விண்வெளிக்கு மனிதனை தனி நாடாக அனுப்பும் இந்தியா கெத்து: கூட்டணி பாக்கிஸ்தான் வெத்து.!
இந்தியா தனி ஆளாக எந்த நாட்டுடனும் கூட்டு சேராமல் இந்தியா கெத்தாக வரும் 2021ம் ஆண்டிற்கு அனுப்ப இருக்கின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் சீனாவுடன் கூட்டு சேர்ந்தது வெத்தாகத்தான் தெரிகின்றது.
இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்று மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது. மற்ற நாடுகள் எல்லாம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பியதாக பெருமை பேசி வந்தன.

இந்தியா சுதந்திரம் அடைந்து, 72 ஆண்டை கடந்து விட்டது. இந்நிலையில் மற்ற நாடுகளும் புரட்சி செய்த நிலையில், இந்தியா உறங்கிய யானை எழுந்து விட்டது போல, தற்போது விண்வெளிக்கும் மனிதனை அனுப்ப முன் வந்து விட்டது.
இந்தியா தனி ஆளாக எந்த நாட்டுடனும் கூட்டு சேராமல் இந்தியா கெத்தாக வரும் 2021ம் ஆண்டிற்கு அனுப்ப இருக்கின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் சீனாவுடன் கூட்டு சேர்ந்தது வெத்தாகத்தான் தெரிகின்றது.

பிரதமர் மோடி பேச்சு:
கடந்த 72ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி விண்வெளிக்கு மனிதர்களை விரைவில் அனுப்பும் என்று பேசினார். மேலும், இந்த திட்டத்தின் பெயர் சுகன்யான் என்னும் குறிப்பிட்டார். மேலும், உறங்கிய யானை எழுந்து நின்று விட்டது உயர்வாக பேசினார்.

இஸ்ரோவுக்கு நிதி ஒதுக்கீடு :
இந்த பணிகளை இஸ்ரோவிடம் (இந்திய விண்வெளி நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டது. மேலும், இதற்காக சுமார் 10,000 ஒது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தான ஆயத்த பணிகளும் மும்முரமாக நடந்து வந்தன.

விமானப்படையிடம் ஒப்படைப்பு:
ககன்யான் விண்வெளித் திட்டத்திற்கு 10 விண்வெளி வீரர்களை தயார் செய்யும் பொறுப்பை விமானப் படையிடம் இஸ்ரோ வழங்கியுள்ளது.

2021ம் ஆண்டு இலக்கு:
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2021ஆம் ஆண்டு டிசம்பரில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

10 பேர் தேர்வு செய்து பயிற்சி:
இதற்காக மனம், உடல், உளவியல் குறித்த பரிசோதனை செய்து 10 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு இந்திய விமானப் படையை இஸ்ரோ கேட்டுக் கொண்டுள்ளது.

மூன்று பேர் தேர்வு செய்யப்படுவார்கள்:
பெங்களூருவில் வைத்து 10 பேருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வெளிநாட்டிலும் பயிற்சிகள் கொடுக்கப்படும். இதைத் தொடர்ந்து 10 பேரில் சிறந்த மூன்று பேர் தேர்வு செய்யப்படுவர் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் திட்டம்:
சீனாவின் உதவியோடு, பாகிஸ்தான் முதன்முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பவுள்ளது. 2022-ம் ஆண்டின்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ஒப்புதல் அளித்த இம்ரான் கான்:
விண்வெளித் திட்டம் தொடர்பாக பாகிஸ்தானின் அமைச்சரவை கூட்டம் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இதில் சீனா உடனான கூட்டு திட்டத்திற்கு இம்ரான் கான் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

சீனாவுடன் கூட்டு பாகிஸ்தான்:
இந்த திட்டம் தொடர்பாக பாகிஸ்தானின் சுபார்கோ என்று அழைக்கப்படும் விண்வெளி ஆய்வு மையமும், சீன கம்பெனியும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

செயற்கைகோள் ஏவியது பாகிஸ்தான்:
முன்னதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 செயற்கைக் கோளை சீன ராக்கெட்டின் உதவியால் பாகிஸ்தான் விண்ணில் செலுத்தியது. இந்த திட்டம் தொடர்பாக பாகிஸ்தானுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரில் சென்று ஆய்வும் நடத்தினார்.

இந்தியா தான் கெத்து:
இந்தியா-பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து 72 ஆண்டை கடந்து விட்டன. மேலும், எந்த ஒரு துறையிலும் சரியான வளர்ச்சியில்லாமல் பாகிஸ்தான் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக மதவாதம், பழமைவாதம், தீவிரவாதம் பாகிஸ்தானுக்கு தடையாக இருக்கின்றது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பதில் பாகிஸ்தான் சீனாவுடன் கூட்டு, ஆனால் இந்தியா தனி நாடாக எதிர் கொள்வதில் இந்தியா தான் கெத்து.


Click it and Unblock the Notifications








