NASA-டைம் மிஷன்லாம் வேணாம்: இதோ நம் எதிர்காலம்- உலகை உறைய வைக்கும் வீடியோ!
கடல்களால் சூழப்பட்டிருப்பதே பூமி. அதேபோல் மிக நீளமான மலைத்தொடர்கள். பிற கண்டங்களை அடைவதற்கு மனிதர்கள் கடந்து வந்த பழங்கால தொடர்கள் பல உண்டு. 2008 ஆம் ஆண்டு நாசாவின் வீடியோ கூடுதல் தகவல்களோடு தற்போது வெளியாகியுள்ளது. கிரக விஞ்ஞானி ஜேம்ஸ் ஓ டோனோகு, பூமியில் இருந்து நீர் அனைத்தும் வெளியேறிவிட்டால் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக காட்டுகிறது.

நாசாவில் பணிபுரிந்து வந்த ஓ'டோனோக்
நாசாவில் பணிபுரிந்து வந்த ஓ'டோனோக், தற்போது ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிகிறார். 2008 ஆம் ஆண்டில் நாசா இயற்பியலாளரும் அனிமேட்டருமான ஹொரேஸ் மிட்செல் வெளியிட்டிருந்த வீடியோவை சில கூடுதல் தகவல்களையும் தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப எடிட் செய்து துல்லியமாக வெளியிட்டுள்ளார்.

அனிமேஷன் மூலம் கடல் நீர் குறையும் வீடியோ
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அனிமேஷன் மூலம் எவ்வளவு கடல் நீர் குறைகிறது. அப்போது பூமியின் புகைப்படம் எப்படி இருக்கும் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக உள்ளது. இதுகுறித்து ஓ'டோனோக், கூறுகையில் இது தண்ணீர் டிரை செய்தால் கிடைக்கும் கடல் நிலப்பரப்பு குறித்து கணித்து எடுக்கப்பட்டது. தொடங்கிய பத்து மீட்டரில் ஏணைய கடல்களின் நிலப்பரப்பு வெளிவரத் தொடங்கி விட்டது என கூறினார்.

கண்டம் விட்டு கண்டம் தரைவழி பயணம்
ஆரம்பகால மனிதர்கள் பயணம் என்பது பல்வேறு வகைகளிலும், வியக்க வைக்கும் வகையிலும் இருந்துள்ளது என்பதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இதில் ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு இடம்பெயர்ந்த மனிதர்கள் பயன்படுத்தப்பட்ட நில பாலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் ஐரோப்பாவிலிருந்து இங்கிலாந்து வரை, சைபீரியாவிலிருந்து அலாஸ்கா வரையிலும், ஆஸ்திரேலியாவிலிருந்து அதைச் சுற்றியுள்ள தீவுகளுக்கும் நடந்தே பயணித்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது என ஓ'டோனோக் கூறினார்.

பண்டைய மனிதர்ளின் வாழ்வியல் மற்றும் பயண முறை
எடிட் மூலம் நீரை அகற்றி அனிமேஷன் காட்சி பண்டைய மனிதர்களின் வாழ்வியல் மற்றும் பயண முறையை காண்பிக்கும் விதமாக அமைந்துள்ளது. கடல் மட்டங்கள் 2,000 முதல் 3,000 மீட்டர் (6,500 முதல் 9,800 அடி) குறைந்துவிட்டவுடன் தோன்றும் காட்சியில் பூமியின் நீளமான மலைகளின் சங்கிலியை காட்டுகிறது எனவும் ஓ'டோனோக் தெரிவித்தார்.

மரியானாஸ் அகழியின் ஆழமான இடங்கள்
அதேபோல் அனிமேஷன் செய்யப்பட்ட பெருங்கடல்கள் 6,000 மீட்டர் (20,000 அடி) குறைந்துவிட்டால், பெரும்பாலான நீர் தீர்ந்து விடும் என்று தெரிவித்த ஓ'டோனோக், ஆனால் மரியானாஸ் அகழியின் ஆழமான இடங்களை காலி செய்ய கிட்டத்தட்ட கூடுதலாக 5,000 மீட்டர் (16,000 அடி) ஆகும்.
பனிப்பாலங்கள் அனைத்தும் ஒவ்வொரு பகுதியையும் இணைத்தது
குறிப்பாக கடைசியாக பனி யுகம் ஏற்பட்டபோது, கிரகத்தின் துருவங்களில் ஏராளமான கடல் நீர் பனியாக பூட்டப்பட்டிருந்தது. அதனால்தான் நில பாலங்கள் இருந்தன எனவும் ஓ'டோனோகு கூறினார். இந்த பனிப்பாலங்கள் அனைத்தும் ஒவ்வொரு பகுதியையும் இணைப்பதற்கு பெரிதளவு உதவியாக இருந்துள்ளது. வெப்பமயமாதல் போன்ற காரணத்தால் பனிகள் கரைந்து முழுதும் கடல்நீராக கலந்து மாறியுள்ளது.

உலகம் வெப்பமயமாதல்
உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின், பசுமைக்குடில் வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகம். பூமியில் பனிக்கட்டியின் அமைப்பு உருகி கரைதலாகும். சூரியனில் இருந்து பூமிக்கு வரும் வெட்பத்தை திருப்பி அனுப்பும் தன்மை குறைதல் போன்ற பல்வேறு சூழ்நிலை ஆகும்.

குமரிக்கண்டம்
இதை ஒரு அறிவியல் கேள்வி பதிலாக கடந்து விட முடியாது. இந்தியாவின் தெற்கு பகுதியில் இருந்ததாக கூறப்படும் குமரிக்கண்டம். குறிப்பாக கவனிக்க வேண்டியா வார்த்தை இருந்ததாக, இதே நிலைதான் பிற்காலத்தில் நமது உலக அமைப்பிற்கு ஏற்படும்.

புவி வெப்ப அதிகரிப்பு 3 டிகிரி செல்சியஸ்
பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. தற்போது புவி வெப்ப அதிகரிப்பு 3 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.

கடுமையான வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம்
இதே அளவு தொடர்ந்தால் கடுமையான வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் ஏற்படும். இதன் காரணமாக மோசமான உணவு பற்றாக்குறை ஏற்படலாம், லட்சக்கணக்கானவர்கள் பஞ்சத்தில் உயிரிழப்பு நேரிடலாம். இது நேராமல் இருக்க வேண்டும் என்றால் அது நம் கையில் தான் இருக்கிறது. பொது போக்குவரத்து மற்றும் மிதிவண்டியை பயன்படுத்துவது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்துவது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நாம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


Click it and Unblock the Notifications