பெங்களூரில் தமிழக மாணவர்களுடன் சந்திராயன்-2 நிலவில் தரையிறங்குவதை பார்க்கும் மோடி.!
நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை பிரதமர் மோடியுடன் தமிழக மாணவர்கள் உட்பட 70 பேர் பார்வையிடுகின்றனர். இந்த நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடக்கின்றது.

நிலவின் தென்துவரத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 22ல் சந்திராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக இஸ்ரோ ஏவியது.

விக்ரம் லேண்டர்
இந்த விண்கலன் ஆர்பிட், லேண்டர், ரோவர் என மூன்று நிலைகளை கொண்டதாகும். கடந்த சில நாட்களுக்கு முன் லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

நிலவில் தரையிறங்குகிறது
நாளை மறுநாள் (செப்.7ம்) நிலவில் தரையிறங்குகிறது. இதை பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையத்தில் இருந்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார். அவருடன் அமர்ந்து நேரில் காட்சியை காண மாணவர்களுக்கு ஆன்லைன் விநாடி வினா போட்டி கடந்த மாதம் நடத்தப்பட்டது.

தமிழக மாணவர்கள்
இதில், 8 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த ரியா ராஜேஷ், பிரனவ், புதுச்சேரியை சேர்ந்த மதுமிதா, ஜி, சந்தோஷ் உட்பட 70 மாணவர்கள் வெற்றி வெற்றுள்ளனர். இவர்களில் 16 பேர் கேந்திரியா வித்யாலா பள்ளிகளை சேர்ந்தவர்கள்.

தரையிறங்கும் நேரம்
லேண்டர் 'விக்ரம்' (ரோவர் 'பிரக்யன்' உள்ளே) செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணி வரை சந்திரனின் மேற்பரப்பில் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகமே ஆவலோடு எதிர்பார்ப்பு
இந்தியா அனுப்பிய சந்திராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக தரையிங்குவதை காண உலகமே ஆவலோடு எதிர்பார்த்துள்ளது. எந்த நாடும் செய்யாத சாதனையாக சந்திராயன்-2 நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை செய்ய இருகின்றது.

தடைகளையும் தாண்டி
சந்திராயன்-1 திட்டத்திற்கு பிறகு, சந்திராயன்-2 திட்டம் துவங்கும் முதல் பல்வேறு தடைகள் ஏற்பட்டது. பிறகு, தொழில்நுட்ப கோளாறு , கால நிலை உள்ளிட்டவைகளாலும் பல்வேறு முறை தள்ளி வைக்கப்பட்டது.

நிலவில் தண்ணீர்
நிலவின் தென் துருவத்தில் அதிகளவில் தண்ணீர் இருக்கின்றது. இங்கு மற்ற உயிரினங்கள் எவ்வாறு வாழ முடியும் என்றும் சந்திராயன்-2 ஆய்வு செய்கின்றது. அங்குள்ள கனிமங்கள் குறித்து இந்த ஆய்வு முக்கிய இடம் பெறும். விண்வெளியில் மிகப்பெரிய சாதனைனையும் செய்கின்றது.


Click it and Unblock the Notifications