Just In
- 4 hrs ago பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- 7 hrs ago மலிவு விலை.. மல்டிஃபங்க்ஷன் Smartwatch.. இன்பில்ட் நேவிகேஷன், ப்ளூடூத் கால்லிங்.. இன்னும் ஏராளம்.. எந்த மாடல்?
- 8 hrs ago ஒரே ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் BSNL..
- 9 hrs ago Zomato போட்டப்போடு.. பொசுக்குனு கட்டணம் உயர்வு.. இன்டர்சிட்டி உணவு டெலிவரி ரத்து.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Lifestyle மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!
பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.
தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டிங்க....இதோ படங்கள்
செவ்வாய் கிரகத்தின் அமைப்புகள், சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆராயப் பல விதமான செயற்கைக்கோள்கள் அதை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்திற்கு அருகில் உள்ள நிலத்துக்கு அடியில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு ஆய்வு ஒன்றின்போது சுட்டிக்காட்டப்பட்ட நான்காவது ஏரி ஒன்றின் இருப்பையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
வெளிவந்த தகவலின்படி திரவ நிலையில் நீர் இருப்பது என்பது உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது, எனவே இந்த
கண்டுபிடிப்பானது சூரிய குடும்பத்தில் வேறு எங்கும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனாவா என்று ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்தும் வாய்ந்தஒன்றாக கருதப்படுகிறது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரிகள் அனைத்தும் மிகவும் உப்பத்தன்மை வாய்ந்தவை என்று கருதப்படுவதால், இதுநுண்ணுயிரிகளின் உயிர் வாழ்தல் கேள்விகளை ஏழுப்பியுள்ளது, அதாவது மெல்லிய வளி மண்டலம் என்று கூறப்படும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
கொஞ்சம் காத்திருங்க: விரைவில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை!
ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
அதாவது இந்த சமீபத்தி கண்டுபிடிப்பானது 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் ஐரோப்பியவிண்வெளி அமைப்புக்கு சொந்நமான மார்ஸ்என்ற ஆய்வுகலத்தின் ரேடாரில் உள்ள தரவை கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு இதே மார்ஸ் ஆய்வுக்கலத்தின் ரேடாரை கொண்டுதான், செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தின் நிலப்பரப்புக்கு 1.5கிலோமீட்டர் கீழே சுமார் 20கிலோமீட்டர் அகலமுள்ள ஏரி இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் அந்த கண்டுபிடிப்பு 2012 மற்றும் 2015-க்கு இடையில் மார்ஸ் ஆய்வுகலன் சேகரித்த 29கணிப்புகளை அடிப்படையாக கொண்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள கண்டுபிடிப்பானது 2010 மற்றும் 2019-க்கு இடையில் சேகரிக்கப்பட்ட 134 ரேடார் குறிப்பகளை கொண்ட மிகப் பெரிய தரவுத்தொகுப்பை ஆய்வு செய்ததன் மூலம் சாத்தியமாகியுள்ளது.
அதன்படி 2018-ம் ஆண்டு நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவலை உறுதிசெய்தது மட்டுமின்றி, மூன்று பிரகாசமான பகுதிகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம் என இந்த ஆய்வு குழுவை சேர்ந்தவரும் இத்தாலியின் ரோமோ ட்ரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான எலெனா பெட்டினெல்லி கூறியுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரியானது திரவ நிலையில் நீர் கொண்ட சிறிய அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ரேடாரின் தொழில்நுட்ப பண்புகள் மற்றும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து அதன் தூரம் காரணமாக அவை ஒன்றோடொன்று இணைந்துள்ளதா என்பதை நாம் உறுதியாக கூறமுடியாது.
இதற்குமுன்பு அன்டார்டிகா, கனடா மற்றும் கிரீன்லாந்திலுள்ள பனிப்பாறைகளை கொண்ட ஏரிகளை ஆய்வுசெய்ய பயன்படுத்தப்படும் முறையை தழுவி மார்சிஸ் ஆய்வுகலன் திரட்டிய தரவுகளை விஞ்ஞானிகள் பகுப்பாய்யு செய்தனர். தற்போது செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்டுள்ள ஏரிகளிலுள்ள பனி உருகுவதற்கு தேவையான வெப்பம் கிடைக்காததால் அங்கு காணப்படும் நீர் உப்புகளின்அதிக செறிவுகளை கொண்டிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த தரவுகளை வைத்து பார்க்கும்போது செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியமா என்பது அங்கு உள்ள நீர் ஆதாரங்கள்எவ்வளவு உப்புத்தன்மை கொண்டவை என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமியை சுற்றிவரும் நீர்யானை அளவிலான புதிய நிலவு கண்டுபிடிப்பு! உண்மையை சொன்ன விஞ்ஞானி!
விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், தற்பொழுது பூமியை சுற்றி வரும் நீர்யானை அளவிலான ஒரு புதிய நிலவை கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கு இதுவரை ஒரு நிலவு மட்டும் தான் என்று கூறி வந்த விஞ்ஞானிகள், தற்பொழுது பூமிக்கென்று மற்றொரு துணைக்கோள் பூமியை சுற்றி வலம்வருகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சிறு நிலவு ஒரு குறுங்கோளாகும். இதற்கு '2020 CD3' என்று விஞ்ஞானிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த சிறிய நிலவு 1.9-3.5 மீட்டர் விட்டம் கொண்டதாகவுள்ளது, ஏறக்குறைய இதுவொரு பசுவின் அளவு அல்லது நீர்யானையின் அளவைக் கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த 'புதிய நிலவு' தற்காலிகமாக பூமிக்கு மிக அருகாமையில் இருக்கிறது என்று சர்வதேச வானியல் ஒன்றியத்தில் உள்ள மைனர் பிளானட் மையம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கண்டுபிடித்துள்ளது.
புதிய நிலவு குறித்த உண்மை தகவல்
இந்த ஆய்வு மையம் பல ஆண்டுகளாகச் சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து சிறிய கிரக மற்றும் கூடுதல் கிரக பொருட்களை ஆய்வு செய்து அவற்றை பெயரிட்டு, பகுப்பாய்வு செய்து வரும் ஒரு ஆராய்ச்சி மையமாகும். காக்பர் வியர்சோஸ் என்ற விஞ்ஞானிகளின் குழு தலைவர் இந்த ‘புதிய நிலவு' குறித்த உண்மை தகவலை தற்பொழுது டிவிட்டர் மூலம் ட்வீட் செய்து, வெளியுலகிற்கு இந்த செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிறு நிலவு 2020 CD3
அண்மையில் ஒரு புதிய தற்காலிகமான நிலவைப் பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகில் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய சிறு நிலவிற்கு 2020 CD3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 15ம் தேதி இரவு, கேடலினா ஸ்கை சர்வே என்ற அணியில் உள்ள டெடி ப்ரூயி என்ற விஞ்ஞானியும், காக்பர் வியர்சோஸ் என்ற விஞ்ஞானியும் சேர்ந்து இந்த 20வது பரிமாணமுள்ள சிறுப்பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட 2006 RH120 பற்றி உங்களுக்கு தெரியுமா?
சூரியக் குடும்பத்தில் சுமார் பத்து லட்சத்திற்கு அதிகமான விண்கற்கள் வலம்வருவதால், இந்தச் சிறிய நிலவைக் கண்டுபிடித்தது என்பது உண்மையில் பெரிய வியப்பாகக் கருதப்படுகிறது. விண்வெளி ஆய்வுகளின் படி அறியப்பட்ட பூமியின் இரண்டாவது பருப்பொருளாக இந்த புதிய நிலவு கூறப்படுகிறது. இதற்கு முன் இதேமாதிரியான ‘2006 RH120' என்ற பொருள் பூமியைச் சுற்றி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டுகளாக பூமியை சுற்றும் 2020 CD3 சிறு நிலவு
இந்த 2020 CD3 சிறு நிலவு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. இது அக்டோபர் 2020 முதல் 2021 மே வரை பூமியை சுற்றி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சிறிய நிலவு குறித்த தகவல்கள் இன்னும் அதிகம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை.
|
இதன் உண்மை நிலை பற்றி ஆராய்ச்சி
இருப்பினும், அடுத்த ஆண்டு இந்த சிறிய நிலவு பூமிக்கு மிக அருகாமையில் வரும் பொழுது இதன் உண்மை நிலை பற்றி ஆராய்ச்சி செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறு நிலவுகள் அல்லது சிறுகோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் இருக்க காரணம், பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் சந்திரனிலிருந்து வரும் சூரியனின் ஈர்ப்பு விசையின் கலவை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் தான் இவை ஒழுங்கற்ற சுற்றுப்பாதையில் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
பூமியின் சுற்றுப்பாதையில் இருக்க காரணம் என்ன?
இந்த சிறு நிலவுகள் அல்லது சிறுகோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் இருக்க காரணம், பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் சந்திரனிலிருந்து வரும் சூரியனின் ஈர்ப்பு விசையின் கலவை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் தான் இவை ஒழுங்கற்ற சுற்றுப்பாதையில் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
சிறிய நிலவு மனிதனால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்
மற்றொருபுறம் இந்தச் சிறிய நிலவு மனிதனால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று நாசாவின் நியர்-எர்த் ஆப்ஜெக்ட் ஸ்டடிஸ் மையத்தின் இயக்குநர் பால் சோடாஸ் கூறியுள்ளார்.
பூமிக்கு மிக அருகாமையில் வரும் நீர்யானை அளவு புதிய நிலவு
இது செப்டம்பர் 20, 1966 ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட சர்வேயர் 2 லூனார் லேண்டராக கூட இருக்க வாய்ப்புள்ளது என்று பால் சோடாஸ் கூறியுள்ளார். உண்மையில் இது என்ன என்பது இந்த சிறிய நிலவு பூமிக்கு மிக அருகாமையில் வரும் பொழுது தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470