பிஎஸ்எல்விசி 42 ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கைகோளை ஏவும் இஸ்ரோ.!
இஸ்ரோ நிறுவனம் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும், தனியார்களின் செயற்கை கோள்களின் விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. இதனால் உலகளவில் இஸ்ரோ நிறுவனம் வணிக ரீதியாக செயற்கைகோள் ஏவுதளமாக விளக்குகின்றது
இந்திய விண்வெளி நிறுவனம் தற்போது முற்றியிலும் வெளிநாட்டு செயற்கை கோளை விண்ணிற்கு செலுத்த தற்போது தயாராகியுள்ளது. தற்போது இஸ்ரோ நிறுவனம் பிஎஸ்எல்விசி-42 செயற்கைகோள் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த செயற்கைகோளை விண்ணிற்கு ஏவ இருக்கின்றது.

இஸ்ரோ நிறுவனம் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தாலும், ஓரே ராக்கெட்டில் முற்றிலும் வெளிநாட்டு செயற்கைகோளை ஏவ இருப்பது அனைத்து இஸ்ரோவின் மீது அனைத்து நாடுகளின் பார்வையும் தற்போது திரும்பியுள்ளது.

இஸ்ரோ நிறுவனம்:
இஸ்ரோ நிறுவனம் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும், தனியார்களின் செயற்கை கோள்களின் விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. இதனால் உலகளவில் இஸ்ரோ நிறுவனம் வணிக ரீதியாக செயற்கைகோள் ஏவுதளமாக விளக்குகின்றது.
இந்நிலையில் ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் இந்தியாவை நோக்கி திரும்பி வருகின்றனர். இதனால் தற்போது வர்த்தமயமாகி வருகிறது இஸ்ரோ நிறுவனம்.

கண்டுபிடிப்பு:
ராக்கெட்களில் புதிய தொழில் நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி என அடுத்து அடுத்து கண்டுபிடிப்புகளையும் இஸ்ரோ நிறுவனம் நிகழ்த்தி வருகின்றது. இந்தியாவின் விண்வெளி வளர்ச்சியை பார்த்து வெளிநாடுகளும் வாயை பிளந்து வண்ணம் உள்ளன.
உள்நாட்டிலேயே குறைந்த மூலதனத்தில் அனைத்து பொருட்களும் உற்பத்தி செய்தும், சொந்த தொழில் நுடப்பத்திலும் விண்வெளிக்கு ராக்கெட்கள் ஏவுவதால் குறைந்த செலவாக இருக்கின்றது. இதனால் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் இந்தியாவை குறிவைத்து வருகின்றனர்.

பிஎஸ்எல்சி சி42 ராக்கெட்:
ஆந்திரமாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் நிலை நிறுத்தப்பட்டு இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றது.

எடை 800-1000 கிலோ:
இந்த ராக்கெட்டின் எடை 800 கிலோ முதல் 1000 கிலோ வரை உள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள்கள் செலுத்தப்படுகின்றன. பூமி கண்காணிப்புக்ககா வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தது.

583 கி.மீ தூரத்தில் நிலை நிறுத்தம்:
நோவாசார் மற்றும் எஸ் 41 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் பிஎஸ்எல்விசி 42 ராக்கெட் மூலம் புவி வட்டப்பாதையில் இருந்து 583 கி.மீ தூரம் நிலை நிறுத்தப்படுகின்றது.
இதன் மூலம் கால நிலை, புவி அமைப்பு, செயற்கைகோள், நில மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து படம் பிடித்து அனுப்பும், பேரிடர் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த செயற்கைகோள் வரும் 16ம் தேதி ஏவ இருப்பதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications