ஹைட்ரஜன் எரிபொருள் கண்டுபிடித்த தமிழன்: கைவிட்ட இந்தியா-கைகொடுத்த ஜப்பான்.!
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எரிபொருளை விஞ்ஞானிகளால் கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூட கூறலாம். ஆனால், தமிழர் ஹைட்ராஜன் எரிபொருளை உருவாக்கி இதன் மூலம் வாகங்களையும், கப்பலையும் இயக்க ம
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எரிபொருளை விஞ்ஞானிகளால் கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூட கூறலாம்.
ஆனால், தமிழர் ஹைட்ராஜன் எரிபொருளை உருவாக்கி இதன் மூலம் வாகங்களையும், கப்பலையும் இயக்க முடியும் என்று நிருபித்துள்ளார்.

இவர் தமிழன் என்பதால் இவரின் கண்டுபிடிக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இவர் நம்பிக்கை தரளால் ஜப்பான் அரசின் பார்வைக்கு கொண்டு சென்றதால், உடடினயாக ஏற்றுக்கொண்டு பாராட்டையும் தெரிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

பெட்ரோல், டீசல் :
இன்று வாகனங்களில் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவை எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றது.
இருந்தாலும் இன்று வரை இவற்றிக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கவில்லை.

சுற்றுச்சூழல் மாசு:
உலகில் பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவை எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றது. இதனால் வாகனங்களில் வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மனிதன் சுவாசிக்கவும் பிரச்னை ஏற்படுகின்றது.

திருப்பூரை சேர்ந்தவர்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் சவுந்தரராஜன் குமாரசாமி. இவர் ஹைட்ராஜனை எரிபொருளாக பயன்படுத்தும் புதிய தொழில்நுடப்பத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

100 சிசி வாகனத்தை இயக்க முடியும்:
நீரை கொதிக்க வைத்து அதன் நீராவியை குளிரச் செய்வதால், டிஸ்டில்டுவாட்டர் கிடைக்கின்றது. இதை 10 லிட்டர் அளவுக்கு இன்ஜினில் ஊற்றினால் ஒரு கிலோ ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் 100 சிசி திறனுள்ள இரு சக்கர வாகனத்தை 200 கி.மீ தூரம் இயக்க முடியும்.

சவுந்தரராஜனின் நம்பிக்கை:
காரில் துவங்கி கப்பல் வரை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்று சவுந்தர்ராஜன் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். ஹைட்ரஜன் வாயுவை உபயோகப்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகளும் இருக்கின்றன.

எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை:
விலை அதிகம், கையாளுதல் கடினம், இருப்பு வைப்பதில் சிக்கல் என பிரச்னைகள் இருக்கின்றன. இவர் கண்டுபிடித்துள்ள எஞ்சின் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து, எரிபொருளாக மாற்றும். அந்த இன்ஜினில் இருந்து நீராவியும் ஆக்ஸிஜன் மட்டுமே வெளியேறும். இயற்கைக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

கைகொடுத்த ஜப்பான்:
இந்த கண்டுபிடிப்பு குறித்து பல்வேறு கார், பைக் கம்பெனிகளையும் அணுகினார். யாரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த 10 ஆண்ட கனவு கண்டு உருவாக்கியுள்ளதால், வீணாக விடமாட்டேன் என்று ஜப்பான் அரசு பார்வைக்கு கொன்று சென்றார்.
இவரை உடனடியாக அழைத்து பாராட்டையும் தெரிவித்தது. பிறகு, இதை ஜப்பபானில் முதலில் உற்பத்தி செய்யும் திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்னதாக அவர் காப்புரிமையும் பெற்றுள்ளார்.

தலைநிமிர்ந்து நிற்கிறார்:
தான் 11ம் வகுப்பு வரை படித்து இருந்தாலும், கண்டுபிடிப்புக்கு படிப்பு முக்கியமல்ல என்பதையும். தமிழனால் எதையும் கண்டுபிடிக்கவும் சாதிக்க முடியும் என்று தற்போது தலைநிமிர்ந்து நிற்கின்றார் இவர்.


Click it and Unblock the Notifications