கட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ கண்டுபிடிப்பு.!.!
குறிப்பாக பெரிய தடைகள் மற்றும் நெருக்கமான இடைவெளி சுவர்கள் மீது ஏறுவதற்கும், பின்பு சுரங்கப்பாதை வழியாக செல்வதற்கும் தகுந்தபடி இந்த ரோபோ மாடல் உருவாக்கப்பபட்டுள்ளது.
இஸ்ரேல் விஞ்ஞானிகள் கடுமையான இடங்களைக் கடந்து,கரடுமுரடான நிலப்பகுதிகளில் ஏறுவதற்கு அதன் வடிவத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த ரோபோ மாடல்கள் மக்களுக்கு மிகவும்
உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் நொய்டா என்ற பகுதியில் 6 மாடி கட்டிடம் உட்பட 2 கட்டிடங்கள் இடிந்து விழுந்து 3 பேர் பலியாகினர். மேலும் 6 மாடி கட்டிடத்தில் 12 ஊழியர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் இடிபாடுகளில் சிக்கி இறந்த 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இது போன்ற கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொள்ளும் மனிதர்களை காப்பாற்றும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

உருவத்தை மாற்றிக்கொள்ளும்
மேலும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் இப்போது உருவாக்கியுள்ள ரோபோ மாடல் இடத்திற்கு தகுந்தபடி அதன் உருவத்தை மாற்றிக்கொள்ளும் என்றுக் கூறப்படுகிறது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொள்ளும் மனிதர்களை மிக எளிமையாக கண்டறியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரோபோவில் பொறுத்தப்பட்டுள்ள சக்கரங்கள் அதிவேக திறமையைக் கொண்டுள்ளது.

ரைசிங் ஸ்ப்ரோல்-ட்யூன்
ரைசிங் ஸ்ப்ரோல்-ட்யூன் எனப்படும் இந்த ரோபோ (RSTAR)உடலோடு இணைக்கக்கூடிய அனுசரிப்பு பரந்த சக்கர அம்சங்களைக் கொண்டு தனியாக நகர்த்தவும், தட்டையான பரப்புகளில் இயங்கவும் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கமான இடைவெளி சுவர்கள்:
குறிப்பாக பெரிய தடைகள் மற்றும் நெருக்கமான இடைவெளி சுவர்கள் மீது ஏறுவதற்கும், பின்பு சுரங்கப்பாதை வழியாக செல்வதற்கும் தகுந்தபடி இந்த ரோபோ மாடல் உருவாக்கப்பபட்டுள்ளது.

சிரமமான சூழல்களில்
சுளுவுயுசு ஆனது சிரமமான சூழல்களில் அதன் இலக்குகளை அடைய பல்வேறு தடைகளைத் தாண்டி கண்டிப்பாக வெற்றி பெரும் என்று சோதனை அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மாடல் அதன் இலக்கை அடைய பலவிதமான தடைகளைத் தகர்த்தெறியவும் அனைத்து சூழல்களில் நன்கு வேலை செய்யும் என்று டேவிட் ஸாரூக் BGU- விஞ்ஞானி
தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விஞ்ஞானிகள்
இந்த ரோபோ மாடல் கண்டிப்பாக அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படும், அதற்கு தகுந்த வகையில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications