செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டுவந்த மங்கள்யான் விண்கலம் செயலிழந்தது: காரணம் என்ன?
சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் ஆய்வு மேற்கொண்டு வரும் மங்கள்யான் செயற்கைக்கோளில் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததை அடுத்து, அதன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இஸ்ரோ
அதாவது கடந்த 2013-இல் இஸ்ரோ அமைப்பு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரூ450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் பருவநிலை மாறுபாடுகள், வளிமண்டல சூழல்கள் குறித்துப் பல தகவல்கள் இதன் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளன.

4-வது விண்கலம்
அதேபோல் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அதன் மீது படிந்துள்ள தாதுக்கள் மற்றும் மீத்தேன் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் இந்த மங்கள்யான் விண்கலம் பயன்பட்டது. பின்பு ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை அடைந்த 4-வது விண்கலம் என்று பெருமைக்குரியது இந்த மங்கள்யான்.

குறிப்பாக மங்கள்யான் விண்கலம் ஆனது 2014-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. பின்பு மங்கள்யான் விண்கலம் பல்வேறு தகவல்களை தொடர்ந்து அனுப்பி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் மற்றும் பேட்டரி
இந்நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட மங்கள்யான் விண்கலத்தில் தற்போது எரிபொருள் மற்றும் பேட்டரி முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பின்பு அந்த விண்கலத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது என்று தகவல் வெளிவந்துள்ளது.

கிரகணம்
அதேபோல் விண்வெளியில் அண்மையில் உருவான மிக நீண்ட கிரகணம் ஒன்றால் அந்த விண்கலத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டது. குறிப்பாக ஒரு கிரகணம் 7½ மணி நேரம் நீடித்தது. ஆனால் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் வரை கிரகணத்தை தாங்கும் வகையில் தான் விண்கலத்தின் பேட்டரி அமைக்கப்பட்டது.

குறிப்பாக நீண்ட நேரம் கிரகணம் நீடித்ததால் அதன் பேட்டரி திறன் குறைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த மங்கள்யான் விண்கலம் சுமார் 8 ஆண்டுகள் அருமையாகச் செயல்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

விண்வெளிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது
இந்த விண்கலம் தனது பணியை சிறப்பாக செய்துள்ளது. அதேபோல் 8 ஆண்டுகளாக அறிவியல் பூர்வ தகவல்களை வழங்கி வந்த மங்கள்யானின் விண்வெளிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இஸ்ரோ நிறுவனம் விரைவில் வெளியிடும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் வெறும் ஆறு மாதங்கள் மட்டும் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் எதிர்பார்த்ததை விட அதிக காலம்உழைத்துப் பல பயனுள்ள தகவல்களை நமக்கு அளித்துள்ளது என்று இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications