பெயர் : இஸ்ரோ; வேலை : உலக நாடுகளின் வாயை பிளக்க வைப்பது.!

அப்படியான தொடர் வெற்றிகளை குவிக்கும் இஸ்ரோவின் சமீபத்திய விண்வெளி மைல்கல் தான் - ஐஆர்என்எஸ்எஸ்.

|

"சைக்கிள் கேரியர்களிலும், மாட்டு வண்டிகளிலும் ராக்கெட் பாகங்களை சுமந்து கொண்டு போய் செயற்கைக்கோளை ஏவிய கூட்டம் தானே நீங்கள்" - உட்பட கடுமையான விமர்சனங்களை சந்தித்த அதே இஸ்ரோ தான், இன்று உலக நாடுகளின் செயற்கைகோள்களை "சாதாரணமாக" விண்ணில் செலுத்த உதவிகொண்டு இருக்கிறது என்பதில் யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் இருக்காது என்று நம்புகிறேன்.

பெயர் : இஸ்ரோ; வேலை : உலக நாடுகளின் வாயை பிளக்க வைப்பது.!

அப்படியான தொடர் வெற்றிகளை குவிக்கும் இஸ்ரோவின் சமீபத்திய விண்வெளி மைல்கல் தான் - ஐஆர்என்எஸ்எஸ். இது இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் நெட்வொர்க்கை நிறுவ உதவிய, இந்தியன் ரிஜினல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (Indian Regional Navigation Satellite System - IRNSS) ஆகும். இதை நிறுவியதற்கே வாயை பிளந்த உலக நாடுகள், கே.சிவன் தலைமையிலான இஸ்ரோவை, அடுத்த எட்டு மாதங்களுக்கு எப்படி தான் ஜீரணித்துக்கொள்ள போகிறதோ தெரியவில்லை.!

இதுவே ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.!

இதுவே ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.!

இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவல் உண்மையாக இருந்தால், அடுத்த எட்டு மாதத்தில், சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு விண்வெளி ஏவல் என்கிற விகிதத்தில் மொத்தம் 9 ஏவல்கள் நிகழும். இதுவே ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும் இதில் வெற்றிகரமான பாதையைஅடைதல், குறிப்பிட்ட சேவை அல்லது ஆய்வை திறம்பட நிகழ்த்துதல் போன்ற சாதனைகள் எல்லாம் வேறு கணக்கில் வரும்.

வரும் எட்டு மாதங்களில் நிகழ்த்தப்போகும் பிரதான விண்வெளி ஏவல்கள் என்னென்ன.?

வரும் எட்டு மாதங்களில் நிகழ்த்தப்போகும் பிரதான விண்வெளி ஏவல்கள் என்னென்ன.?

இஸ்ரோ ஏற்கனவே இந்த ஆண்டில், மூன்று ஏவல்களை, ஜிஎஸ்எல்வி (GSLV) மற்றும் பிஎஸ்எல்வி (PSLV) ஆகிய இரண்டு ராக்கெட்டுகளின் உதவியுடனும் நிகழ்த்தியுள்ள நிலைப்பாட்டில் அடுத்த எட்டு மாதங்களில் நிகழ்த்தப்போகும் பிரதான விண்வெளி ஏவல்கள் என்னென்ன.? அவைகளின் நன்மைகள், ஆய்வுகள் மற்றும் சேவைகள் என்னவென்று பார்த்தால், முதலில் கிளம்புவது - ஜிசாட் 11 தான்.!

ஜிசாட்-11

ஜிசாட்-11

கடந்த மார்ச் 29 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-6ஏ எனும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆனது, கடந்த ஏப்ரல் 1 முதல் செயற்கைக்கோள் இயங்கவில்லை என்பதும், அதன் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவது முடியாத காரியமாகி விட்டது என்பதும் ஒருபக்கம் இருக்க, கொஞ்சம் கூட பின்வாங்காமல், இஸ்ரோ, அதன் அடுத்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆன ஜிசாட்-11-ஐ இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் விண்ணில் செலுத்தவுள்ளது. ஜிசாட்-11 செயற்கைகோள் தான், இதுநாள் வரை இஸ்ரோ உருவாக்கிய மிகப்பெரிய செயற்கைகோள் ஆகும் என்பதும், இதன் எடை 5 டன்னுக்கும் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்எல்வி மார்க்-3-டி2 / ஜிசாட்-29

ஜிஎஸ்எல்வி மார்க்-3-டி2 / ஜிசாட்-29

உள்நாட்டு ரீதியின் கீழ் வளர்ச்சியடைந்த ஒரு செயற்கைக்கோள் தான் ஜிசாட்-29. இது 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதாவது இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். இது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டின் உதவி கொண்டு விண்ணில் நுழையும் என்பதும், முதல் முறையாக Ka x Ku மல்டி பீம் மற்றும் ஆப்டிகல் கம்யூனிகேஷன் பேலோடுகளை சுமந்து செல்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் நோக்கம், இந்தியாவின் கிராமப்புற பகுதிகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்பதே ஆகும்.

சந்திரயான்-2

சந்திரயான்-2

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, வெற்றிகரமான நிலவை அடைந்த சந்திராயன் 1-ஐ தொடர்ந்து, இந்த ஆண்டு சந்திரயான் -2 விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி இது இஸ்ரோவின் மிகப்பெரிய பணியாகும் மற்றும் ஒரு கனவு திட்டமாகும். சந்திராயன் 1 போலின்றி, ஒரே ஒரு லூனார் ஆர்பிட்டரை கொண்டிருக்காமல், சந்திரயான்-2 ஆனது ஒரு ஆர்பிட்டர், ஒரு லேண்டர் மற்றும் ஒட்டு ரோவர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். நிலவில் தரை இறங்கி, ஒரு முழுமையாயன் ஆய்வை மேற்கொள்ளப்போகும் சந்திராயன் 2-விடம் இருந்து, நிலவு மற்றும் பூமி சார்ந்த, கற்பனைக்கு எட்டாத சில தகவல்களை அல்லது விவரங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

ஜிசாட்-7ஏ

ஜிசாட்-7ஏ

ஜிசாட்-7ஏ ஆனதும் மற்ற அனைத்து ஜிசாட் செயற்கைக்கோள்களைப் போலவே தொடர்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும். இருப்பினும், ஜிசாட்-7ஏ ஆனது பிரத்யேகமாக இந்திய விமானப்படைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த இடத்தில ஏற்கனவே இந்திய கடற்படையின் தகவல் தொடர்புகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஜிசாட்-7 செயற்கைக்கோள் அறிமுகப்படுத்தபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசாட் 2ஏ

ரிசாட் 2ஏ

போர்த்திறன் வாய்ந்த செயற்கைகோளில் ஒன்றான ரிசாட் 2ஏ ஆனது வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இது இந்திய விமானப்படையினருக்கு (IAF) உதவும் ஒரு மேம்பட்ட ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் ஆகும். மற்றொன்று இந்த ஆண்டின் இறுதியில் விண்ணில் செலுத்தப்படவுள்ள, இந்திய நாட்டின் பாதுகாப்பு நோக்கத்திற்கான பிரத்யேக செயற்கைக்கோள் ஆன ஜிசாட்-7ஏ ஆகும். இந்த இரண்டும் சீனா மற்றும் பாகிஸ்தானின் வயிற்றில் புளியை கரைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உலகளாவிய செயல்பாடுகளையும் அதிகரிக்கும்.!

உலகளாவிய செயல்பாடுகளையும் அதிகரிக்கும்.!

ஜிஎஸ்எல்வி மார்க்2 ராக்கெட் மூலம் விண்வெளிக்குள் நுழைக்கப்படவுள்ள ஜிசாட்-7ஏ ஆனது, இந்திய விமான படையின் பல்வேறு தரை வழியிலான ரேடார் நிலையங்கள், ஏர்பேஸ் மற்றும் AWACS விமானங்களை இணைக்க உதவும். இது இந்திய விமான படையின் போர் திறன்களை அதிகரிப்பதோடு சேர்த்து, அதன் உலகளாவிய செயல்பாடுகளையும் அதிகரிக்கும்.

கடற்படைக்காக பிரத்தியேகமாக விண்ணில் செலுத்தப்பட்டது.!

கடற்படைக்காக பிரத்தியேகமாக விண்ணில் செலுத்தப்பட்டது.!

இதே போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கிய ருக்மிணி அல்லது ஜிசாட்-7 என்று அழைக்கப்படும் செயற்கைக்கோள் ஆனது, கடந்த செப்டம்பர் 29, 2013 அன்று, கடற்படைக்காக பிரத்தியேகமாக விண்ணில் செலுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தத்தக்கது. அது 2,000 கடல் மைல் அளவிலான 'தடம்' மற்றும் இந்திய போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடல்வழி விமானங்களுக்கு நிகழ் நேர உள்ளீடுகளை வழங்கி வருகிறது.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
வான் மார்க்கமாகவும் கண்காணிப்புகளை நிகழ்த்தும்.!

வான் மார்க்கமாகவும் கண்காணிப்புகளை நிகழ்த்தும்.!

கடற்படைக்கு சொந்தமான "வானத்தில் இருக்கும் கண்" என்று அழைக்கப்படும் ருக்மிணி ஆனது, இந்திய பெருங்கடலில் சீனப் போர்க்கப்பல்களின் நடவடிக்கையையும் கண்காணித்து வருகிறது. இந்நிலைப்பாட்டில், இந்திய விமான படைக்காக பிரத்தேயேகமாக விண்ணில் செலுத்தப்படவுள்ள ஜிசாட்-7ஏ ஆனது வான் மார்க்கமாகவும் கண்காணிப்புகளை நிகழ்த்தும் என்பதால், சீனாவிற்கும், அதன் பதட்டமான நடவடிக்கைகளுக்கும் நெருக்கடி ஏற்படும்.

கண்காணிப்பு திறன்களை உயர்த்தும்.!

கண்காணிப்பு திறன்களை உயர்த்தும்.!

மறுகையில் உள்ள ரிசாட்- 2ஏ செயற்கைக்கோளை பொறுத்தவரை, அது ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதுகில் ஏறிக்கொண்டு விண்வெளிக்குள் நுழையவுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் ஏவப்படவுள்ள ரிசாட் -2ஏ ஆனது, நாட்டின் கண்காணிப்பு திறன்களை உயர்த்தும் நோக்கம் கொண்ட ஒரு அட்வான்ஸ்டு ரிமோட் சென்சிங் சாட்டிலைட் (advanced remote sensing satellite) ஆகும்

மேற்பரப்பு மற்றும் வானிலை நிலைமை.!

மேற்பரப்பு மற்றும் வானிலை நிலைமை.!

ரிசாட் 2ஏ ஆனது, ஒரு அதிநவீன சின்தெடிக் அப்பெர்ஷர் ரேடார் ஒன்றை சுமந்து செல்லும் என்பதும், அது பூமியின் மேற்பரப்பு மற்றும் வானிலை நிலைமைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிசாட் சாட்டிலைட் வரிசையின் மூன்றாவது செயற்கைக்கோள் ஆன ரிசாட் 2ஏ ஆனது பெரும்பாலும் பொதுமக்களின் நலன் என்கிற நோக்கத்தின் கீழே பணியாற்றும். அதாவது நில சார்ந்த மேப்பிங்கிற்காக பயன்படுத்தப்படும், அதில் கடல் மேற்பரப்பு சார்ந்த பகுப்பாய்வு பணிகள் கணிசமானதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
ISRO has a packed schedule as it plans to launch nine missions including Chandrayaan-2 in the next eight months. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X