நாசா தேடியது கிடைக்கவில்லை, ஆனால் கிடைத்ததோ அதைவிட சிறப்பு..!
செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரம் கிடைக்கப்பெற்றது என்று நாசா ஏற்கனவே பிரகடனம் செய்தது ஒருபக்கமிருக்க, தற்போது செவாய்யில் நிகழ்த்தப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்பு ஒன்றின் மூலம் அங்கு உயிர் வாழ பொருத்தமான ஆக்சிஜனும் (சுவாசக்காற்று) இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ தகுந்த சூழ்நிலை உள்ளதா என்ற தேடலில் ஈடுபட்டிருக்கும் நாசாவின் மார்ஸ் ரோவர் சிவப்பு கிரகத்தின் பாறைகளை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. சமீபத்தில் நாசா ரோவர் ஆய்வின்படி செவ்வாய் பாறைகளில் மாங்கனீசு காணப்படுகிறது என்று நாசா அறிவித்தது. இந்த தகவலில் இருந்து, செவ்வாய் சூழ்நிலையின் பரிணாமம் அறிந்துக்கொள்ள முடியும்.

எரிமலைபிழம்பு குளிர்ச்சியான பின் உருவாக்கம் பெரும் வகையிலான (பஸால்ட்) பாறையை 2003-ஆம் ஆண்டில் இருந்து நாசா ரோவர் தேடி வந்த நிலையில், அது மாங்கனீசு உள்ளடங்கிய பாறையை கண்டறிந்தது. பஸால்ட் வகை பாறைகளில் கூட மிக குறைந்த அளவிலான மாங்கனீசு தான் இருக்கும், ஆனால் மார்ஸ் ரோவர் கண்டறிந்துள்ள பாறையில் அதிக அளவிலான மாங்கனீசு இருப்பதால் ஒரு காலத்தில் அந்த கருங்கல் ஆனது கரையச்செய்துள்ளது என்பது தெளிவாக தெரிவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் மூலம் செவ்வாய் அதிக அளவு ஆக்சிஜன் நிறைந்த ஒரு கிரகமாக இருப்பதை இந்த கண்டுபிடிப்பு நிரூபிக்கிறது.

முதலில் கிடைக்கப்பெற்ற மாங்கனீசு ஒரு தரவு பிழை என்று நம்பப்பட்டது பின்பு ரோவரின் சக்தி வாய்ந்த லேசர் பயன்படுத்தி பாறைகள் துண்டுகளாக்கி ஆவியாக்கும் முறை மூலம் மீண்டும் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலம் அது மாங்கனீசு தான் என்று உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
போட்டோஷாப் மூலம் அழிக்கப்பட்ட யுஎஃப்ஒ'கள் : உண்மை வெளிச்சத்திற்கு வந்தது..!
ஹாராவின் மர்மமான 'கண் உருவ' நிலவியல், உருவானது எப்படி..?


Click it and Unblock the Notifications