விண்வெளியில் சாதிக்க இந்தியாவின் அடுத்த பயணம்.! இஸ்ரேலுடன் போட்டி போடும் இஸ்ரோ.!
சந்திராயன்-1 வெற்றியை தொடர்ந்து இந்தியா சார்பில், விரைவில் சந்திரனுக்கு அனுப்ப இருக்கும் சந்திராயன்-2 இன்ஜின் சோதனை வெற்றிகரமாக கடந்த வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டது.
சந்திராயன்-1 வெற்றியை தொடர்ந்து இந்தியா சார்பில், விரைவில் சந்திரனுக்கு அனுப்ப இருக்கும் சந்திராயன்-2 இன்ஜின் சோதனை வெற்றிகரமாக கடந்த வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், சந்திரானுக்கு அனுப்படும் ஆயத்த பணிகளும் தற்போது தீவரமாக நடந்து வருகின்றது. மேலும் விரைவில் சந்திராயனுக்கு சந்திராயன்-2 விண்கலன் அனுப்பட இருக்கின்றது. தற்போது உலக சாதனைக்காக இஸ்ரேலுடன் இஸ்ரோ தீவிரமாக போட்டி போட முனைப்பு காட்டி வருகின்றது.

சந்திராயன்-1:
இஸ்ரோ சார்பில், சந்திராயன் 1- என்ற விண்கலம் கடந்த 2008ம் ஆண்டு விண்ணுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ஆனால் நிலவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. சந்திராயன்-1 விண்கலம் நிலவை சுற்றி மட்டுமே வந்தது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தங்களின் விண்கலத்தை நிலவில் இறங்கியுள்ளன. இருந்தாலும், இந்தியாவின் சந்திராயன் மகிப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதற்கு திட்ட இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.

சந்திராயன்-2:
சந்திராயன்-2 திட்டத்தில் நிலவில் செயற்கைகோளை இறங்கி ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. முதல் கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி சந்திராயன் 2 விண்கலத்தை ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது பல்வேறு காரணங்களுக்குகாக சந்திராயன் விண்கலம்-2 ஏவுதல் பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.

சந்திராயன்-1 வெற்றி:
மேலும் சந்திராயன்-1 விண்கலம் நிலவில் தண்ணீர் இருக்க சாத்திய கூறுகள் இருக்கின்றது உலகின் முதன்முதலாக கூறி சாதனை படைத்தது. இதை நாசாவும் உறுதி செய்தது. மேலும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு வளர்ச்சிக்கு சந்திராயன்-1 விண்கலம் தற்போது முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது.
சந்திராயன்-1 வெற்றியை பல்வேறு நாடுகளும் வாழ்த்து தெரிவித்தன.

சந்திராயன் ஒத்திவைக்க காரணம்:
போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு ஐஆர்என்எஸ்எஸ்-1ஹெச் செயற்கைகோள் ஏவப்பட்ட போது, வெப்ப தகடுகளில் வெப்ப தகடுகளில் கோளாறால், ராக்கெட்டில் இருந்து செயற்கைகோளை நிலைநிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஜிசாட்-6 செயற்கை கோள் விண்ணிற்கு ஏவப்பட்ட தரைக்கப்பட்டு மையத்தில் இரந்து அதன் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் செயற்கைகோள நிலை நிறுவத்துதிலும், தகவல் பெறுதிலும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இந்த பணிகளும் அதிவேகமாக சீர்செய்யப்படுவதாக இஸ்ரோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரையோஜெனிக் இன்ஜின் வெற்றி:
இஸ்ரோ சார்பில் ஆயத்தப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது. சந்திராயன்-2 விண்கலனை ஏவப்படும் பயன்படும் கிரையேஜெனிக் இன்ஜின் ((CE-20) ஜிஎஸ்எல்விஎம்கே.-111 வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 11ம் தேதி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் தெரிவித்தனர்.

இஸ்ரேனுடன் போட்டி:
சந்திராயன்-2 விண்கலன் வரும் டிசம்பர் மாதம் ஏவப்பட இருக்கின்றது. ஏற்கனவே மூன்று நாடுகள் சந்திரனில் விண்ணகலன்களை தரையிறக்கி உள்ளன. இந்த பட்டியில் 4 வதாக இடம் பிடிப்பது யார் என்று (இந்தியா) இஸ்ரேவுக்கும், இஸ்ரேலுக்கும் கடும் போட்டி நிலவுகின்றது. இதில் எந்த நாடு முந்திக் கொண்டு விண்ணில் வெற்றிகரமாக விண்கலனை தரையிறக்க போடுகின்றது என்று தெரியவில்லை. இதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications