வரும் காலங்களில் அந்த பிரச்சனை இருக்காது.! நாசாவின் புதிய சோதனை? பலே திட்டம்.!
வாகனங்கள் அதிகரித்த பின்பு டிராஃபிக் ஜாம் பிரச்சனை அதிகமாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக உலகம் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது என்றே கூறலாம். எனவே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை நோக்கி நாசா பயணம் செய்து கொண்டிருக்கிறது.

அதாவது போக்குவரத்து நெரிசல் பிரச்சனையில் இருந்து மக்களை காப்பற்ற நாசா அமைப்பு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி நாசா அமைப்பு எலெக்ட்ரிக் வெர்டிகள் டேக்ஆஃப் அன்ட் லேண்டிங் (electric vertical takeoff and landing - eVTOL)
ஏர்கிராஃப்ட்டை டெஸ்ட்டிங் செய்து வருகிறது.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் வழக்கமாக தரையில் ஓடும் டாக்ஸிகளை போன்று பயணிகளை ஏற்றி கொண்டு வானில் செல்லக்கூடிய ஏர் டாக்ஸிகளை இப்போது நாசா டெஸ்ட்டிங் செய்யத் தொடங்கியுள்ளது. எனவே இது நடைமுறைக்கு வந்தால் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

சமீபத்தில் இதன் சோதனை ஓட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதாவது இதற்கான சோதனை ஓட்டம் சமீபத்தில் கலிபோர்னியாவின் பிக்சுர் அருகில் அமைந்துள்ள ஜோபிஸ் எலெக்ட்ரிக் பிளைட் பேஸில் நடைபெற்றது. இந்த சோதனை மூலம் பறக்கும் டாக்ஸிகளை ஒரு யதார்த்த நடைமுறையாக மாற்ற நாசா ஒரு முக்கியமான படியை முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் இந்த சேவை மக்களின் பயன்பாட்டுக்கு வரும். அதேபோல் இந்த சோதனை முயற்சி பயணிக்கும் மக்கள் மற்றும் சரக்கு பொருட்களை கொண்டு செல்ல மற்றொரு போக்குவரத்து முறையை நம்முடன் சேரக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்தடுத்து நடைபெற இருக்கும் டெஸ்டிங்கின் போது, ஏர்கிராஃப்டிலிருந்து நாசா தொடர்ந்து டேட்டாக்களை சேகரிக்க உள்ளது. பின்பு எதிர்காலத்தில் கமர்ஷியல் பேசஞ்சர் சர்வீஸ்காக இது பயன்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் eVTOL ஏர்கிராஃப்ட் திட்டமிட்ட டெஸ்ட்டிங்கில் பறந்த போது, நாசாவின் ஏர் மொபிலிட்டி தேசிய பிராச்சாரக் குழு, ஏர்கிராஃப்ட் எப்படி நகர்ந்து சென்று பறக்க துங்கியது? பறக்கும் போது அதிலிருந்து வந்த ஒலி? பறந்த சமயத்தில் ஏர்கிராஃப்ட்டானதுதரையில் இருந்த கட்டுப்பாட்டாளர்களுடன் எப்படி தொடர்பு கொண்டது? போன்ற அனைத்தையும் சரியாக கவனித்து, இது தொடர்பான டேட்டாக்களை சேகரித்துக் கொண்டனர்.

குறிப்பாக ஏர் டாக்ஸியின் ஒலி தொடர்பான சோதனைக்காக குறைந்தது 50 மைக்ரோஃபோன்கள் அதில் நிறுவப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இது வரும் 2024-ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய சேவை மட்டும் வந்தால் சர்வதேச விமானத் துறை மற்றும் போக்குவரத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசா ஆய்வாளர்கள் இந்த திட்டத்திற்கு வேண்டி சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நாசா அமைப்பு இதை வெற்றிகரமாக பறக்கும் கார் என்று கூறியுள்ளது. இந்த சேவை உலகம் முழுவதும் அதிக எதிர்பாரப்புகளை
உருவாகியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications