ஆண்டு இறுதியில் வெற்றிகரமாக செயற்கைகோளை ஏவி இஸ்ரோ சாதனை.!
இது இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக அனுப்படுகின்றது. சத்தீஸ்தவான் விண்வெளிய ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது இந்தாண்டு இறுதி செயற்கைகோள் ஆகும்.
இஸ்ரோ நிறுவனம் சார்பில் இன்று மாலை 4.15 க்கு ஜிஎஸ்எல்வி-எப்-ராக்கெட்டில் ஜிசாட் 7ஏ என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக அனுப்பட்டது.

இது இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக அனுப்பட்டுள்ளது. சத்தீஸ்தவான் விண்வெளிய ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது இந்தாண்டு இறுதி செயற்கைகோள் ஆகும். இஸ்ரோ தலைவர் சிவன் இதை கண்காணித்து வந்தார்.

இந்திய விமானப்படை:
இந்திய விமானப்படை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதன் தகவல் தொடர்பு தனித்துவமாக இருக்கின்றது. போர் பயன்பாட்டிற்காகவும், தற்காப்பு, இயற்கை சீற்றங்களுக்கு உதவுவதற்காகவும் தகவல் தொடர்பு விமானப்படைக்கு முக்கிய அவசியமாகின்றது. இதற்காக ஜிசாட்7ஏ ராக்கெட் அனுப்பட்டுள்ளது.
நன்றி: வீடியோ ஏஎன்ஐ
3 நிலையில் ஜிஎஸ்எல்வி:
3 நிலை கொண்ட ஜிஎஸ்எல்வி-எப்11 ராக்கெட்டின் முதல்நிலையில் திட எரிபொருளும், 2ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. 3 வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்ட கிரையேஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

எடை 415.6 டன் :
49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜிஎஸ்எல்வி எப்-11 ராக்கெட் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்படுகின்றது. 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்-7 ஏ செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும்.

ரேடார் நிலையங்களுக்கு இணைப்பு:
இது இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் ரேடார் நிலையங்கள், விமான தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்தும். இது முழுவதும் Ku-Band பயனாளர்களின் தொலைத்தொடர்புக்கு உதவக்கூடியது.

இஸ்ரோ அர்ப்பணிப்பு:
இந்திய ராணுவத்துக்கு இஸ்ரோ அர்ப்பணிக்க உள்ளது. இந்த செயற்கைகோளை சுமந்துசெல்ல உள்ள ஜி.எஸ்.எல்.வி எப் 11 ராக்கெட்டானது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 13வது ராக்கெட் ஆகும்.
இது இஸ்ரோ இந்தாண்டு இறுதியில் அனுப்பும் கடைசி ராக்கெட் ஆகும். இதை இஸ்ரோ தலைவர் சிவன் கண்காணித்து வந்தார். ராக்கெட் வெற்றிகரமாகவும் செயற்கைகோள்கள் நிலைநிறுதப்பட்டதால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவன் வாழ்த்து:
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிவன் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொடர்புக்காக ஏவுப்பட்டது என்றும், இது 3 வது செயற்கைகோள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்எல்வி ராக்கெட் வகைகள் தற்போது, வெற்றிகரமாக இஸ்ரோ செலுத்தி சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications