36மணி நேரத்தில் கண்டுபிடிப்பு: லேண்டர் உயிர்பிக்கும் வேலையில் இஸ்ரோ-சிவன் மகிழ்ச்சி.!
36 மணி நேரத்தில் லேண்டர் விக்ரமை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இதை உயிர்பிக்கும் வேலையிலும் மும்முரமாக இறங்கியுள்ளனர். பல்வேறு தடைகளையும் தாண்டி மீண்டு வருகின்றது இஸ்ரோ.

சந்திராயன்-2 விண்கலன்
விக்ரம் வேண்டர் உடன் தொடர்பை இஸ்ரோ நேற்று அதிகாலை 1.58 மணிக்கு இழந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளால் அதை தொடர்பு கொள்ள முடியவில்லை.
பிறகு சந்திராயன்-2 ஆர்பிட்டரை கொண்டு நிலவில் இருக்கும் லேண்டர் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது.

இந்தமுறையை வைத்து சந்திராயன்-2 ஆர்பிட் மூலம் கண்காணிப்பட்டது. அப்போது, நிலவில் 2.1 கி.மீ இருக்கும் போது, மிஸ்ஸிங் ஆன லேண்டர் விக்ரம் தரையிறங்க வேண்டிய இடத்தில் 500 மீட்டர் தள்ளி தரையிறங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புவியிர்ப்பு விசை
நிலவில் உள்ள ஈர்ப்பு விசை காரணமாகவும் விக்ரம் லேண்டர் வேகமாக தன்னுடைய இடத்தில் இருந்து தள்ளி தறையிங்கியருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தெர்மல் இம்மேஜிங் முறையால் இருள் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்கப்பட்டது.

எங்கு இருக்கின்றது தெரியுமா?
நிலவின் தென் துருவத்தில் உள்ள மான்சிஎனஸ்-சி, சிம்பேலியஸ்-என் ஆகிய இருபள்ளங்களுக்கு இடையே இருப்பதாக கூறப்படுகின்றது. சாப்ட் லேண்டிங் ஆகியுள்ளது. மேலும், பாலூன் போன்ற பாதுகாப்பு கவசங்கள் இருப்பதால், விக்ரம் லேண்டருக்கும், பிரக்யான் ரோவருக்கும் சேதம் அடைந்து இருக்க வாய்பு இல்லை என்று கூறப்படுகின்றது.

ஆய்வு செய்யுமா லேண்டர்
இருந்தாலும், லேண்டர் செங்குத்தான நிலையில் விழுந்திருந்தால், ஆய்வுகளை தொடர வாய்ப்புள்ளது. அதேசமயம் விக்ரம் லேண்டர் கிடைமட்டமாக விழுந்து இருந்தால் ஆய்வுகளை தொடர முடியாது.

36 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு
ஒரு வாரத்தல் கண்டுபிடிக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 1.58 மணிக்கு மிஸ்சிங் ஆன ரோவரை இன்று மதியம் 2.20 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ வெறும் 36மணி நேரத்தில் கண்டுபிடித்து நிலவில் புதிய சாதனையும் படைத்துள்ளது.

கருவிகளை உயிர்பிக்கும் பணி
சந்திராயன்-2 ஆர்பிட்டர் வழியாகவும், விக்ரம் லேண்டருக்கு தகவல்களை இஸ்ரோ பெங்களூர் மையம் அனுப்பும். இதற்கு பதில் வருகின்றது என்றும் சோதிக்ககப்டும்.

லேண்டருக்கு நேரடியான தகவல்
மேலும் லேண்டரை நேரடியாகவும் பெங்களூர் இஸ்ரோ மையத்தில் இருந்தும் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடுகள் நடக்கின்றது. இதுவும் நடக்காவிட்டால், உடனடியாக பிரக்யான் ரோவரை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிக்னல் அனுப்பும் இஸ்ரோ
ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்றுக்கும் சிக்னல்களை அனுப்பி உயிர்பிக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிக்கு பயன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது, சிவன் மகிழ்ச்சியாக காணப்படுகின்றார்.


Click it and Unblock the Notifications