Just In
- 2 hrs ago iPhone-க்கு வந்த இடி.. Google-இன் அடுத்த ஆப்பு.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 4 hrs ago குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- 7 hrs ago கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- 9 hrs ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
Don't Miss
- News ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் மிஸ்ஸிங்? கிளம்பிய குற்றச்சாட்டுகளுக்கு கோவை ஆட்சியர் பரபர விளக்கம்
- Lifestyle கால்நடைகள் வெயில் தாக்காமல் இருக்க.. இதை செய்யுங்கள்..
- Sports DC vs SRH : டாஸில் ஏமாந்துவிட்டோம்.. பவர் பிளேவிலேயே ஆட்டம் முடிஞ்சு போச்சு.. புலம்பிய ரிஷப் பண்ட்!
- Automobiles ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
- Movies Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
இஸ்ரோ & பிரெஞ்சு விண்வெளி மையம் இணைந்து பாகிஸ்தானைக் கட்டுப்படுத்த எடுத்துள்ள புதிய முடிவு இதுதான்.!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பிரெஞ்சு விண்வெளி மையத்துடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பை வலிமைப்படுத்த புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவவுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பிரெஞ்சு விண்வெளி மையத்துடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பை வலிமைப்படுத்த புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவவுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் சி.என்.இ.எஸ் தலைவர் ஜீன்-ஈவ்ஸ் லே கால் இணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.
இந்திய கடற் எல்லை பாதுகாப்பு
இந்திய கடற் எல்லைகளை பாதுகாக்க, பிரென்ச் விண்வெளி மையத்துடன் இணைந்து பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு விண்வெளி மையத்துடன் இணைந்து
முக்கியமாக இந்தியா கடல் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்க இந்த முயற்சியில் பிரெஞ்சு விண்வெளி மையத்துடன் இணைந்து களமிறங்கியுள்ளதாகவும், இந்தியாய் பெருங்கடலில் நடமாடும் கடற்கொள்ளையர்களின் கப்பல்கள் மற்றும் எதிரி நாடு கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவே இந்த முயற்சியில் இரங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிரிநாட்டு போர்க்கப்பல்கள்
இந்தியப் பெருங்கடலில், சீன போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி புல்வாமாவில் பாக்கிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய கொடுத்த பதிலடிக்குப் பிறகு பாகிஸ்தான் கடற்படை இந்திய கடற் எல்லைக்குள் நுழைய முயன்று வருகிறது.
கடற் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த
இதனைத் தடுப்பதற்கும், இந்திய கடற் எல்லையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் இஸ்ரோ, பிரெஞ்சு விண்வெளி மையத்துடன் இணைந்து இந்த புதிய பாதுகாப்பு செயற்கைகோள்களை விண்ணில் ஏவ முடிவு செய்துள்ளதாக தெறிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பலி
புல்வாமா தாக்குதலுக்கு பலி வாங்கும் விதமாக ஜெய்ஷ்இ முகமது அமைப்பை சேர்ந்த 300 தீவிரவாதிகளை இந்தியா விமானப்படை மூலம் ஆயிரம் கிலோ வெடி மருந்து நிரப்பிய குண்டுகள் மூலம் அழித்தது.
துல்லியமாக தாக்குதல்
அதிகாலையில் எவ்வாறு இந்தியா இந்த அளவுக்கு துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும், பாகிஸ்தானுக்குள் எதிரிகளான தீவிரவாதிகளின் முகாம்களை இருப்படை எப்படி கண்டறிந்து தாக்கி அழிந்தது என்று அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. இந்நிலையில், இஸ்ரோ நாட்டின் பாதுகாப்புக்காக அனுப்பியிருந்த ஹெச்டி செயற்கைகோள் உடன் பாகிஸ்தானை கண்காணித்து துல்லியமாக தனது தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
87 % சதவீதம் பாகிஸ்தானை கண்காணிப்பு:
இஸ்ரோ நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு செயற்கைகோளை அனுப்பி இருக்கின்றது. இது 87 சதவீதம் பாகிஸ்தானை ஹெச்டி காட்சிகள் மூலம் கண்காணித்து வருகின்றது. இதை வைத்து பாலகோட், முசாபர் உள்ளிட்ட 3 இடங்களில் 4 தீவிரவாதிகளின் முகாம்களை மிராஜ் 2000 விமானம் மூலம் குண்டு வீசி தாக்கி தீவிரவாதிகளை அழிந்துள்ளது.
இந்தியாவின் செயற்கைகோள் காண்காணிப்பு:
இஸ்ரோ அனுப்பியுள்ள செயற்கைகோள் உதவியுடன் உயர்தர கண்காணிப்பு திறனுள்ள 0.65 மீட்டரில் பாகிஸ்தானை 8.8 லட்சம் சதுர கிலோ மீட்டரில் காண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைக்ரோசாட்- ஆர்:
இந்த செயற்கைகோள் கடந்த 2019 ஜனவரியில் பிஎஸ்எல்வி சி-44 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பட்டது. இதை இந்திய பாதுகாப்பு நிறுவனமான டிஆர்டிஓ கண்காணித்து வருகின்றது. இந்த செயற்கைகோள் எடுத்து அனுப்பும் புகைப்படம் மற்றும் காட்சிகளை ஆய்வு செய்து உளவுத்துறைக்கு செய்திகளை அனுப்பு வருகின்றது.
சீனாவையும் காண்காணிப்பு:
அருகே இருக்கும் நாடுகள் உட்பட 5.5 மில்லியன் சதுர கிலோ நிலபரப்பில் சீனா, பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளையும் இந்தியா கண்காணித்து வருகின்றது.
ஜிசாட் -7 ஏ:
இந்த செயற்கைகோளை 2018 டிசம்பர் 19ம் தேதி ஜிஎஸ்எல்வி-எப் 11 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செலுத்தியது. இது இந்திய விமாப்படைக்காக இரண்டாவது முறையாக அனுப்பட்டதாகும். ஜிசாட் 7 ஏ செயற்கைகோள் மூலம் ரேடார்களை இன்டர் லிங் செய்துவ, எல்லையில் நுழையும் பிற நாட்டு விமானம், டிரோன் காண்காணிப்பது, விமானப்படை தகவல், டிரோன் மூலம் வீடியோ எடுக்க உதவுதல், எதிரி நாட்டிலும் நீண்ட தூரத்திலும் காண்காணித்து தாக்குதல் நடத்தவும் இது பயன்படுத்தப்படுகின்றது.
ஜிசாட் 7-ஏ:
இந்தியா பாகிஸ்தான் எல்லை சீனா- இந்தியா எல்லை உள்ளிட்ட பல்வேறு வகையான பாதுகாப்புகளையும் இந்தியா மேம்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளிடம் இருந்து எல்லையை காக்கவும் இந்த செயற்கைகோள் உதவுகின்றது. பிற நாட்டு விமானங்களையும் இந்த செயற்கைகோள் 70 துல்லியமாக சதவீதம் கண்காணிக்கின்றது.
ஜிசாட் 7, ஜிசாட் 7-ஏ:
இந்த செயற்கைகோள்கள் இது இந்தியன் ரீஜினல் நேவிகேசன் சிஸ்டம் (ஐஆர்என்எஸ்) மைக்ரோ சாட், ரிசாட் 7ஏ, (ஹைபர் ஸ்பெக்டரல் இம்மேஷ் சேட்லைட்) உள்ளிட்டவை விமானத்துறைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், நாட்டின் 10 பாதுகாப்பு விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இது ராணுவத்திற்கும் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஹைசிஸ் (ஹைபர் ஸ்பெக்ட்ரல் இம்மேஷ் செயற்கைகோள்): இது 2018 நவம்பர் 28ம் தேதி பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. இதில் உள்ள அகச்சிவப்பு மற்றும் குறைந்த அழுத்த அலைவரிசைகளையும் இது தெரிந்து கொள்ள பயன்படுத்தப்படுகின்றது. பாலை வனம் குளிர் காண்காணிப்பு பிரதேசங்களிலும் இதை வைத்து கண்காணிக்க முடியும்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் உதவியது:
இந்தியா நடத்திவரும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கும் ஹைபர் ஸ்பெக்ட்ரல் இம்மேஷ் செயற்கைகோள் உதவி வருகின்றது. இது இந்தியா சர்வதேச எல்லை கோட்டையும் தாண்டி நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கும் உதவி வருகின்றது. இது பெரும்பாலும் இந்திய விமானப்படை, ஆர்மி, பாதுகாப்பு துறை உள்ளிட்ட நாடுகளுக்கும் இது முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது.
ஐஆர்என்எஸ்எஸ் கான்ஸ்டலேஷன்:
இது நேவிகேஷசன் செயற்கைகோளாகும். இதில், மொத்தம் 9 செயற்கைகேள் அனுப்பட்டுள்ளது. அதில் 7 ஆர்பிட்டில் சுற்றி வருகின்றது. கடந்த 2013 ஜூலை 1லும், கடைசியாக 2018 ஏப்ரல் 12ம் தேதியும் அனுப்பட்டது. மேலும், 1,600 கி.மீட்டர் தூரம் எல்லையில் காண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றது.
பயன்பாடுகள்:
இதை நேஷனல் ரிமோட் சென்சிங் சென்ட்டர் (என்ஆர்எஸ்சி) ஹைதராபாத் மூலம் காண்காணிப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஏவுகணைகளின் இயக்கம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியமாதாக பயன்படுத்தப்படுகின்றது. எதிரி நாட்டு இலக்குகளையும் குறி வைத்து அழிக்கவும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றது.
கர்டோசாட் பேலிமி:
இது ரிமோட் சென்சிங் செயற்கைகோளாகும். இந்த 5 செயற்கைகோள்கள் ராணுவத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. இது கடந்த 2005ம் ஆண்டு ஜூனில் விண்வெளிக்கு அனுப்பட்டது.
பயன்பாடு:
ஏவுகணைகளை காண்காணிக்கவும், அருகே உள்ள நாடுகளில் நடக்கும் அணு ஆயுதங்களையும் கண்காணிக்கவும் இது பயன்படுகின்றது. மேலும், தாக்க வரும் அணு ஆயுதங்களையும் கண்காணித்து அழிக்கவும், நமது நாட்டு ஏவுகணைகளை வழி நடத்தவும் இந்த செயற்கைகோள்கள் பயன்படுத்தப்படுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470