செவ்வாய் கிரத்தில் நாசா விண்கலம் இன்சைட் சாய்வாக அமர்ந்தது.!
மேலும், செவ்வாய் கிரகத்தில் புழுதியும் மணலும் படர்ந்த ஹோலோ பகுதியில் இருக்கின்றது என தெரியவந்துள்ளது. செவ்வாயை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று நாசா கங்கனம் கட்டியுள்ளது.
அமெரிக்கா விண்வெளி மையம் நாசா சார்பில், இன்சைட் என்ற செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் 4 டிகிரி சாய்வாக அமர்ந்து இருக்கின்றது.

மேலும், செவ்வாய் கிரகத்தில் புழுதியும் மணலும் படர்ந்த ஹோலோ பகுதியில் இருக்கின்றது என தெரியவந்துள்ளது. செவ்வாயை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று நாசா கங்கனம் கட்டியுள்ளது.

உலக நாடுகள்:
உலக நாடுகளும் போட்டிக் போட்டுக் கொண்டு செவ்வாய் கிரகம் குறித்தும், உயிரினங்கள் வாழ முடியுமான அங்குள்ள சூழ்நிலைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகின்றன.
செவ்வாய் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைகோளை இஸ்ரோவும் செலுத்தி சாதனை படைத்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஆராய்ச்சியிலும் உத்து வேகத்துடன் இஸ்ரோ செயல்பட்டு வருகின்றது.

நாசா:
1976ம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறத்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. பல்வேறு விண்கலன்களையும் செவ்வாய்க்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றது.

9வது கிரக ஆராய்ச்சி:
நாசா தற்போது 9வதாக செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு விண்கலமான இன்சைட் கடந்த நவம்பர் 27ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. இது செவ்வாய் கிரகத்தின் நிலத்தை ஆழமாக ஆய்வு செய்யும் நோக்கில் அனுப்பட்டது.

15 டிகிரி சாய்வாக:
தற்போது 15 டிகிரி கோணம் வரை சாயக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தின் புழுதியும் மணலும் படர்ந்த ஹோலோ என்ற நிலப்பரப்பில் 4 டிகிரி சாய்வாக அமர்ந்து இருக்கின்றது என்று நாசா தெரிவித்து இருக்கின்றது.

நில அதிர்வுகளை ஆய்வு செய்யும்:
இன்சைட்டில் உள்ள நில அதிர்வு மற்றும் வெப்பநிலையை அறியும் சென்சார்கள் சரியாக வேலை செய்யும் என நம்புவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மங்கள்யான் 2 :
செவ்வாய்க்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைகோள் செலுத்திய நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மேலும், மங்கள்யான்-1 வெற்றியை தொடர்ந்து, விரைவில் மங்கள்யான் 2 செயற்கைகோள் விரைவில் செலுத்தப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications