மர்மமான 'மார்ஸ் மோர்ஸ்' குறியீடுகளின் உள்ளர்த்தம் என்ன..?
'மார்ஸ் மோர்ஸ் கோட்' என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் மிக விசித்திரமான வடிவங்களும், புள்ளிகளும் நாசாவின் செவ்வாய் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டரின் ஹை ரெசெல்யூஷன் இமேஜிங் சயின்ஸ்எக்ஸ்ப்பிரிமெண்ட் (HiRISE) கேமரா மூலம் பிப்ரவரி 6, 2016 அன்று எடுக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்தின் இருண்ட குன்றுகள் ஆன இவைகள் செவ்வாயின் இடவியலின் (local topography) தாக்கம் மூலம் உருவாகியுள்ளன என்று நாசா விளக்கமளித்திருந்தது. அதே நாசா, பொதுவாக குன்றுகளின் வடிவம் மற்றும் நோக்குநிலையானது காற்றின் திசையை சுட்டிக்காட்டும். ஆனால், இந்த புகைப்படத்தில் உள்ள குன்றுகள் மிகவும் சிக்கலான வடிவமைப்பில் உள்ளன, அதனால் அங்கு நிலவும் காற்றின் திசையை அறிந்துக்கொள்ளவது கடினம் என்றும் விளக்கம் அளித்திருந்தது. அங்கு ஆரம்பிக்கிறது சந்தேகங்கள்..!

மோர்ஸ் தந்திக்குறிப்புகள் :
செவ்வாய் கிரகத்தின் விசித்திர வடிவங்களும், புள்ளிகளும் 'மார்ஸ் மோர்ஸ் கோட்' (Mars Morse Code) என்று நம்பப்பட்டன. அதாவது அவைகள் செவ்வாய் கிரகத்தின் மோர்ஸ் தந்திக்குறிப்புகள் (Morse Code) என்று நம்பப்பட்டது.

தகவல் :
மோர்ஸ் தந்திக்குறிப்பு குறிப்பிட்ட தாளத்தைப் பயன்படுத்தி தந்தித் தகவலைப் பரிமாறிக்கொள்ளும் எழுத்துருக்குறியீட்டின் வகையாகும்.

எழுத்துரு :
முறைப்படுத்தப்பட்ட வரிசையுள்ள சிறிய மற்றும் நீண்ட பகுதிகள், எழுத்துக்கள், எண்கள், நிறுத்தற்குறிகள் மற்றும் சிறப்பு எழுத்துருக்கள் போன்றவைகளைப் பயன்படுத்தி ஒரு செய்தியைக் கொடுப்பதற்கு மோர்ஸ் தந்திக்குறிப்பு பயன்படுகிறது

சதியாலோசனை கோட்பாடு :
செவ்வாய் கிரகத்தில் வாழும் உயர் நாகரீக இனம் நமக்கு சொல்ல விரும்பும் செய்தியின் தான் இந்த குறீயீடுகள் என்று சதியாலோசனை கோட்பாடுகள் கிளம்பின.

ஹைரைஸ் :
தற்போது இவைகளை புகைப்படமெடுத்த ஹை ரெசெல்யூஷன் இமேஜிங் சயின்ஸ்எக்ஸ்ப்பிரிமெண்ட் (ஹைரைஸ்) ஆய்வாளர்கள் இதற்கு தங்களது விளக்கத்தை அளித்துள்ளனர்.

பண்டைய விண்வெளி பொருள் :
மணல் மேடுகள் உருவாக்கும் அளவிலான குறைந்த மணல் கொண்ட பண்டைய விண்வெளி பொருள்களின் தாக்கத்தினாலும், உள்ளூர் செவ்வாய் காற்றினாலும் இந்த புதிரான வடிவங்கள் உருவாகி இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

'இரு திசை' காற்று :
மணல்மேடுக்குள் இணையாக பயணம் செய்ய முடியாத 'இரு திசை' காற்று மூலம் தான் நேரியல் குன்றுகள் உருவாகியிருக்கின்றன என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

புள்ளி குன்றுகள் :
புள்ளி வடிவிலான குன்றுகள் ஆனது நேரியல் குன்றுகள் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட குறுக்கேட்டில் உருவானவைகள் என்றும், இருப்பினும் இந்த உருவாக்கம் நன்கு புரிந்து கொல்லப்பட்ட ஒன்று என்று கூற இயலாது என்றும் ஹைரைஸ் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க :
செவ்வாய் அரிப்பள்ளங்களுக்கு காரணம் நீர் இல்லையாம். பின் எதனால்.?
எல்லோரா கைலாசநாதர் கோவிலின் 'அதிநவீன' ரகசியங்கள்..!?
மாற்றி எழுதப்படும் அமெரிக்க வரலாறு - சிக்கிய முக்கிய ஆதாரம்..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications