ஆபத்தில் நாசா? ஆயுதமேந்திய ஏலியன் வீரரை படம்பிடித்த கியுரியோசிடி ரோவர்..
கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் ஆயுதமேந்திய ஏலியன் வீரர் ஒருவர் இந்த ரோவரை பார்த்துக்கொண்டிருப்பது போல தெரிகிறது. இதனால் நாசாவை ஏலியன்கள் கண்காணிக்கின்றனவா என்ற ஐயம் எழுந்துள்ளது.
கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் ஆயுதமேந்திய ஏலியன் வீரர் ஒருவர் இந்த ரோவரை பார்த்துக்கொண்டிருப்பது போல தெரிகிறது. இதனால் நாசாவை ஏலியன்கள் கண்காணிக்கின்றனவா என்ற ஐயம் எழுந்துள்ளது.
பாராநார்மல் க்ரூசிபில் எனும் யூடியூப் சேனலின் உரிமையாளர் எஸ்யூவி சைசுடு எக்ஸ்ப்ளோரர் மூலம் எடுக்கப்பட்ட நாசா புகைப்படங்களை தேடிக்கொண்டிருக்கும் கிடைத்த விசித்திரமான புகைப்படம் ஒன்று, செவ்வாயில் உயிரினங்கள் இருக்கின்றன அல்லது இருந்திருக்கலாம் என்பதற்கான மற்றொரு வலுவான ஆதாரமாக உள்ளது.

போர்கவசம் அணிந்துள்ள ஏலியன்
தூசு மற்றும் பாறைகள் நிரம்பியுள்ள செவ்வாயின் மேற்பரப்பில் போர்கவசம் அணிந்துள்ள போர்வீரன் ஒருவன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு அமர்ந்துள்ளது போல அந்த படத்தில் தெரிகிறது. ஒருவேளை அது ஏலியன் போர்வீரனாக இருக்குமோ?

விசித்திரமான தோற்றம்
விசித்திரமான தோற்றம் கொண்ட அது ஒரு உயிரினத்தை போல தோன்றவில்லை. ஆனால் ஒரு கற்சிற்பம் எப்படியோ செவ்வாயின் கடுமையான சோதனை நேரத்தில் நின்றுகொண்டுள்ளது.

அச்சுறுத்தலான தோற்றம்
இது உண்மையில் ஒரு சிலையாக இருந்தால் நிச்சயம் அது ஏதோ ஒன்றை குறிக்கிறது. அதன் அச்சுறுத்தலான தோற்றம் மற்றும் எதிர்மறையான தோற்றம் போன்றவை போர்வீரன் போன்ற சான்றளிக்கிறது. இது மிக மிகவும் பொறுத்தமாக இருக்கும்.

செவ்வாயின் சகுனம்
ரோமானிய புராணங்களின் படி செவ்வாய் போர் கடவுள் ஆதலால் சூரிய குடும்பத்தின் 4வது கிரகத்திற்கு அந்ந பெயர் இடப்பட்டுள்ளது. வானில் செவ்வாயை பார்ப்பது சகுனமாக கருதப்பட்டாலும் அதன் தோற்றம் பெரும்பாலும் மோதலையே முன்னறிவித்தது.

செவ்வாயின் தகவல் அழிந்துவிட்டதா?
நமது முன்னோர்கள் செவ்வாயை பற்றி ஏதேனும் அறிந்து வைத்திருந்து அது காலப்போக்கில் அழிந்துவிட்டதா? அல்லது இந்த பெயரிடல் என்பது தற்செயலான ஒன்றா?

பண்டைய கால சிலை
"இந்த புதிரான பொருள் இயற்கையில் செயற்கையான ஒன்றாகவே தோன்றுகிறது. இது ஒரு பண்டைய கால சிலை என்பதே எனது கருத்து " என்கிறது அந்த வீடியோ. இது தொடர்பான வித்தியாசமான விசயம் என்னவெனில், இது வேற்றுகிரக சாம்பல் அல்லது ஏலியன் பூச்சி வகைக்கு ஒப்பானதாகும்.

பராடோலியா நோய்
இந்த கண்டுபிடிப்பானது ஏலியன் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே மிகப்பெரிய கருத்து மோதலை உண்டாக்கியுள்ளது.செவ்வாயில் பழங்கால ஏலியன் இருப்பதற்கு ஆதாரம் என ஒருசாரார் கூற, மற்றொரு சாராரே இது இல்லாததை இருக்கிறது என நம்பும் பராடோலியா நோயின் அறிகுறி என்கின்றனர்.


Click it and Unblock the Notifications