சத்தமில்லமால் நாசாவின் உயர்ந்த கௌரவத்தை வென்ற ஹன்வந்த் சிங்!
கடந்த 30 ஆண்டுகளாக, அவர் வளிமண்டலத்தின் கலவையும் வேதியியல்மையையும் படித்தும் பின்பு ஆய்வு செய்தும் 220 விஞ்ஞான தாள்களையும்இ பாடநூல்களையும் வெளியிட்டுள்ளார்
நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும், குறிப்பாக விண்வெளி ஆய்வு மற்றும் விண்ணூர்தியியல் ஆராய்ச்சி போன்ற பல்வேறு சிறபப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த நாசா அமைப்பு, மேலும் இந்த
நாசா அமைப்பில் பல்வேறு இந்தியர்கள் பணி மேற்கொண்டுள்ளனர் என்று தான் கூறவேண்டும்.

அமெரிக்காவின் தேசிய ஏரோனாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் போன்றவற்றில் சிறந்த சேவை மற்றும் பணிகளுக்கு வேண்டி நாசா உயர்ந்த கௌரவத்தை வழங்கும். அதன்படி இந்த ஆண்டு NASA Distinguished Service Medal என்ற கௌரவத்தை நாசாவில் பணியாற்றிய இந்தியர் டாக்டர் ஹன்வந்த் சிங் பெற்றுள்ளார்.

வேதியியல்
வளிமண்டல வேதியியல் (Atmospheric chemistry) என்பது வளிமண்டல அறிவியலின் ஒரு பிரிவாகும். இப்பிரிவில் புவியின் வளிமண்டலம் மற்றும் மற்ற கிரகங்கள் தொடர்பான அறிவியல் ஆராயப்படுகிறது. இயற்பியல், வானிலையியல், கணிப்பொறி ஒப்புருவாக்கம், கடலியல் , நிலவியல் மற்றும் எரிமலையியல் போன்ற பலதுறை ஆராய்ச்சிகளையும் உள்ளடக்கியதொரு பிரிவாக வளிமண்டல வேதியியல் விரிந்துள்ளது.

எரிமலை உமிழ்வுகள்
வளிமண்டலத்தின் பகுதிப்பொருட்கள் மற்றும் வேதியியல் இரண்டும் பல்வேறுபட்ட காரணங்களால் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் வளிமண்டலம் மற்றும் உயிரினங்களுக்கு இடையில் நிலவும் இடைவினைகளே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான காரணமாகும். எரிமலை உமிழ்வுகள், மின்னல், விண்பொருட்களைச் சுற்றிலும் உள்ள கொரோனாவில் இருந்து வெளிப்படும் துகள்களின் மோதல் போன்ற இயற்கைச் செயல்முறைகளின் விளைவாக வளிமண்டலத்தின் பகுதிப்பொருட்களில் மாறுதல்கள் நிகழ்கின்றன.இக்காரணங்கள் மட்டுமில்லாமல் இயற்கைக்கு எதிரான மனிதனின் செயற்பாடுகளாலும் வளிமண்டலத்தின் பகுதிப்பொருட்களில் மாறுதல்கள் ஏற்பட்டு மனித உடல்நலத்துக்கு, தாவரப் பயிர்களுக்கு, சூழ்நிலைத் தொகுப்புக்கு கேடுகள் உண்டாகின்றன.

டாக்டர் ஹன்வந்த் சிங் :
வேதியியல் பொறியியலாளர் டாக்டர் ஹன்வந்த் சிங் அவர்கள், புவியின் உடல் அமைப்பு மற்றும் அதன் வளிமண்டலத்தைப் பற்றி ஆராயும் துறையில் வேலைபார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹன்வந்த் சிங் அவர்கள் நேரடி கண்காணிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் பூமியின் வளிமண்டலத்தின் வேதியியல் மற்றும் காலநிலை மனித நடவடிக்கைகளின் தாக்கம் பற்றி ஆய்வு செய்தார்.

இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
கடந்த 30 ஆண்டுகளாக, அவர் வளிமண்டலத்தின் கலவையும் வேதியியல்மையையும் படித்தும் பின்பு ஆய்வு செய்தும் 220 விஞ்ஞான தாள்களையும், பாடநூல்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் டாக்டர் ஹன்வந்த் சிங் 1968 ஆம் ஆண்டில் டெல்லியிலுள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் தனது BTech- ஐ நிறைவு செய்து 1972 ஆம் ஆண்டில் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்திலிருந்து தனது PhD-ஐப் பெற்றார்.

உயிரனங்கள்
வளிமண்டலத்தில் கார்பன் டெட்ராக்ளோரைடு மனித உருவில் இருந்ததை நிரூபிக்காததால், பலவகை உயிரனங்கள் இருந்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications