தீவிரவாதத்தை அழிக்க இந்தியா ஏவும் சேட்லைட்: பதறும் பாகிஸ்தான்.!

இதற்கிடையே அதிநவீன ரேடார் செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அந்த செயற்கைகோளுக்கு ரிசாட்-2 பி.ஆர்.1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

|

விரைவில் நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை ஏவுவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் 6-ந்தேதி அந்த விண்கலம் நிலாவில் தரை இறங்க உள்ளது.

பூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ.. பூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..

இதற்கிடையே அதிநவீன ரேடார் செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அந்த செயற்கைகோளுக்கு ரிசாட்-2 பி.ஆர்.1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

 ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து ஏவுதல்:

ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து ஏவுதல்:

வருகிற 22-ந்தேதி அந்த செயற்கைகோள் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கை கோளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

துல்லியமாக படம் பிடிக்கும்:

துல்லியமாக படம் பிடிக்கும்:

இந்தியாவில் உள்ள கட்டிடங்கள் உள்பட தரையின் அனைத்து பகுதிகளையும் துல்லியமாக படம் பிடிக்கும் கருவிகள் இந்த செயற்கைகோளில் இடம் பெற்றுள்ளன. ஒரு நாளைக்கு ஒரே இடத்தை 3 தடவை படம் பிடிக்கும் ஆற்றல் இந்த நவீன கருவிகளுக்கு உள்ளது.

இந்தியாவை முழுமையாக கண்காணிக்கும்:

இந்தியாவை முழுமையாக கண்காணிக்கும்:

இதன் மூலம் நாட்டின் எந்த பகுதிகளிலும் பயங்கரவாத செயல்கள் நடப்பதை உடனுக்குடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த செயற்கைகோள் மூலம் இந்தியாவை முழுமையான கண்காணிப்பில் வைத்திருக்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தீவிவாதிகளை கண்டுபிடிக்கும்:

தீவிவாதிகளை கண்டுபிடிக்கும்:

எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளை உடனுக்குடன் கண்டுபிடிக்க இந்த செயற்கைகோள் உதவியாக இருக்கும். கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவினால் இந்த செயற்கைகோள் மிக துல்லியமாக காட்டி கொடுத்து விடும்.

ரிசாட்-1 செயற்கைகோள்:

ரிசாட்-1 செயற்கைகோள்:

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலுக்கு இதுபோன்ற ரிசாட்-1 செயற்கை கோள் தான் கைகொடுத்து உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

பதறும் பாகிஸ்தான்:

பதறும் பாகிஸ்தான்:

ஏற்கனவே இந்தியா பல்வேறு முறை சர்ஜிக்கல் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. மேலும், இதுபோன்ற செயற்கைகோளளை ஏவுவதால், தங்கள் நாட்டை சேர்த்து இந்தியா முழுமையாக கண்காணிக்கும் என்று பாகிஸ்தான் கதறுகின்றது.

Best Mobiles in India

English summary
ISRO to launch RISAT2BR1 from Sriharikota on May 22 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X