இந்தியா வாங்கும் 3000 ஏவுகணையால் பாக். சீனாவுக்கு இனி சங்குதான்.!
இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை இந்தியா வாங்கியது. இதைத்தொடர்ந்து பிரான்சிடம் இருந்து இந்தியா ரபேல் போர் விமானங்களையும் வாங்க இந்தியா இருக்கின்ற
இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்கியது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் பலர் பலியாகினர். தனது ராணுவத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை பெருக்கின.

இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை இந்தியா வாங்கியது. இதைத்தொடர்ந்து பிரான்சிடம் இருந்து இந்தியா ரபேல் போர் விமானங்களையும் வாங்க இந்தியா இருக்கின்றது.
இந்நிலையில் , 3000 எண்ணிக்கையில் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது. இதனால், சீனா, பாகிஸ்தான் அலறிக் கொண்டிருக்கின்றது.

எல்லையில் கண்காணிக்கும்:
பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வரும் 2025-ம் ஆண்டுக்குள் போர் ஆயுதங்களை மேம்படுத்தி எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த முடிவு செய்தது.

600 பீரங்கி:
இருகட்டமாக ரஷியாவிடம் இருந்து T-90 உள்ளிட்ட சுமார் 600 பீரங்கி டாங்கி வாகனங்களை வாங்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

எல்லையில் நிறுத்தப்படும்:
இந்த பீரங்கிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரமுள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. இவை ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தப்படலாம் என கருதப்படுகிறது.

இத்தாலில் இருந்து 120 துப்பாக்கி:
இத்தாலியில் இருந்து ‘எஸ்.பி. மைக்' ரகத்தை சேர்ந்த 245 அதிநவீன துப்பாக்கிகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளதாகவும் அவற்றில் 120 துப்பாக்கிகள் வந்து சேர்ந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்:
ஏற்கனவே இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதால், பாகிஸ்தானின் இந்த செயல் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்ததலை ஏற்படுத்தியது.

இந்தியாவின் விபரீத முடிவு:
ரஷ்யாவிடம் இருந்து ஜிபிஎஸ் பீரங்கிகளை பாகிஸ்தான் வாங்க முனைப்பு காட்டி வருவதால், இந்தியா இதற்கு எதிர்மறையாக பிரான்சிடம் இருந்து இந்தியா பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

3000 ஏவுகணைகள்:
பிரான்சிடம் இருந்து ரபேல் விமானத்தை போலவே பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது. சுமார் 3000 ஏவுகணை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேல் போர் விமானம்:
இந்திய விமானப்படையை வலுவாக்க பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் விமானங்கள் 36-யை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதே போன்று அந்நாட்டிடம் இருந்து மேலும் ஆயுத கொள்முதலை மேற்கொள்ள இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மிலன் 2டி பீரங்கி:
இதன் படி, எதிரி நாடுகளின் பீரங்கி படைகளுக்கு எதிரான ஆயுதங்களை வாங்கும் முயற்சியில், இந்திய ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இதற்காக 1000 கோடி ரூபாய் செலவில், பிரான்சில் இருந்து 3,000 மிலன் 2டி பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம்:
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, மிலன் 2டி பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவது குறித்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்டக் கூட்டத்தின் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

7000 எதிர்ப்பு ஏவுகணை தேவை:
இந்திய ராணுவத்தில் சுமார் 850 வகையான ஏவுகணைகள் உள்ளன. இந்நிலையில் சுமார் 70,000 பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகள் தேவைப்படுவதாக ராணுவம் கூறியுள்ளது. இதன் அடிப்படியில் முதற்கட்டமாக 3000 மிலன் -2டி பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளை வாங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்கும் முறை:
மிலன் 2 டி ஏவுகணைகள் வெப்பத்தை அடையாளம் கண்டு இயங்கும் திறன் கொண்டவை. எதிரி நாட்டு பீரங்களில் இருந்து வெளியாகும் வெப்பத்தை கண்டு உணர்ந்து, அவற்றின் இருப்பிடத்தை துல்லியமாக கணித்து தாக்கும் திறன் இந்த ஏவுகணைகளுக்கு உண்டு. இதனால் போர்களத்தில் எதிரிகளை திக்குமுக்காட வைப்பதோடு, இந்திய ராணுவத்தின் வலிமையை அதிகரிக்க முடியும்.

சீனாவுக்கும் அலறல்:
இந்தியா தனது பாதுகாப்பு படையில் பிரான்ஸ் நாட்டு ஏவுகணைகளையும் புகுத்துவதால், சீனாவின் பீரங்கி தாக்குதலுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications