இஸ்ரேலுடன் மோதும் இந்தியா-வரலாற்று சாதனையில் இடம் பிடிப்பது யார்?
இந்நிலையில் இந்தியாவும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இறங்கி வருகின்றது. சுகன்யான் திட்டத்திற்கு ஒரு படிமேல் சென்று தற்போது, இந்தியா ஆளில்லா விண்கனை நாளை அனுப்புகின்றது. இது சுகன்யான் தி
நிலவு குறித்து ஆராய்ச்சி செய்ய பல்வேறு நாடுகளும் கடும் போட்டி போட்டு வருகின்றன. மேலும், அங்கு மனிதர்களை குடி அமர்த்த முடியுமா என்றும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இறங்கி வருகின்றது. சுகன்யான் திட்டத்திற்கு ஒரு படிமேல் சென்று தற்போது, இந்தியா ஆளில்லா விண்கனை நாளை அனுப்புகின்றது. இது சுகன்யான் திட்டத்தின் முன்னோடியாகவும் கருத்தப்படுகின்றது.
இஸ்ரேலும் நிலவுக்கு விண்கலனை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது இந்த போட்டி இந்தியாவுடன் நிலவுகின்றது.

சந்திராயன்-1:
சந்திராயன்-1 இந்தியா சார்பில் நிலவுக்கு விண்வெளிக்கு அனுப்பட்டது. இது இந்தியாவின் மாபெரும் மைல்கல்லாகவும் அமைந்தது.
மேலும், நிலவில் தண்ணீர் இருக்கின்றது என்று இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-1 தான் மற்ற நாடுகளுக்கு முதன் முதலில் தெரிவித்தது. இதை நாசாவும் உறுதிப்படுத்தியது.

சந்திராயன்-2:
சந்திராயன்-1 திட்டம் வெற்றியடைந்தாலும், விண்கலன் ஒரு சில கோளாறு காரணமாக செயலிழந்து விட்டது. இதனால் அந்த திட்டம் முழுமையான செயல்பாட்டிற்கு வராமல் போனது.
இருந்த போதும் சந்தியராயன்- தண்ணீரை கண்டுபிடித்தால், இதன் தொடர்ச்சியாக சந்திராயன்-2 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றது.
மேலும், விரைவில் நிலவுக்கு சந்திராயன்-2 ஏவபட இருக்கின்றது.

விண்வெளிக்கு மனிதர்கள்:
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு மனிதர்களை நிலவுக்கு அனுப்பியுள்ளன. மேலும் நிலவில் மனிதர்கள் வாழ முடியுமா என்றும் பல்வேறு ஆராய்ச்சிகள் குறித்தும் ஆய்வுகளையும் நடத்தி வருகின்றன.
இதில் , சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பல்வேறு ஆய்வுகளில் இறங்கியுள்ளன. நிலவு குறித்து உலகமே கடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

சுகன்யான் திட்டம்:
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, விண்வெளிக்கு மனிதர்களை இந்தியா சார்பில் அனுப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் தயாராகி வருகின்றது. மேலும் 2021ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு அனுப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

சோதனை ஏற்பாடுகள்:
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் திட்டத்திற்காக பல்வேறு முறை சோதனை செய்யப்படுகின்றது. இதற்காக ஆளில்லா விண்கலன் இஸ்ரோ சார்பில் அனுப்பட இருக்கின்றது. இதில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட இருக்கின்றது.

இஸ்ரேல் விண்கலன்:
715 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விண்கலத்தை வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் நிலவுக்கு அனுப்புகிறது.

590 கிலோ எடை:
இஸ்ரேலின் ஸ்பேஸ் ஐஎல் நிறுவனம் தயாரித்துள்ள பெரேஷீட் ((Beresheet)) விண்கலமானது, நிலவைத் தொடுவதற்கு ஆயத்தமாகி விட்டது. 5 அடி உயரம் கொண்ட இந்த விண்கலம், 590 கிலோ எடையைக் கொண்டது. வியாழக்கிழமை அன்று அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ((Falcon)) பால்கன் 9 ராக்கெட் மூலம் பெரேஷீட் விண்ணில் ஏவப்படுகிறது.

4வது நாடு பட்டியல்:
7 வார பயணத்திற்கு பின் இது நிலவை அடையும். அங்கு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து புகைப்படங்களை அனுப்பும். அனைத்தும் சரியாக நடந்தால் நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற அந்தஸ்தை இஸ்ரேல் பெறும்.


Click it and Unblock the Notifications