ரெடியா இருங்க! தங்க கிரகத்தை உடைக்கப் போகும் NASA.. இனி பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கோடீஸ்வரன்!
கேஜிஎஃப் படம் பார்க்கும் போது அனைவருக்கும் நாமும் ராக்கி பாய் ஆக இருந்திருக்கலாம் என தோன்றிருக்கும். கேஜிஎஃப் என்பது கோலார் தங்க சுரங்கம் என்பதின் சுருக்கம் தான், ஒரு தங்கச் சுரங்கம் நம் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இதுஅது என அனைத்தையும் செய்திருப்போமே என தோன்றி இருக்கும். இந்த தொழில்நுட்ப காலத்தில் அது எளிதில் தனியாருக்கு கிடைப்பது சாத்தியம் அல்ல. ஆனால் வானத்தில் ஒரு தங்க சுரங்கம் இருக்கிறது. அதை பிரித்தால் பூமியில் உள்ள அனைவரும் கோடீஸ்வரர் என்றால் நம்ப முடிகிறதா?

பூமியை விட பல தங்கம்
நாசா அதன்படி ஒரு கிரகத்தை கண்டறிந்திருந்து அதுகுறித்த ஆராய்ச்சியை தொடங்க இருக்கிறது. அது கோல்டன் சிறுகோள் ஆகும். பூமியை விட பல தங்கம் இருக்கும் ஒரு விண்கல்லை நாசா ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்கிறது.
வியாழன் மற்றும் சூரியனுக்கு இடையில் ஒரு கிரகம் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு 16 Psyche என பெயரிப்பட்டிருக்கிறது. இந்த விண்கல்லில் தான் மொத்த ரகசியமும் அடைந்திருக்கிறது.

16 Psyche செயற்கைக்கோள்
16 Psyche என்ற செயற்கைக்கோள் 226 கிமீ அகலமுள்ளது என அளவிடப்பட்டிருக்கிறது. இந்த விண்கல்லில் இரும்பு, நிக்கல், தங்கம் போன்ற உலோகங்கள் இருக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கல் இல் உள்ள உலோகத்தின் மதிப்பு $10,000 குவாடிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மில்லியன், பில்லியனை விட குவாடிரில்லியன் மதிப்புள்ள தங்கம் என்பது பூமியின் ஒட்டுமொத்த பொருளாதாரா மதிப்பை விட பல மடங்கு அதிகமாகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ரோபோடிக் செயல்முறை
மார்ஸ் போன்ற வேற்று கிரகங்களை ஆய்வு செய்யும் நாசா, இதுபோன்ற விண்கல்லிலும் ரோபோடிக் செயல்முறையை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரோபோடிக் செயல்முறையை இந்த விண்கல்லில் நாசா நிகழ்த்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த கிரகத்தில் தங்கம் போன்ற உலோகத்தை எடுக்குவரும் நோக்கம் நாசாவுக்கு இல்லை என கூறப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு இலக்கு
ஒவ்வொரு கிரகத்தின் தன்மையும் அறியப்படும் போது பூமியின் நிலை குறித்த நிகழ்வுத் தன்மை வெளிப்படுவது வழக்கம்.
அதன்படி நாசாவின் மேக்னோமீட்டர் மூலம் விண்கல்லின் காந்தப்புலம், ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் உள்ளிட்ட பல கருவிகளின் மூலம் விண்கல்லை படம் பிடிக்கவும் ஆய்வு செய்யவும் நாசா திட்டமிட்டிருக்கிறது.
இந்த விண்கல்லை ஆய்வு செய்வதற்கான 16Psyche விண்கலம் 2026 ஆம் ஆண்டு விண்கல்லை சென்றடையும் என திட்டமிடப்பட்டிருக்கிறது.

நாசா எடுக்கும் நடவடிக்கை
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நாசா மேற்கோள் காட்டிய இந்த சிறுகோள் பூமியில் உள்ள அனைவரையும் பில்லியனர்களாக மாற்றக்கூடியது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நாசா இந்க விண்கல் மீதான ஆய்வை விரைவில் தொடங்க இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இன்சைட் லேண்டர்
நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் மற்ற உலக நாடுகளை விடவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவானது மிகவும் உன்னிப்பாகவும், மிகவும் தீவிரமாகவும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் இன்சைட் லேண்டர் ஆனது 4 ஆண்டுகள் பயணத் திட்டத்துடன் நிறைவு செய்யப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

4 ஆண்டுகள் ஆய்வு
செவ்வாய் கிரகத்தில் சுமார் 4 ஆண்டுகள் ஆய்வு செய்த நாசாவின் இன்சைட் லேண்டர் தனது பயணத்தை நிறைவு செய்கிறது. குறிப்பாக லேண்டரின் சோலார் பேனல்களில் அதிக அளவு தூசி படிந்துள்ளதால் விண்கலத்தின் மின் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனால் லேண்டர் செயலிழக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் எஞ்சியிருக்கும் மின்சாரம் மற்றும் பிற கருவிகளின் உதவிகளுடன் தொடர்ந்து சிறிது காலம் இது செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications