இஸ்ரோவின் புதிரான டிவிட் கேள்வி: சந்திரன் எங்கிருந்து வந்தது? தெரிந்தால் சொல்லுங்கள்.!
இஸ்ரோ வரும் ஜூலை 15-ம் தேதி சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவத் தயார் நிலையில் உள்ளது, குறிப்பாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப உள்ளதாக இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திராயன்-2 விண்கலம்
இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன்-2 விண்கலம் 3290கிலோ எடை கொண்டதாக இருக்கும். பின்பு
சந்திரயான் 2 விண்கலம் சந்திரனின் தென் துருவப் பகுதிக்குச் செல்லும்.

தென் துருவப் பகுதிக்கு எந்த நாடும் சென்றதில்லை
இதுவரை சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு எந்த நாடும் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இஸ்ரோ உலகின் மிகவும் குழப்பமான அறிவியல் விவாதங்களில் ஒன்றான சந்திரன் தோற்றம் குறித்து ட்வீட் வெளியிட்டு உள்ளது.

நான்கு கோட்பாடுகளை விளக்கி உள்ளது
அது என்னவென்றால் சந்திரன் எங்கிருந்து வருகிறது, என்று இஸ்ரோ ஒரு படத்துடன் ட்வீட் செய்துள்ளது, சந்திரனின் தோற்றத்திற்குப் பின்னால் இருக்கும் நான்கு கோட்பாடுகளை விளக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கோட்பாடு:
பிளவு கோட்பாடு-பூமியின் சுழற்சி வேகம் காரணமாகச் சந்தின் பூமியில் பிளவுபட்டுப் பிரியக் காரணமாக அமைந்தது, அதே நேரத்தில் அதன் ஈர்ப்பு விசையானது இந்த பகுதியை நங்கூரமிட்டு நமது இயற்கை செயற்கோளாக மாறியது.

இரண்டாவது கோட்பாடு:
ராட்சத தாக்கக் கருதுகோள்- பொதுவாகப் பூமிக்கும் மற்றொருவான வான் பொருளுக்கும் இடையிலான மோதலின் போது கிரகத்தின் ஒரு பகுதி உடைந்து சந்திரனாக மாறியது.

மூன்றாவது கோட்பாடு:
இணை கூட்டல் கோட்பாடு- ஒரு ஒற்றை வாயு ஒரு கருந்துளையைச் சுற்றும் போது சந்திரனையும் பூமியையும் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது கோட்பாடு:
பிடிப்பு கோட்பாடு- பறக்கும்போது பூமியின் ஈர்ப்பு விசையால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு சந்திரன் ஒரு இணைக்கப்படாத பொருளாக இருந்தது.
அதன்படி இந்த நான்கு கோட்பாடுகளில் சரியானது எது? என இஸ்ரோ கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் ஐந்தாவது கோட்பாடு இருக்குமா? என இஸ்ரோ தற்சமயம் கேள்வி எழுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications