போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி : தீவிரமாக யோசிக்கும் நாசா..
போயிங்கின் புதிய சிஎஸ்டி -100 ஸ்டார்லைனர் காப்ஸ்யூலின் அடுத்த விமானம் விண்வெளி வீரர்களை சுமந்து செல்லுமா என்பது வெகுவிரைவில் நமக்கு தெரியவுள்ளது.

ஆர்பிட்டல் ஃப்ளைட் டெஸ்ட்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கும் (ஐ.எஸ்.எஸ்), பூமியில் இருந்து விண்வெளிக்கும் நாசா விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் காப்ஸ்யூலின் திறனை நிரூபிக்க வடிவமைக்கப்பட்ட ஆர்பிட்டல் ஃப்ளைட் டெஸ்ட் (OFT) என்ற மனிதர்கள் இல்லாத மிஷனை ஸ்டார்லைனர் 20 டிசம்பர் 2019 அன்று விண்ணில் ஏவியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை போலவே, போயிங் நிறுவனும் நாசாவின் கமர்ஷியல் க்ரூ திட்டத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கனகச்சிதமாக தரையிறங்கியது
எட்டு நாட்கள் நீடித்திருக்கவேண்டிய இந்த பரிசோதனையானது, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தன்னாட்சியாக இணைப்பை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் விண்ணில் ஏவப்பட்ட சில மணித்துளிகளில் ஸ்டார்லைனர் அதன் உள்நேர அமைப்பில் ஒரு தடுமாற்றத்தை சந்தித்ததால், ஐ.எஸ்.எஸ் உடன் சந்திக்கும் சமயத்தில் மிகக் குறைந்த சுற்றுப்பாதையில் சிக்கிக்கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த காப்ஸ்யூல் பூமியைச் சுற்றி 48 மணிநேரம் வலம்வந்தபிறகு, பின்னர் டிசம்பர் 22 அன்று நியூ மெக்ஸிகோவின் ஒயிட் சாண்ட்ஸ் ஏவுகணை பகுதியில் கனகச்சிதமாக தரையிறங்கியது.

நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன்
இந்த OFT பரிசோதனையை தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்புவது தான் உண்மையான திட்டமாக இருந்தது. ஆனால் டிசம்பர் மாத விண்வெளி பயணத்தில் சிக்கல்கள் இருந்தபோதிலும், அந்த திட்டம் இன்னும் பரிசீலனையில் உள்ளதாக நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் கடந்த செவ்வாயன்று (ஜன. 7) தெரிவித்துள்ளார்.

நாசா மதிப்பீடு செய்துவருகிறது
மற்றொரு பரிசோதனை தேவையா என்பதைத் தீர்மானிப்பதற்கான கடந்த மிஷனின் போது பெறப்பட்ட தரவுகறை நாசா மதிப்பீடு செய்துவருகிறது. இந்த ஆய்வுக்கு அணிகள் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளும் நிலையில், இதற்கான முடிவை இன்னும் பல வாரங்களுக்கு எதிர்பார்க்கமுடியாது" என்று பிரிடென்ஸ்டைன் குறிப்பிட்டார்.

நாசா மற்றும் போயிங்
நாசாவின் அணுகுமுறை, நாசா மற்றும் போயிங் ஆகியவை கணினியின் ஒட்டுமொத்த செயல்திறனை உறுதிப்படுத்த போதுமான தரவைப் பெற்றனவா என்பதை தீர்மானிப்பதாகும். இதில் ஏவுதல், சுற்றுப்பாதை செயல்பாடுகள், வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாடு, விண்வெளி நிலையத்தில் இணைத்தல் / திறத்தல், மறுபிரவேசம் மற்றும் தரையிறக்கம் ஆகியவை அடங்கும். மனிதர்கள் இல்லாத இந்த சோதனையிலிருந்து கிடைத்த தரவுகள் சான்றிதழ் பெற முக்கியம் என்றாலும், போயிங் நிறுவனம் அதன் அமைப்பின் முழு திறன்களையும் நிரூபிக்க இதுமட்டுமே வழி இல்லை." என்கிறார் அவர்.

விரிவாக ஆராயப்படவுள்ளது
ஸ்டார்லைனரின் நேர அமைப்பின் கோளாறுகளை விசாரிக்கவும், அது மீண்டும் நடக்காது என்பதை உறுதிசெய்யவும் நாசாவும் போயிங் நிறுவனமும் ஒரு கூட்டுக் குழுவை அமைத்து வருவதாகவும் பிரிடென்ஸ்டைன் அறிவித்தார்.
"தற்போது விசாரணை நடந்துவரும் நிலையில் விசாரணை குழு அதன் இறுதி மதிப்பீட்டை வழங்குவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆகும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் தற்போது ஒயிட் சாண்ட்ஸிலிருந்து புளோரிடாவின் விண்வெளி பிரிவில் உள்ள போயிங்கின் பரிசோதனை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அங்கு காப்ஸ்யூல் இன்னும் விரிவாக ஆராயப்படவுள்ளது" என்று மேலும் தெரிவித்தார்.

4.2 பில்லியன் டாலர்
சமீபத்திய பெரிய வர்த்தக குழு ஒப்பந்தங்கள் 2014 இல் வழங்கப்பட்டன. ஆறு செயல்படக்கூடிய ஸ்டார்லைனரின் மேம்பாட்டுப் பணிகளை முடித்து, மனிதர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பக்கூடிய பணிக்காக போயிங் 4.2 பில்லியன் டாலர்களைப் பெற்றது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் அதன் க்ரூ டிராகன் காப்ஸ்யூலுடன் இதைச் செய்ய 2.6 பில்லியன் டாலர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications