Just In
- 38 min ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 10 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 11 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 11 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
Don't Miss
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த பக்கமே வர கூடாது! அப்துல் கலாம் தீவில் நடந்த ஆயுத சோதனை.. சைலன்ட் ஆன சீனா!
டிஆர்டிஓ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் எதிரி நாட்டு போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நாடுவானில் இடைமறித்து தகர்க்கும் ஏடி-1 ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதற்காக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (டிஆர்டிஓ) பாதுகாப்ப அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏடி-1 ரக ஏவுகணை
அதாவது அதிநவீன ஏவுகணைகள் மற்றும் எதிரிநாட்டுப் போர் விமானங்களை நடுவானில் இடைமறித்துத் தகர்ப்பதற்காக ஏடி-1 ரக ஏவுகணையை டிஆர்டிஒ தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக டிஆர்டிஒ தயாரித்த ஏடி-1 ஏவுகணையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன கட்டுப்பாட்டுக் கருவிகள், நேவிகேஷன் உள்ளன. மேலும் இந்த ஏடி-1 ஏவுகணை வளிமண்டலத்தின் 100 கி.மீ உயரத்துக்கு கீழும், அதனைத் தாண்டியும் என இருவிதமாகப் பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Price Cut-னா இப்படி இருக்கணும்! இரவோடு இரவாக ரூ.10,000 விலை குறைந்த Samsung போன்!
ஏபிஜே அப்துல் காலம் தீவில்
அதேபோல் இது தொலைவில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் விமானங்களைத் துல்லியமாகத் தாக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதிநவீன ஏடி-1 ரக ஏவுகணை நேற்று ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள ஏபிஜே அப்துல் காலம் தீவில் சோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்த சோதனையில் ஏவுகணை செல்லும் பாதை சென்சார்கள், ரேடார்கள், டெலிமெட்ரி மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு நிலையங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. குறிப்பாக இலக்கை நோக்கி இந்த ஏவுகணை துல்லியமாகச் சென்றது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாடுகளில் மட்டுமே உள்ளது
மேலும் இந்த சோதனை வெற்றி பெற்ற பிறகு டிஆர்டிஓ அமைப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங். அதேபோல் இடைமறித்துத் தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் உலகளவில் ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்த பரிசோதனை நாட்டின் ஏவுகணை திறனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்று, நாட்டின் வலிமையை மேலும் வலுப்படுத்தும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
Silent ஆ இருங்க
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் சீனா இதுபோன்ற ஏவுகணைகளை வைத்து தான் கெத்து காட்டி வந்தது. ஆனால் சீனாவையே மிஞ்சும் அளவுக்கு இந்தியா உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் துல்லியமாகத் தாக்கும் இந்த ஏடி-1 ரக ஏவுகணையைப் பரிசோதித்து வெற்றிகண்டுள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இனிமேல் சீனா சைலன்ட் இருக்க வேண்டியது தான்.
விஸ்வரூபம் எடுக்கும் VI.. ரூ.401க்கு 200GB டேட்டா! பிரைம், ஹாட்ஸ்டார் இன்னும் பல! இப்போ வாங்க..
சந்திரயான் 3
அதேபோல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி, நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?
லேண்டர் ரோவர்
குறிப்பாக சந்திரயான்-2 திட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை, தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில், நிலவை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர்சோம்நாத் கூறினார்.
சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய இஸ்ரோ தலைவர், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் தயாராக உள்ளது. பின்பு இந்த சந்திரயான் 3 விண்கலம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சந்திரயான் 2 இல் ஏற்பட்டபிரச்சனைகள் இதில் இருக்காது எனவும், சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை கண்டிப்பாக முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஏற்கனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றவருவதால், இந்த முறை லேண்டர் ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார் இஸ்ரோ தலைவர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470