Home
Scitech

சந்திரயான் 2: பிரக்யான் ரோவரைப் பற்றிய வந்த புதிய தகவல்.!

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து நிலவல் மோதிய விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழர் சண்முக சுப்ரமணியம் அவர்கள் தற்சமயம் சந்திரயான் 2 குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார், அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அதன்படி தற்சமயம் அவர் கூறிய அறிவிப்பில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி உடையாமல்,எந்த பாதிப்பு அடையாமல் இருந்திருக்காலம் என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

வெளியிட்டு ட்வீட்களில்,

மேலும் அவர் வெளியிட்டு ட்வீட்களில், சந்திரயான்-2 இன் பிரக்யான், விக்ரம் லேண்டரிலிருந்து சில மீட்டர் தூரத்தில்
இருப்பதை காட்டும் படங்களை அவர் பகிர்ந்து கொண்டார். மேலும் கடினமான தரையிறக்கம் காரணமாக அதன்பேலோடுகளை சிதைந்தன என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

சண்முக சுப்ரமணியம் அவர்கள் கூறியது என்னவென்றால், லேண்டருக்கு அனுப்பப்பட்ட கட்டளைகள் பெறப்படுவதற்கான ஒரு தனித்துவமான சாத்தியக்கூறு இருப்பதாகவும் கூறியுள்ளார். இருந்தபோதிலும் விக்ரம் லேண்டரால் மீண்டும் பூமியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. தனது கண்டுபிடிப்புகள் மூலம் இஸ்ரோ-வை டேக் செய்துள்ள அவர், தனது கண்டுபிடிப்புகளின் படங்களைபகிர்ந்துள்ளார்.அதற்கான விரிவான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.

சந்திரயான் 2 இன்

சரியாக டிசம்பர் 3, 2019 அன்று சந்திரயான் 2 இன் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் நாசா கண்டுபிடித்த சில மணி நேரங்களுக்கு பிறகு இவற்றை முதலில் ஒரு இந்திய தொழில்நுட்ப வல்லுநரும் விண்வெளி ஆர்வலருமான சுப்ரமணியம் கண்டுபிடித்தார் என்பது தெரியவந்தது, மேலும் LRO கேமரா குழு செப்டம்பர் 26-ம் தேதி அன்று தளத்தின் முதல் மொசைக்கை வெளியிட்டது. பலர் விக்ரம் லேண்டரின் அறிகுறிகளைத் தேட மொசைக்கை பதிவிறக்கம் செய்தனர்.

ந்த உதவிக்குறிப்பை பெற்ற பிற

அவர்களில் சண்முக சுப்ரமணியனும் ஒருவர், LRO-ஐ தொடர்புகொண்ட அவர்இ சந்திரயானின் சில பகுதிகளைக் தான் அடையாளம் கண்டதாகக் கூறினார். இந்த உதவிக்குறிப்பை பெற்ற பிறகு, LRO குழு படங்களுக்கு முன்னும் பின்னும் ஒப்பிட்டு அடையாளத்தை உறுதிப்படுத்தியது. மேலும் நாசா குழு அதன் படத்தில் சுப்பிரமணியனுக்கும் இந்த கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரத்தையும் வழங்கி பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றிச்சென்ற

முன்பு ஜூலை 22, 2019 அன்று மதியம் 2:43 மணிக்கு சந்திரயான் -2 -ஐ ஏற்றிச்சென்ற ராக்கெட் செலுத்தப்பட்டது. அதன்பின் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான சராசரி தூரம் 3,84, 000 கி.மீ. விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி பயணத்தின் 48 வது நாளில் சந்திரனில் தரையிறங்க திட்டமிட்டது. ஆனால் அது கடினமாக தரையிறக்கமாக இருந்தது. சந்திராயன் 2-இன் சுற்றுப்பாதையில் இருந்து செப்டம்பர் 2-ம் தேதி பிரிந்த விக்ரம் லேண்டர், செப்டம்பர் 7-ம் தேதி சந்திர மேற்பரப்பில் இறங்கும்போது இஸ்ரோ மிஷன் கட்டுப்பாட்டுமையத்துடனான தொடர்பை இழந்தது.

ரஷ்யா மற்றும் சீனாவுக்கு

குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா,நிலவில் தரையிறங்கிய நான்கவது நாடக இருந்திருக்கும். சந்திரயான் 2-ன் லூனர் ஆர்பிட்டர் தற்சமயம் அதிக தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுத்து நிலவைச் சுற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
ISRO checking space enthusiast's claim that Chandrayaan-2's rover Pragyan is intact on Moon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X