Just In
- 9 hrs ago நீ Flipkart இல்லை மோசடிகார்ட்.. கழுவி ஊத்திய நபர்.. ஆர்டர் செஞ்சா ஒழுங்கா பொருளை கொடு.. இல்ல ரீபண்ட் கொடு..
- 10 hrs ago ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
- 11 hrs ago இது இல்லாட்டி டோட்டல் வேஸ்ட்.. பட்ஜெட்ல புது போன் வாங்கப்போறீங்களா? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..
- 12 hrs ago பொங்கி எழுந்த Portronics.. 250 இன்ச்.. 1080p ரெசல்யூஷன்.. ஆஃபரில் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த கார்களை யாருமே மறக்க மாட்டாங்க! இந்தியர்களின் மனம் கவர்ந்த மாடல்களின் தொகுப்பு
- Lifestyle Today Rasi Palan 22 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்க போறாங்க... உஷார்..
- News "கருவறுப்போம்!" சர்ச்சை வீடியோ- நாமக்கல் கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றம்! புது வேட்பாளர் யார்
- Sports கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன் இந்தியாவுடன் விளையாடிய டெஸ்ட்!ஒரே நேரத்தில் 2 டெஸ்ட் ஆடிய இங்கிலாந்து
- Movies Inmel song: வெளியானது ஸ்ருதிஹாசன் -லோகேஷின் இனிமேல் டீசர்.. மெயின் பாடல் எப்போ தெரியுமா?
- Finance மார்ச் 31 நெருங்கியது.. வருமான வரி சேமிக்க கடைசி நிமிட டிப்ஸ்..!
- Travel கோடைக் காலத்தில தென்னிந்தியாவின் இந்த இடங்களுக்கு போக மறக்காதீங்க – ஜில்லுன்னு இருக்குமாம் மக்களே!
- Education சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு திடீர் ஒத்திவைப்பு
இஸ்ரோ திட்டம் காப்பியடித்த நாசா: நிலவின் தென்துருவத்தில் மனிதர்களா?
உலக அரங்கில் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றது இஸ்ரோ. பல்வேறு நாடுகளும் இந்தியாவையும் இஸ்ரோவையும் அவ்வளவு சிறிதாக எடை போட முடியாது.
இஸ்ரோ கடந்த 2017ல் ஓரே நேரத்தில், 104 செயற்கோள்களை செலுத்தி சாதனை செய்தது. மேலும், சந்திராயன்-1 நிலவுக்கு அனுப்பி தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்து உலகிற்கு முதன் முதலில் கூறியது.
இதுவரை எந்த நாடும் செய்யாத சாதனையாக சந்திராயன்-2 நிலிவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை செய்ய இருக்கின்றது.
இந்நிலையில், இஸ்ரோவின் திட்டத்தை காப்பி அடித்து, முதல்முறையாக நிலிவன் தென் துவருத்திற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்து உலக அரங்கில் பெயர் வாங்கி கொள்ளலாம் என்று நாச வேலையில் இறங்கியுள்ளது நாசா.!
இஸ்ரோ நிறுவனம் நிலவின் தண்ணீர் இருப்பதை சந்திராயன்-1 முதல் முறையாக உலகிற்கு கண்டறிந்து கூறியது. இந்த செயற்கைகோள் செயழிந்ததால், சந்திராயன்-2 திட்டம் தயார் ஆனது. பிறகு பல்வேறு தடைகளாலும், தொழில்நுட்ப கோளாறுகளாலும் விண்ணிற்கு செலுத்த தடை ஏற்பட்டது.
சந்திராயன் -2 விண்கலனை இஸ்ரோ திட்டமிட்ட ஸ்ரீ ஹரிகோட்ட விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் அனுப்பியது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துவருத்திற்கு விண்கலனை அனுப்ப வில்லை. இதில் பல்வேறு இடையூறுகள் இருக்கின்றது. இதையும் தாண்டி இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியது.
சந்திராயன்-2 திட்டத்திற்கு நிதி அளிப்பது முதல் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இந்த திட்டம் ஒரு வழியாக செயல்பாட்டிற்கு வந்தாலும், தொழில்நுட்ப கோளாறு உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதையும் ஒரு வழியாக சரிசெய்து வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது.
கூகுள்பிளே ஸ்டோரில் பாதுகாப்பாக யுபிஐ கட்டணம்செலுத்த புதிய வசதி.!
ஓரே நேரத்தில் 104 செயற்கைகோள்ளையும் கடந்த 2017ம் ஆண்டு விண்வெளிக்கு செலுத்தியது. பிறகு, இஸ்ரோ குறைந்த விலையில் பல நாட்டு செயற்கோள்ளையும் செலுத்தி வருகின்றது.
முதல் முயற்சியில் சந்திராயன்-1 வெற்றிகரமாக ஏவியது. இது நிலவில் தண்ணீர் இருப்பதை முதல் முதலில் உலகிற்கு கண்டுபிடித்து கூறியது.
உளவு செயற்கைகோள், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவைகளையும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தனது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது.
இந்நிலையில், இஸ்ரோ நிலவின் தென்துருவத்தில் சந்திராயன்-2 இதுவரை எந்த நாடும் தரையிறக்கவில்லை. தற்போது, வெற்றிகரமாக இஸ்ரோ சந்திராயனை தரையிறக்க போகின்றது. அங்கு இருண்ட பகுதியாகவும் இருப்பதால் தண்ணீர், மனிதர்கள் வாழ ஏற்ற சூழ்நிலைகள் இருப்பது குறித்தும் ஆராயவும் இருக்கின்றது.
விமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.!
நிலவில் சந்திராயன்-2 சென்றடைந்துள்ளது. பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் மத்தியில், வெற்றிகரமாக லேண்டர் விக்ரமை பிரித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவது உறுதியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வரும் (செப்.7ம் தேதி) நிலவின் தென் துவருத்தில் சந்திராயன்-2 வெற்றிகரமாக தரையிறங்க இருக்கின்றது.
நிலவின் தென்துருவத்தில் சந்திராயன்- செய்யும் ஆராய்ச்சி மிகவும் முக்கியமாக இருக்கும் என்று விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறுகையில், உலக நாடுகள் அனைத்தும் விண்வெளியில் ஒரே கூரையின் கீழ் பயணித்து வருகின்றன. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 தரையிறங்குவதை 'நாசா' உன்னிப்பாகவும் ஆர்வமாகவும் கவனித்து வருகிறது.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது. அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப 'நாசா' முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாசா முன்னோடியாக விண்வெளியில் இருந்தாலும், இந்தியாவின் இந்த சீறிய வளர்ச்சியை கண்டு பயந்து நடுகின்றது. மேலும், இந்த பகுதியில் மனிதர்களை இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அனுப்பி ஆய்வும் செய்யும் முன்னர் தனது ஆய்வை துவங்க வேண்டும் என்று நினைத்துள்ளது.
3.5மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான்! அதிசய கண்டுபிடிப்பு.!
மற்ற நாடுகள் உலகின் முதன் முறையாக இந்த பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினால் தனது பெயருக்கும், புகழுக்கும் பங்கம் ஏற்படும் என்று நாசா அறிந்துள்ளது. இதனால் மற்றவர்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கா கூடாது என்று இந்த நாசா நாச வேலையில் இறங்கியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470