நமது நிலவு ஏலியன்களுக்கு மீன்பிடிவலை போல செயல்படும்: விஞ்ஞானி பரபரப்பு தகவல்.!
வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரம் நாம் நினைப்பதை விட நமது கிரகத்திற்கு மிக நெருக்கமாக இருக்கலாம் என்கிறார் ஹார்வர்ட் விஞ்ஞானி ஒருவர்.

மீன்பிடி வலையாக செயல்படுகிறது
சயின்டிபிக் அமெரிக்கன் இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையில், தத்துவார்த்த இயற்பியலாளர் மற்றும் ஹார்வர்ட் பேராசிரியரான ஆபிரகாம் லோப், நமது நிலவு வேற்றுகிரகவாசிகளுக்கு 'மீன்பிடி வலையாக' செயல்படுகிறது என்று கூறியுள்ளார்

சந்திரனின் மேற்பரப்பு
"இந்த கருத்துருவில் மீன்பிடிவலையாக கருதப்பட்டுள்ள சந்திரனின் மேற்பரப்பு குறிப்பிட்ட காலத்தில் நட்சத்திர கூட்ட பொருட்களை சேகரித்து, மற்ற நட்சத்திரங்களில் வசிப்பிட சூழல்களில் இருந்து வரும் உயிர்கள் நிலவில் வாழ்வதற்காக அவற்றை வழங்கும்" என்று லோவ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இயற்பியல் ஆதாரங்கள்
சந்திரன் புவியியல் ரீதியாக செயலற்றதாக இருப்பதால், விண்கற்கள் அல்லது மற்ற வான் இயற்பியல் ஆதாரங்கள் மூலம் கொண்டுவரப்படும் பொருட்கள் நிலவு பரப்பில் ஆழமான புதைவதற்கு பதிலாக, அங்கேயே மேற்பரப்பில் ஆதாரங்களாக தக்கவைத்துக்கொள்ளும் என்கிறார் லோப்.

விண்மீன் கூட்டத்தினால் இருக்கலாம்
சந்திரனின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் பில்லியன்கணக்கான வருடங்கள் அங்கேயே இருக்கும் என்பதால், சூரியமண்டலத்தில் சுற்றிவரும் பொருட்களுக்கு நிலவு ஒரு தபால்பெட்டி என குறிப்பிடுகிறார் லோப்.
அந்த பாதிப்புகள் பெரும்பாலானவை நம் சூரிய மண்டலத்தில் இருந்து உருவான பொருள்களின் விளைவாக இருக்கலாம் என்றாலும், சமீபத்திய ஆதாரங்கள் நாம் முன்னர் நினைத்ததை விட மிகவும் பொதுவானதாக நமது அண்டத்தின் விளிம்பில் உள்ள விண்மீன் கூட்டத்தினால் இருக்கலாம் என காண்பிக்கிறது.

வால்மீன் மற்றும் சிறுகோள்
சமீபத்தில் வானியலாளர்கள் நமது சூரிய மண்டலத்தில் நுழைந்த இரண்டாவது அறியப்பட்ட இன்டர்ஸ்டெல்லர் பொருளை அடையாளம் கண்டறிந்தனர். 2L / போரிஸ்ஸா டாங் என பெயரிடப்பட்டுள்ள அந்த வால்மீன் ஒரு வருடத்திற்கு நமது தொலைநோக்கிகள் மூலம் தெரியும்.

2017 ஆம் ஆண்டில்
2017 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள், யூமுவுவாவை என பெயரிடப்பட்ட முதல் இன்டர்ஸ்டெல்லர் பொருளை அடையாளம் கண்டனர் . மர்மமான சிகரல் வடிவம்கொண்ட முறையான பெயரிடப்பட்ட அந்த பொருள் வால்மீன் மற்றும் சிறுகோள் ஆகிய இரண்டையும் ஒத்ததாக இருக்கும். ஆனால் அந்த பொருள்களுடன் தொடர்புடைய மற்ற வரையறுக்கப்பட்ட அம்சங்களில் பல இதனுடன் ஒத்திருக்கவில்லை.

வேற்றுலக குப்பைகள்
இந்த பொருட்கள் நிலவில் கொட்டப்படும் வேற்றுலக குப்பைகள் மட்டும் அல்ல என்று கூறும் லோவ், அவற்றை ஆராய்வதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் அவை எவ்வளவு அதிகமாக மறைந்து இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் தெரிந்துகொள்ளமுடியும் என்கிறார் . இந்த அளவீடுகளுடன், சந்திரனின் மேற்பரப்பில் இதுவரை சேகரிக்கப்பட்ட இன்டெஸ்டெல்லர் பொருளின் அளவை கணக்கிட முடியும் என்கிறார்.

வேற்றுகிரகவாசிகளின் நுண்படிமங்களும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் லெப் கூறுகையில், ஃப்ளக்ஸ் மற்றும் ஆற்றல் அளவின் தற்போதைய அளவீடுகளின் அடிப்படையில் - இன்ட்ர்டெல்லார் பொருட்கள், சந்திரன் மேற்பரப்பில் மில்லியனுக்கு 30 என்ற அளவில் இருக்கலாம் என்கிறார். உயிர்களுக்கான முக்கிய ஆதாரப்பொருளான அமினோ அமிலங்கள் நூறு பில்லியனில் சில என்ற அளவில் இருக்கலாம் என்கிறார்.

3.4 பில்லியன்
பூமியில் காணப்படும் 3.4 பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களுக்கு ஒத்த அழிந்த வேற்றுகிரகவாசிகளின் நுண்படிமங்களும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்கிறார் லோப்.

பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக சந்திரன் மேற்பரப்பில் மோதிய தொழில்நுட்ப உபகரணங்களின் தடயங்களை கண்டுபிடிப்பதற்கு இன்னும் உற்சாகம் இருப்பதுடன், வேற்றுலக நாகரிகத்திலிருந்து "நாங்கள் இருக்கிறோம்" என்பதையும் உணர்த்துகிறது என்கிறார் லோவ்.

நிலவில் ஏலியன்கள் அமைத்திருக்கும் நகரம்- புதிய ஆதரத்தை வெளியிட்ட நாசா.
சந்திரனில் ஏலியன்களின் நகரம் மறைந்திருப்பது தற்போது நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
நிலவில் ஏலியன்கள் வாழ்வதற்கு ஏற்ற கால நிலைகள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருது தற்போது நிருபணமாகியுள்ளது.

யுஎப்ஓ வலைதளம்:
யுஎப்ஓ வலைதளத்தில் ஸ்காட்சி வார்னிங் அவர்கள் ஏலியன் குறித்து எழுதி வருகிறார். இதில் , நிலவில் ஒரு ஏலியன்கள் அமைத்திருக்கும் நகரம் தற்போது, நாசாவின் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

32 கி.மீ வரை ஏலியன் நகரம்:
அங்கு வேற்றுகிரக வாசிகள் 20 மைல் முழுவதும் (32 கி.மீ) வரை நகரத்தை அமைத்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
நிலவில் ஏலியன்கள் அமைத்திருக்கும் நகரம் மிகவும் நேர்த்தியாகவும் , திறமையான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா-33 திட்டத்துடன் ராணுவத்திற்கு உதவும் இஸ்ரோ.!

நிலவில் ஏலியன்களின் கோபுரம்:
ஏலியன் மிகவும் சமர்த்தியமாகவும் துணிச்சலாகவும் வேற்றுகிரகத்தில் வெள்ளை நிறத்தில் கோபுரங்கள் போன்று கட்டமைப்புகளை கட்டியுள்ளனர்.
நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளா புகைப்படங்களை துல்லியமாக பகுப்பாய்வு செய்து விண்வெளி ஏஜென்சியின் லூனார் ஆர்பிட் சர்பேஸில் இருப்பதை சுட்டி காட்டியுள்ளனர்.

அப்போல 11 விண்கலன் :
அப்போல 11 விண்கலன் மூலம் நாசா நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்த போது, அங்கு ஏலியன்கள் கட்டியுள்ள நகரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

1966ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி எடுத்த புகைப்படங்களில் ஒன்று. அப்போது மூடிய நகரமாக நிலவில் இருப்பதை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் குறித்து தற்போது வேற்றுகிரக ஆராய்ச்சியாளர் காட்சி வாரிங் யுஎப்ஓ வலைதளத்தில் எழுதி வருகிறார்.
2033 ஆம் ஆண்டில் மனிதர்களைச் செவ்வாயில் தரையிறக்கும் நாசா.!

கட்டமைப்பு வெளிப்படுத்துதல்:
நிலவில் வெள்ளை நிறத்தில் பிரபதிபலிக்கும் ஏலியன்கள் நகரம். அங்குள்ள கட்டமைப்புகள் அழகாகவும் இருப்பதகாவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த புகைப்படத்தின் இருண்ட நிழலின் மையத்தில் உட்கார்ந்திருப்பதை காண முடியும்.

பாரிடோலியா மக்கள் இல்லாத வடிவங்கள், முகங்கள் மற்றும் வடிவங்களைக் காணும்படி செய்கின்றனர். இது பெரும்பாலும் சந்திரன் அல்லது செவ்வாயின் படங்களில் வேற்றுகிரக வாசிகளை கண்டறிவதற்கு வழிவகுக்கிறது என்று நாசா கூறியுள்ளது.

உளவியல் நிகழ்வு:
"Pareidolia மக்கள் மேகங்கள், ராக் உருவாக்கம், அல்லது வேறுபட்ட பொருள்கள் அல்லது தரவு அடையாளம் வடிவ வடிவங்கள் பார்க்க அங்கு உளவியல் நிகழ்வாகவும் இருக்கலாம் என்றும் வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
News Source : www.dailymail.co.uk


Click it and Unblock the Notifications