விமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.!
உலகளவில் இஸ்ரோ விண்வெளி துறையிலும் வேகமாக வளரந்து வரும் நாடாக இருக்கின்றது. ஆசியாவிலும் தனக்கென்று இடத்தையும் இஸ்ரோ பிடித்துள்ளது. வளர்ந்த நாடுகளின் செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவி பெரும் சாதனை படைத்த
உலகளவில் இஸ்ரோ விண்வெளி துறையிலும் வேகமாக வளரந்து வரும் நாடாக இருக்கின்றது. ஆசியாவிலும் தனக்கென்று இடத்தையும் இஸ்ரோ பிடித்துள்ளது. வளர்ந்த நாடுகளின் செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவி பெரும் சாதனை படைத்து வருகின்றது.

இந்நிலையில், இஸ்ரோவை விமானம் மூலம் வானிற்கு சென்று செயற்கைகோளை ஏவும் புதிய தொழில்நுட்பத்தையும் செயல்படுத்த இருகின்றது. இது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளதால், பெரும் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கின்றது.
இஸ்ரோவின் இந்த சிறிய செயற்கைகோள் திட்டத்தை பார்த்து உலக நாடுகளும் மிரண்டு போயியுள்ளன.

சந்திராயன்-2 உலக நாடுகள்:
சந்திராயன்-2 உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. மேலும், இஸ்ரோ நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த பரபரப்பான வேலையில்,
பூமியின் சுற்றுவட்ட பாதையில் சிறிய செயற்கைகோளை விண்வெளிக்கு செலுத்தும் வகையில், இஸ்ரோ தனி கவனம் செலுத்தி வருகின்றது.

எஸ்எஸ்எல்வி :
இந்திய விண்வெளி ஆராயச்சி அமைப்பு (இஸ்ரோ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் சிறிய செயற்கைகோளை உருவாக்கியுள்ளது. (எஸ்எஸ்எல்வி) வெளியீட்டு வாகனத்தின் (எஸ்எஸ்எல்) தொடக்க விமானத்தை இந்தாண்டு இறுதிக்குள் 2,000கி.மீ குறைவாக உள்ள பூமியின் குறைந்த சுற்றுவட்டபாதையில் கொண்டு செல்ல இந்திய
விஞ்ஞானிகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முழுவீச்சில் எஸ்எஸ்எல்வி பணி:
எஸ்எஸ்எல்வியின் பணிக்காக இஸ்ரோ முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. மேலும், எந்ததொரு இலக்கையும் இஸ்ரோ துரத்தி வெற்றியடைந்து விடும். சந்திராயன்-2க்கு பிறகும் எஸ்எஸ்எல்வியின் இந்த திட்டத்தையும் இஸ்ரோ தலைவர் சிவன் கவனித்து வருகின்றார்.

இஸ்ரோ வாடிக்கையாளர்:
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1994 முதல் 2015 வரை தனியார் செயற்கைகோள் உட்பட பல வெளிநாடுகளின் செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகின்றது. இதில், தற்போது வரை 51 நாடுகளில் இருந்து ஏஜென்யின் மூலம் பெறப்பட்ட செயற்கைகோள்களும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

நானோ செயற்கைகள்:
பிஎஸ்எல்வியின் ஏவுதள அட்டவணை மற்றும் ஏவுதளம் வாகனம் கிடைக்காததால், பல வெளிநாடுகளையும் சேர்ந்த பல செயற்கைகோள்களையும் விண்வெளியில் செலுத்த முடியவில்லை.
இதை கருத்தில் நானோ செயற்கைகோள், பிஎஸ்எல்வி பணியின் போது கூடுதல் பேலோடுகளாக ஏவப்பட்டன. எஸ்.எஸ்.எல்.வி, 500 கிலோவை குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் கொண்டு செல்லக்கூடியது.

எஸ்எஸ்எல்வின் முக்கிய அங்கம்:
இந்நிலையில் எஸ்எஸ்எல்வியை தயாரித்து ஏவுவதால், நாம் விண்வெளிக்கே சென்று ஏவுகின்றோம். நாம் திரும்பவும் ஏவும் வாகனத்தையும் நாம் திரும்ப பயன்படுத்த முடியும். மேலும், ஏவும் செலவும் மிச்சமாகின்றது.

கூகுள், அமேசான் நிறுவனங்கள்:
கூகிள் மற்றும் அமேசான் போன்ற ஜாம்பவான்கள் உட்பட தனியார் ஏஜென்சிகளிடமிருந்து அதிகரித்து வரும் இந்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு தனி ஏவுகணை வாகனம் தேவைப்பட்டது.
அவர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் தங்கள் செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வைக்க விரும்புகிறார்கள். எஸ்.எஸ்.எல்.வி பல சுற்றுப்பாதை வீழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த கோரிக்கைகளை பூர்த்தி செய்வது மிகவும் பொருத்தமானது என்று பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனத்தின் (ஐ.டி.எஸ்.ஏ) மூத்த குழு ஆய்வுகள் அஜய் லெலே (ஓய்வு பெற்றவர்) தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் சாதனை:
இஸ்ரோ ஏற்கனவே பல செயற்கைக்கோள்களை அனுப்பும் திறனை வெளிப்படுத்தியுள்ளது. ஜனவரி 2017 இல், இது ஒரு ராக்கெட் மூலம் சாதனை படைத்த 104 செயற்கைக்கோள்களை ஏவியது சாதனை செய்தது. விண்வெளி அடிப்படையிலான சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இஸ்ரோ ஒரு பயனுள்ள மற்றும் குறைந்த கட்டண விருப்பமாக நன்மைகளையும் வழங்குகிறது. இதை இந்திய செய்ய இருப்பதால், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மிரண்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications