149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.! நேரம்?
பொதுவாக பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது, மேலும் இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழந்து அதனை மறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே..
குறிப்பாக 149 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அபூர்வமான இந்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை நிகழ உள்ளது. மேலும் சந்திர கிரகண நிகழ்வின்போது பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே சந்திரனை மறைக்கும்.

அறிவியல் ஆய்வாளர்கள்
சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் அமையாமல் பகுதியளவு நேர்கோடாக வருவதால் பாதி சந்திர கிரகணம் நாளை நடக்கும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குரு பூர்ணிமா பண்டிகை
மேலும் இந்த சந்திர கிரகணம் 149 ஆண்டுகளுக்குப் பின்பு வரும் நேரத்தில் இந்தியாவில் குரு பூர்ணிமா பண்டிகை
கொண்டாடப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு. மிகவும் அபூர்வமான இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால்கூட பார்க்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நாடுகளில் ..
இந்த சந்திர கிரகணம் சில நாடுகளில் ஜூலை 16ஆம் தேதி இரவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்தியாவில் சந்திர கிரகணம் ஜூலை 17ஆம் தேதி (நாளை) அதிகாலை நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிழல் சந்திரன் மீதிருந்து விலகிக்கொண்டே வரும்
நள்ளிரவு 12.12-மணிக்கு துவங்கும் இந்த சந்திர கிரகணம் நிகழ்வு, மெல்ல மெல்ல வளர்ந்து அதிகாலை 1.31 மணிக்கு முழுமை அடையும் என்றும், பின்னர் சிறது சிறிதாக பூமியின் நிழல் சந்திரன் மீதிருந்து விலகிக்கொண்டே வரும். குறிப்பாக அதிகாலை 4.29மணிக்கு சந்திர கிரகணம் முடிந்துவிடும்.

2021-ம் ஆண்டுதான் முழுமையான கிரகணம்
இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் கண்டு களிக்கலாம், இதற்குப் பிறகு இந்தியாவில் 2021-ம் ஆண்டுதான் முழுமையான கிரகணம் தோன்றும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications