Just In
- 7 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 7 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 8 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 10 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
300 தீவிரவாதிகளை இந்தியா அழித்து உண்மை: அதிரவைக்கும் ஆதாரம் வெளியானது.!
தீவிரவாதிகள் முகாம் மீது மிராஜ் 2000 போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதிய ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.
புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானில் முகாம் அமைத்து தங்கியிருந்தனர். மேலும், இவர்கள் தங்கியிருந்தை மத்திய அரசு செயற்கைகோளுடன் கண்காணித்து வந்தது.
தீவிரவாதிகள் முகாம் மீது மிராஜ் 2000 போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதிய ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் 300 பேர் கொல்லப்பட்டுள்ளது இதன் மூலம் உண்மை என தெரியவந்துள்ளது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தாக்குதல் நடத்தியது:
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு என்ற தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தான் பாலகோட்டில் இந்தியா விமாப்படை தாக்குதல் நடத்தியது.
1000 கிலோ வெடி மருந்து:
இதில் ஆயிரம் கிலோ வெடி மருந்துகளை மிராஜ் 2000 விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியானது. இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது.
300 செல்போன் ஆக்டிவேட்:
இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன் அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன்கள் ஆக்வேடில் இருந்துள்ளன.
தொழில்நுட்ப ஆதாரம்:
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, ஒவ்வொரு ஆதரமாக வெளியாகி வருகின்றது. இதில், தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 300 செல்போன் அந்த நேரத்தில் உச்சபட்ச சிக்னல் உடன் ஆக்டிவேட் உடன் இருந்துள்ளது. இது தாக்குதல் நடக்கும் முன்பு வரை.
செல்போன் சிக்னல் கருவிகள்:
தொலைபேசி சிக்னல்களுக்கான கருவிகளும் தீவிரவாதிகளின் முகாம்களில் இருந்துள்ளது. இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அவைகள் சீர்குலைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்பு நிச்சயம்:
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்கள் குறித்த குறிப்பான தகவல்கள் இல்லை. எனினும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மட்டும் வெளிவாக தெரியவருகின்றது.
விமானப்படை தலைவர் உறுதி:
இந்த தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை. இதில் தீவிரவாதிகளின் முகாம் அடியோடு அழிக்கப்பட்டன. தீவிரவாதிகளை அழிப்பது எங்களின் இலக்கு. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. இதை அரசு விரைவில் வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
அணு ஆயுத போர் நடந்தால் பாகிஸ்தானுக்கு பேரழிவு: இந்தியாவின் பலம்.!
இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் தற்போது போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் நடந்த பல்வேறு போர்களிலும் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.
தற்போது இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவுடன் பாகிஸ்தான் அணு ஆயுத போர் நடத்தினால், அதிலும் இந்தியா தான் வெல்லும் படை பலம் மட்டும் இல்லாமல் பல்வேறு துல்லியமாக தாக்கும் நுட்படும், ஆயுத ஆயுத ஆற்றலும் கொண்டுள்ளது இந்தியா.
மேலும், இரு நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து இனி காணலாம்.
இந்தியா-பாகிஸ்தான் முழு வீடியோ:
இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து தெளிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு வீடியோ குறித்து நாம் காணலாம்.
இந்தியா பாகிஸ்தான் அணு குண்டுகள்:
இந்தியா- பாகிஸ்தான் நாடுகளிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ பலம் குறித்து வாஷிங்டனில் உள்ள சர்வதேச ஆய்வுகள் மையம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிடம் 130 முதல் 140 அணுகுண்டுகள் உள்ளன என்றும் பாகிஸ்தானிடம் 140 முதல் 150 அணு குண்டுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏவுகணைகள்:
ஏவுகணைகளை பொருத்தவரை, இந்தியாவிடம் 5000 முதல் 9000 கிலோ மீட்டர் வரை தாக்குதல் நடத்தும் ஒன்பது வகையான ஏவுகணைகள் உள்ளன.
பாகிஸ்தான் ஏவுகணைகள்:
இந்தியாவின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பாகிஸ்தான் வைத்துள்ளது. சீன உதவியுடன் உருவாக்கப்பட்ட குறுகிய, நடுத்தர ரக ஏவுகணைகளும் பாகிஸ்தானிடம் உள்ளன.
அதிகபட்சமாக 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாயும் ஷாஹீன் தான் பாகிஸ்தான் உச்சவல்லமை கொண்ட ஏவுகணை.
இந்திய ராணுவ வீரர்கள்:
இந்திய ராணுவத்தில் 21.40 லட்சம் வீரர்கள் உள்ளனர். 4426 போர் டாங்கிகள் உள்ளன. 5681 கவச வாகனங்கள், 290 இலகு ரக பீரங்கிகள், 292 ராக்கெட் ஏவும் லாஞ்சர்கள் உள்ளன.
பாகிஸ்தான் ராணுவம்:
பாகிஸ்தானிடம் 6,53,000 போர்வீரர்கள், 2735 டாங்கிகள், 3066 கவச வாகனங்கள், 325 இலகு ரக பீரங்கிகள், 134 ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளன.
இந்திய விமானப்படை பலம்:
இந்தியாவிடம் மொத்தம் 2216 விமானங்கள், 323 போர் விமானங்கள், 329 பல் உபயோக விமானங்கள், 220 தாக்குதல் ரக விமானங்கள், 725 ஹெலிகாப்டர்கள், ஏழு வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களையும், ஆளில்லா ஹெரன் ரக விமானங்கள், விண்ணிலேயே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் என நவீன வசதிகளை கொண்டுள்ளது இந்திய விமானப்படை
பாகிஸ்தான் விமானப்படை:
பாகிஸ்தான் விமானப்படையில் 1143 விமானங்கள், 186 போர் விமானங்கள், 225 பல் உபயோக விமானங்கள், 90 தாக்குதல் விமானங்கள், 323 ஹெலிகாப்டர்கள் உள்ளன. பத்து வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களும் பாகிஸ்தானிடம் உள்ளன.
இந்திய கடற்படை:
இந்தியா கடற்படையில் மொத்தம் 214 கப்பல்கள் உள்ளன. இரு விமானம் தாங்கி கப்பல்கள், 16 நீர்மூழ்கிக் கப்பல்கள், 11 அழிக்கும் கப்பல்கள் , 15 சிறிய போர்க்கப்பல்கள், 106 ரோந்து மற்றும் கடற்கரை போர் கப்பல்கள், 75 போர் விமானங்களும் இந்திய கடற்படையில் உள்ளன.
பாகிஸ்தான் கடற்படை:
சிறிய கடலோரப்பகுதி கொண்ட பாகிஸ்தானின் கடற்படை மொத்தம் 231 கப்பல்களை கொண்டுள்ளது. 9 போர் கப்பல்கள், 5 நீர்மூழ்கிக் கப்பல்கள், 17 ரோந்து மற்றும் கடலோரக் கப்பல்கள் அங்கு உள்ளன.
4வது இடத்தில் இந்தியா ராணுவம்:
உலக அளவில் இந்தியா ராணுவ பலத்தில் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 17-வது இடத்திலும் உள்ளன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470