Just In
- 1 hr ago WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- 1 hr ago மிரள விடும் ஒன்பிளஸ்.. பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. 8GB ரேம்.. 50MP கேமரா.. புதிய 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
- 1 hr ago ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.21475 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 108MP கேமரா.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 1 hr ago மார்ச் 22 குள்ள.. இந்த 2 Samsung போனுல 1 வாங்கிடுங்க.. ரூ.500, ரூ.1000 இல்ல.. ரூ.17,000 லாபம்.. உட்றா வண்டிய!
Don't Miss
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- News "ஜெயலலிதாவை எப்படியெல்லாம் கேவலப்படுத்தியது திமுக.. நினைச்சு பாருங்க.." சேலத்தில் சீறிய மோடி!
- Movies நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கினாரா கமல்ஹாசன்?.. பல வருட ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
போருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.!
இனிமேல் எலைக்குள் நுழைந்தால் இஸ்ரோவின் புது செயற்கைகோள் கண்டறியந்து அப்போதே இந்திய ராணுவத்திற்கும் மத்திய உள்துறை பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் தகவல் அளித்து விடும். இதன் மூலமாக இந்திய எல்லைக்குள் நு
இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கும், எல்லையை ஆக்கிரமித்து கூடாரம் அமைக்கும் சீனாவுக்கும் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ தற்போது இந்த பிரச்னையை தீர்க்க புது தொழில் நுட்பத்தை கையில் எடுத்துள்ளது.
இதன் மூலமாக இந்திய எல்லைக்குள் நுழைவது முறியடிக்கப்படும் இந்த பணியில் இஸ்ரோவின் புது செயற்கைகோள் களமிறிங்குகின்றது.
டிஜிட்டல் இந்தியா:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றது முதல் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பல்வேறு துறைகளில் புகுத்தி வருகின்றது. மேலும், இஸ்ரோ மூலம் 2021ம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.
மேலும், இஸ்ரோ மூலம் ராக்கெட்களை செலுத்தி பன்னாட்டு வர்த்தகத்தையும் கையாண்டு வருகின்றது. டிஜிட்டல் இந்திய திட்டத்தில் இஸ்ரோவுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.
பாகிஸ்தான்:
இந்திய எல்லைக்கு சீனாவும் பாகிஸ்தானும் அத்துமீறி வருகின்றது. இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சுடு நடத்தி வருகின்றது. மேலும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர்.
சீனா:
இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்து தன் ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது சீனா. மேலும், அருணாச்சல பிரதேசத்தின் ஒரு சில இடங்களையும் சீனா ராணுவம் ஆக்கிரமித்துள்ளது.
மேலும், எல்லையில் ராணுவத்தை இந்திய எல்லைக்குள் அனுப்பி முகாம் அமைக்கும் வேலைகளிலும் சீனா ஆர்வம் காட்டி வருகின்றது.
அத்துமீறல்கள்:
இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-சீனா எல்லைகளில் எப்போதும் பதற்றம் நீடித்து வருகிறது. அத்துமீறல்கள், துப்பாக்கிச் சண்டைகள், ஊடுருவல்கள், ஆக்ரமிப்புகள் என தொடர்ந்து அண்டை நாட்டவரிடமிருந்து எல்லையைப் பாதுகாக்க ஏராளமான வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.
இஸ்ரோவுக்கு ஒப்புதல்:
இந்நிலையில் எல்லைகளைக் கண்காணிக்கவும் பாதுகாக்கவும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடியுள்ளது. இது தொடர்பான ராணுவத்தினரின் பரிந்துரைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இஸ்ரோ செயற்கைகோள்:
சாட்டிலைட் மூலமாக எல்லையை பாதுகாக்க திட்டமிடப்பட்டு இதற்கென பிரத்தியேக செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.
துணை ராணுவத்திற்கு உதவும்:
உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவப் படையினருக்கு இந்த செயற்கைக் கோள் வழிகாட்டியாக திகழும்.
செயற்கோள்-ராணுவம்:
இதன் மூலம் எங்கெங்கு படைகளைக் குவிக்க வேண்டும் என்பதையும் எந்த இடத்தில் இருந்து படைகளை நீக்க வேண்டும் என்றும் செயற்கைக்கோள் வழிகாட்டுதலின் அடிப்படையில் ராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பார்கள்.
பயன்பாட்டிற்கு வரும்:
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் எல்லைப் பாதுகாப்பு பணி மேம்படுத்தப்படும். இந்த நடவடிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் அமலுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ளது.
ஊடுறுவலுக்கு முற்றுப்புள்ளி:
இந்திய எல்லைக்குள் சீனா, பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நுழைந்தால், இஸ்ரோவின் பிரத்யேக செயற்கைகோள் மூலம் அவர்களை ஊடுறுவலை இந்தியா முற்றுப்புள்ளி வைக்கும் என்று இந்திய சார்பில் நம்படுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470