சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.!
உலகத்தையே புரட்டி போட்டவன் தமிழன். கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்பார்கள். தமிழர்கள் அறிவியலிலும் கெட்டிக்காரர்கள். தனது கூர்ந்த மெஞ்ஞானத்தால், நவ கிர
உலகத்தையே புரட்டி போட்டவன் தமிழன். கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்பார்கள். தமிழர்கள் அறிவியலிலும் கெட்டிக்காரர்கள்.

தனது கூர்ந்த மெஞ்ஞானத்தால், நவ கிரங்களையும் படைத்துள்ளான். அதன் பெயர்களிலேயே ஞாயிறு-சூரியன், திங்கள்-சந்திராயன், செவ்வாய்- முருகன் (அங்காரகன்), புதன் - புதன் பகவான், வியாழன்- குரு பகவான், வெள்ளி - சுக்கிரன், சனி- சனி பகவான் என ஏற்ற கிழமைகளையும் கண்டுபிடித்து அதற்கு ஏற்ற கடவுள் பெயர்களையும் வைத்துள்ளான் தமிழன்.
தமிழன் எப்போதும் அறிவியல் சார்ந்த விஷயங்களை தெய்வீகத்தோடு மறைத்து வைத்துள்ளான். தமிழனை எப்போதும் வானியல் சாஸ்திரங்களிலும் கில்லாடி.
இந்நிலையில் இஸ்ரோ சந்திரனோடு தொடர்புடைய திங்கள் கிழமையில் சந்திராயன்2-யை விண்ணுக்கு அனுப்பி இஸ்ரோ சாதனை செய்ய காத்து இருக்கின்றது.

நவகிரகங்கள்:
சூரியன், சந்திரன், செவ்வாய் புதன், வியாழன், வெள்ளி, சனி , ராகு, கேது ஆகிய ஒன்பது கோள்கள் இருக்கின்றன. ராகு, கேவுதும் நிழல் கிரகங்கள் என்பதால், கிழமைகளில் எடுத்துக் கொள்ளவில்லை தமிழன். இந்த கிரகங்களில் முதன்மையாக இருக்கும் 7 கிரகங்களான சூரியன் (ஞாயிறு), சந்திரன் ( திங்கள்), செவ்வாய் (அங்காரகன்), புதன் (புதன்), வியாழன் ( குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி (சனி) இதன் பெயர்களிலேயே கிழமைகளில் வைத்துள்ளான் தமிழன்.
கிரகங்களின் முழு விவரம்:

கிரகங்களின் முழு விவரம்:
சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவகிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு அதிதேவதை - அக்னி ப்ரத்யதி தேவதை - ருத்திரன், தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு , வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம், தானியம் - கோதுமை , மலர் - செந்தாமரை , எருக்கு, வஸ்திரம் - சிவப்பு , ரத்தினம் - மாணிக்கம் , அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்.

சந்திரன் :
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். கடக ராசிக்கு அதிபதி. திக்கு -தென்கிழக்கு அதிதேவதை - ஜலம் ப்ரத்யதி தேவதை - கௌரி தலம் - திருப்பதி நிறம் - வெள்ளை வாகனம் - வெள்ளைக் குதிரை தானியம் - நெல் மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை ரத்தினம் - முத்து அன்னம் - தயிர் சாதம். இதுபோன்று மற்ற 7 கிரங்களுக்கும் கணித்து வைத்துள்ளான் தமிழன்.

ஆன்மீக அறிவியல் :
நவ கிரங்கள் தன்மை எப்படி இருக்கும் என்று முன்பே கணித்து அவைகளுக்கு ஏற்றபடி ஆன்மீகத்துள் வைத்துள்ளான். இவைகளில் அறியவிலையும் மறைத்து வைத்துள்ளான். இந்த நவ கிரங்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சுகளால், மனிதனுக்கு உடல் மற்றும் உளவில் ரீதியாக மாற்றம் ஏற்படும் என்றும் அறிந்துள்ளான். இதனால் நவகிரக கதிர்வீச்சுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆன்மீகத்தில் வைத்து வழிபாட்டு முறையிலும் உளவில் ரீதியாகவும் வணங்கியும் வந்துள்ளான். நவகிரங்களால் மனிதனின் உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் இக்கால அறிவியலும் கூறுகின்றது.

சந்திரனில் தண்ணீர்:
சந்திராயன் -1 அனுப்பி நிலவில் தண்ணீர் இருக்கின்றது என்று உலகிற்கு முதல் முறையாக கூறியதும் இஸ்ரோ தான். அதுவரை எந்த நாட்டிற்கும் தெரியாது. ஆனால் சந்திரனே நீருக்கு அதி தேவதை என்று தமிழனுக்கு தெரியும். சந்திராயன் 1 திட்டத்திற்கு இயக்குராக இருந்தவரும் தமிழன் தான். அவர் மயில்சாமி அண்ணா துரை. இஸ்ரோ தலைவரும் தமிழன் தான் அவர் பெயரை பாருங்கள் கே. சிவன். நவகிரகத்திற்கு தலைவன் சிவன். இது எல்லாம் இயற்கையாய் அமைந்துள்ளது. இதற்கு முன்பே மெய் ஞானத்தால் தமிழன் நவ கிரங்களையும் கணித்து வைத்துள்ளான்.

சந்திராயன் -2 :
சந்திராயன் -2 பல்வேறு முறை விண்ணிற்கு ஏவுவது தள்ளி போனாலும், அதில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டாலும், இந்தமுறை இஸ்ரோ சாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்று திங்கள் கிழமை சந்திரனுக்கு உந்த நாளான திங்களன்று அனுப்பி சாதனை செய்கின்றது. அதுவும் எந்த நாடும் இதுவரை நிலன் தென் துருவத்தில் அனுப்பி சாதனை செய்ய இருக்கின்றது.

இஸ்ரோ சூட்சுமம்:
இதிலும் இஸ்ரோ சூட்சுமம் இருக்கின்றது. திங்கள் கிழமை சந்திரனுக்கு உகந்த நாள். அதிலும் சந்திரன் திக்கு தென் கிழக்கு ஆகும். அங்கு சந்திராயன்-2 விண்கலனை இறக்க இருக்கின்றது. இதிலும் ஆன்மீகத்தோடு அறிவியலை நிலை நிறுத்தி சாதனை செய்கின்றது இஸ்ரோ. நிச்சயமாக இஸ்ரோ சாதனை செய்யும் என்பதில் சந்தேமில்லை.


Click it and Unblock the Notifications