இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சல், வளிமண்டலவியலுக்குள்..!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையனான இஸ்ரோ (ISRO) அடுத்த மாதம் இரண்டு புதிய வளிமண்டலவியல் செயற்கைக்கோள்களை (meteorological satellites) விண்ணில் செலுத்த இருக்கிறது.

கடந்த ஞாயிறன்று தார்வாட் மாவட்டத்தில் ஒரு அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்ற இஸ்ரோவின் தலைவர் எஸ் கிரண் குமார், இந்த ஏவுதல் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டார், இந்த வெளியீடு மூலம் நாட்டின் மேலுமொரு வானிலை முன்னறிவிப்பு மேம்படுத்தல் நிகழும் என்று அவர் கூறியுள்ளார்.

முன்பு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை வானிலை மாற்றங்களை அனுசரித்து நிகழ்த்தப்பட்ட கவனிப்பானது இப்போது ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை என்று மேம்படுத்தப்பட இருக்கிறது என்றும் எஸ் கிரண் குமார் கூறியுள்ளார்.

இஸ்ரோவின் புதிய வளிமண்டலவியல் செயற்கைகோள்கள் இந்திய நிலப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மீது நல்ல தரமான வளிமண்டல சுயவிவரங்கள் வழங்கும், இந்த ஏவுதல் அடுத்த மாதம் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

உடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சிறிய அளவிலான ஜியோஸ்டேஷனரி வானிலை செயற்கைக்கோளான இன்சாட் - 3 டிஆர் வெளியீடு நிகழ்த்த முனைப்புடன் உள்ளனர் என்பதும், இஸ்ரோ தற்போதிருக்கும் நிலையில் ஆண்டுக்கு 8 முதல் 12 ராக்கெட் திட்டம் என்ற எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
பிளாக் ஹோல்களுக்கு இதயம் உண்டு, அவைகள் ஒரு பின் கதவுகள்..!?
3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெர்குரி - ஒரு நெருப்புடா..!
பூமி கிரக வாசிகளுக்கு ஒரு 'மினி சர்ப்ரைஸ்'..!
அதிர்ச்சி : ரகசிய விண்வெளி திட்டம் அம்பலம்!


Click it and Unblock the Notifications