Home
Scitech

செவ்வாயில் களிமண் கணிமங்கள்: கண்டறிந்த நாசா கியூரியாசிட்டி விண்கலம்.!

நிலவு மற்றும் செவ்வாயில் மனிதர்களைத் தங்கவைப்பதற்கான பல புதிய திட்டங்களை நாசா மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

நாசா தொடரந்து செவ்வாய் கிரகத்தில் பல்Nவுறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது, இந்நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த மே 12-ம் தேதி, மவுண்ட் ஷார்ப் என்ற பகுதியில் அபர்லேடி கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் கியூரியாசிட்டி துளையிட்டுள்ளது.

செல்பீ படமாக

செல்பீ படமாக

பின்பு இதை செல்பீ படமாக எடுத்தும் கியூரியாசிட்டி அனுப்பியுள்ளது, அது துளையிட்ட இடங்கிளில் களிமண் கனிமங்கள் அதிக இருந்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயரிகளுக்கு ஆதாரமான நீர் இருக்கும் இடங்களிலேயே களிமண் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாயில் உயிரினங்கள்

அந்தவகையில் பல நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கக் கூடுமா என்பதைக் கண்டறிவதற்காக மவுண்ட் ஷார்ப் பகுதியில் கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள்

நிலவு மற்றும் செவ்வாயில் மனிதர்களைத் தங்கவைப்பதற்கான பல புதிய திட்டங்களை நாசா மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. உலக நாடுகள் பலவும் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறு மிகக் குறைவாக உள்ளதென்று விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்

15 புகைப்படங்களை செவ்வாயிலிருந்து அனுப்பியுள்ளது

15 புகைப்படங்களை செவ்வாயிலிருந்து அனுப்பியுள்ளது

அதனைப் பொய் என்று நிரூபிக்கப் பல விஞ்ஞானிகளும் பல முன்னனி நாடுகளும் முயன்று வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் வகையில் நாசாவின் கியூரியாசிட்டி செயற்கைக்கோள் செவ்வாயில் உயிர்கள் உள்ளதென்று 15 புகைப்படங்களை செவ்வாயிலிருந்து அனுப்பியுள்ளது.

வேற்று உயிர் படிமங்கள்

வேற்று உயிர் படிமங்கள்

செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து, இந்த கியூரியாசிட்டி ரோவர் செயற்கைக்கோள் செவ்வாய்க் கிரகத்தைப் படம் பிடித்துள்ளது.
கியூரியாசிட்டி ரோவர் படம்பிடித்த 15 புகைப்படத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் வேற்று உயிர் படிமங்கள் வாழ்வது தெரியவந்துள்ளது.

நீங்கள் கவலைப் படவேண்டாம்

நீங்கள் கவலைப் படவேண்டாம்

நீங்கள் கவலைப் படவேண்டாம் இவை ஏலியன் உயிரினங்கள் இல்லை, முழுதாய் உருவான உயிரினமும் இல்லை, புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உயிர் படிமங்கள் புஞ்சை மற்றும் பாசி மாதிரியை சேர்ந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிர் நிலைகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறு கண்டுபிடிப்பு

உயிர் நிலைகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறு கண்டுபிடிப்பு

முன்பு செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் உயிர்கள் வாழ்விடம் வசிக்க முடியாதது என்று நம்பப்பட்டது, ஆனால் தற்பொழுது அறியப்பட்டுள்ள தகவலின்படி செவ்வாயின் மேற்பரப்பிற்குக் கீழே உயிர் நிலைகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் நன்றாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

அதிகப்படியான வளர்ச்சியை அடைந்து வரும் உயிர் படிமம்

அதிகப்படியான வளர்ச்சியை அடைந்து வரும் உயிர் படிமம்

இந்த உயிர் படிமங்கள் காளான்கள், தண்டுகள் மற்றும் ஸ்போர்களைப் போல் தோற்றமளிக்கிறது. இதுவரை சுமார் 15 உயிர் மாதிரிகளை நாசா படம்பிடித்துள்ளது. இதில் அதிகப்படியான சுவாரசியம் என்னவென்றால் இந்த உயிர் படிமங்கள் மூன்று நாட்களில் அதிகப்படியான வளர்ச்சியை அடைந்து, இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது தான்.

நாசா

நாசா

பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நாசா வளர்ந்து வரும் இந்த உயிர் படிமங்களை இன்னும் ஆராய்ந்து பார்க்க நாசா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவை வேற்று என்ற பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை உரிய விஞ்ஞானிகளின் குழுவுடன் ஆராயத் திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
On-Mars-Detecting-the-existence-of-clay-minerals : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X