளாகத்தை தலைமையாக கொண்டு மத்திய கஸ்மிக் கதிர் ஆய்வம் முத்தோரை பாலாடாவில் இயங்கி வருகின்றது.
இங்கு வானிலை மாற்றங்கள் குறித்தும் காஸ்மிக் கதிர்கள் குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

2014ல் மின்னலில் மின்சாரம் கண்டுபிடிப்பு:
கடந்த 2014ம் ஆண்டில் டிசம்பர் 1ம் தேதி பதிவான சக்தி வாய்ந்த மின்னலின் 1.3 மில்லியன் (ஜிவி) வோல்ட் மின்சாரம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பதிவினா 0.13 பில்லியன் வோட் மின்சாரத்தை விட 10 மடங்கு அதிமாக இருந்துள்ளது.

சர்வதேச ஆராய்ச்சி மையம் அங்கீகரிப்பு:
இந்த ஆராய்ச்சி குறித்து பல்வேறு நாட்டினர் முன்னெடுத்த போதிலும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதை சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் அங்கீகரித்துள்ளன.

இயற்கையின் அற்புத வெளிப்பாடு :
இதுகுறித்து ஊட்டி ராஜ்பவன் காஸ்மிக் கதிர் ஆய்வக தலைவர் மற்றும் பேராசிரியர் கே. குப்தா குறியதாவது: இடியும் மின்னலும் உண்டாக்கும் மேங்கள் இயற்கையின் அற்புதமான வெளிப்பாடாகும்.

மியுவான் தொலை நோக்கி:
ஊட்டி முத்தோரை பாலாடாவில் உள்ள ஆய்வக கிராப்ஸ் 3ல் உள்ள மியுவான் தொலைநோக்கியில் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவான மேகத்தில் உண்டான சக்திவாயந்த வாய்ந்த மின்னழுத்தின் அளவு 1.3 பில்லியன் வோல்ட் (ஜிவி) பதிவாகியுள்ளது.

முன்பை விட அதிகம்:
இதற்கு முந்தைய கால அளவான 0.13 விட 10 மடங்கு அதிகமாகும். இது மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக பதிவாகியுள்ளது.

சிடிஆர் வில்சன் கண்டுபிடிப்பு:
1927ம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சிடிஆர் வில்சன் மேகங்களில் ஏற்படும் மின்னழுத்தம் 1 பில்லியன் வோல்ட் (1ஜிவி) வரை உருவாகும் என்று கணித்துள்ளார்.

ஊட்டியில் வடிவமைக்கப்பட்ட தொலைநோக்கி:
இது கிராப்ஸ் 3 மியுவான் தொலைநோக்கி ஊட்டியில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி கல்வியகத்தின் காஸ்மிக் கதிர் ஆய்வகத்தினால் வடிவமைக்கப்பட்டது.

ஜப்பான் உதவி:
இந்த ஆய்வகம் இந்தியா மற்றும் ஜப்பானில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைகலங்களில் கூட்டு முயற்சியால் நடத்தப்படுகின்றது இவ்வாறு சுனில் கே. குப்தா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications