"போர்.. போர்..!" என்று கூவும் நண்பர்களின் கவனத்திற்கு! போர் நடந்தால் என்னவாகும்?

அந்த அறிக்கையானது, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் ஒரு அணு ஆயுத போர் ஆனது ஓசோன் படலத்தை பாதிக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய கடுமையான சேதங்களிளை புட்டு புட்டு வைத்துள்ளது.

|

ஒருவேளை ஆயுத தாக்குதல்களின் அடுத்த கட்டத்திற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் சென்றால், அதாவது இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி யுத்தம் ஒன்று நடந்தால், உலகெங்கிலும் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசியால் மரணத்தை சந்திப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? மில்லியன் கணக்கான மக்கள், நோய் பரவல் மற்றும் உணவுக்கான சண்டையில் மடிவார்கள் என்பதையாவது நீங்கள் அறிவீர்களா? இதென்ன புதுக்கதை என்று கேட்பவர்கள் கட்டுரையை முழுமையாக படிக்கவும்!

இத்தனை மக்கள் சாவார்கள் என்று நாங்கள் கூறவில்லை, ஆய்வறிக்கை கூறுகிறது. அதுவும் சாதாரணமான அறிக்கை அல்ல. அமெரிக்க மருத்துவ நிபுணரான ஐரா ஹெல்ஃபான்ட்டின் மூலம் மருத்துவ ராயல் சொசைட்டி மாநாட்டில் சமர்பிக்கப்பட்டுள்ள ஒரு அறிக்கை ஆகும். அந்த அறிக்கையானது, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் ஒரு அணு ஆயுத போர் ஆனது ஓசோன் படலத்தை பாதிக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய கடுமையான சேதங்களிளை புட்டு புட்டு வைத்துள்ளது.

 அணு ஆயுத தாக்குதல்

அணு ஆயுத தாக்குதல்

"எங்கோ நடக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட அணு ஆயுத தாக்குதல் ஆனது பூமியில் உள்ள அனைவருக்கும் அச்சுறுத்தலாக இருக்கும்" என்று ஹெல்ஃபான்ட், நியூ சயின்டிஸ்ட் பத்திரிகைக்கு தெரிவித் உள்ளார். நான் சொல்வது உங்களை பயமுறுத்துகிறது என்றால் நமக்கு கிடைத்துள்ள தரவானது உங்களின் தூக்கத்தை கெடுக்கும் என்கிறார் ஹெல்ஃபான்ட்.

100 ஹிரோஷிமா அளவிலான அணு ஆயுத வெடிப்பு

100 ஹிரோஷிமா அளவிலான அணு ஆயுத வெடிப்பு

ஹெல்ஃபண்ட் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ், நார்தம்ப்டனில் உள்ள ஒரு அவசர-அறை டாக்டர் ஆவார். உடன் அமெரிக்கன் அணு ஆயுத எதிர்ப்பு குழுவான, பிசிசியன்ஸ் ஃபார் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடீஸ் குழுவின் இணை நிறுவனரும் ஆவார். இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலேயான ஒரு அணு ஆயுத யுத்தமானது எப்பெறும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்காக, 100 ஹிரோஷிமா அளவிலான அணு ஆயுத வெடிப்பு சக்தியின் தரவை இவர் எடுத்து கொண்டுள்ளார்.

அந்த ஆய்வின் படி நிகழப்போகும் ஒரு அணு ஆய்த யுத்தமானது இரண்டு விடயங்களை தூண்டி விடுமாம். ஒன்று உலகளாவிய பதுக்கல், மற்றொன்று வெகுஜன பட்டினி!

உலகளாவிய பதுக்கல்!

உலகளாவிய பதுக்கல்!

இம்மாதிரியான அணு ஆயுத மோதல்கள் ஆனது சுமார் 5 மில்லியன் டன்கள் அளவிலான கருப்பு புகையை வளிமண்டலத்தில் நிரப்புமாம், அதன் விளைவாக அடுத்த பல ஆண்டுகளுக்கு பூமியின் மேற்பரப்பில் உள்ள சராசரி வெப்பநிலையில் ஆனது 1.25 டிகிரி செல்சியஸ் என்கிற சரிவை சந்திக்குமாம். இதனை தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான தானிய உற்பத்தி செய்யும் இடங்கள் மற்றும் பகுதிகள் ஆனது 10 முதல் 20 நாட்களுக்குள் அழிவை சந்திக்க ஆரம்பிக்கும்.

800 மில்லியன் ஊட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்க தொடங்குவார்கள்

800 மில்லியன் ஊட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்க தொடங்குவார்கள்

அத்தகைய ஒரு பேரழிவை சமாளிக்கும் படியான அனுபவம் நம்மிடம் இல்லை என்கிறார் ஹெல்ஃபண்ட் . "கடந்த ஐந்து தசாப்தங்களில் - எவ்விதத்திலும் - இல்லாததைவிட உலகளாவிய தானிய பங்குகள் ஆனது 49 நாட்கள் மட்டுமே தாங்கும்" என்றும் அவர் கூறுகிறார். "நிகழ்ந்து கொண்டு இருக்கும் உற்பத்தியில் ஒரு தீவிர சரிவு ஏற்பட்டால், இந்த பங்குகள் குறிப்பிடத்தக்க இருப்புக்களை மக்களுக்கு வழங்காது. அது உலகளாவிய அளவிலான பதுக்கல்களுக்கு வழிவகுக்கும் என்கிறார் ஹெல்ஃபண்ட்.


பாதிக்கும் மேற்பட்ட தானியங்களை இறக்குமதி செய்யும் நாடுகளான மலேசியா, தென் கொரியா மற்றும் தைவான் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பட்டியலில் உள்ளதாக ஹெல்ஃபண்ட் வாதிடுகிறார். எனவே, வட ஆப்பிரிக்காவில் 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு வகைகளில் 45 சதவிகிதத்தை இறக்குமதி செய்வார்கள். மறுகையில் உலகெங்கிலும் உள்ள 800 மில்லியன் ஊட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்க தொடங்குவார்கள். இம்மாதிரியான ஒரு நிலைபாடு ஆனது, 19 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பஞ்சமாக கருதப்படும் இந்தோனேசிய தொம்போரா எரிமலை வெடிப்பிற்கு (1815 - 1816) சமமாக இருக்கும் என்றும் ஹெல்ஃபண்ட் சுட்டி காட்டுகிறார்.

வெகுஜன பட்டினி!

வெகுஜன பட்டினி!

ஆசியாவில் நடக்கும் ஒரு அணுசக்தி யுத்தமானது உலகளாவிய பட்டினி இறப்பின் எண்ணிக்கையை ஒரு பில்லியனாக மாற்றும் என்கிறார் ஹெல்ஃபான்ட். உடன் உணவு பற்றாக்குறைகள் மூலமாக காலரா, டைபஸ் மற்றும் பிற நோய்களுக்கான தொற்றும் ஏற்படுமாம். அது ஆயுத மோதல்களையும் தூண்டிவிட்டு மேலும் சில நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை கொன்றுவிடும் என்கிறார் ஹெல்ஃபான்ட்.

அணுசக்தி ஆயுதங்கள் மூலம் உருவாகும் புகை

அணுசக்தி ஆயுதங்கள் மூலம் உருவாகும் புகை

வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வானது, 15 கிலோ எடை கொண்ட சிறிய அளவிலான 100 அணுசக்தி ஆயுதங்கள் மூலம் உருவாகும் புகை ஆனது ஓசோனின் 30 முதல் 40 சதவிகித்தை அழிக்கக்கூடும் என்று கூறுகிறது. இந்த ஆய்வின் ஆசிரியரும், அமெரிக்காவின் போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தின் வளிமண்டல விஞ்ஞானியும் ஆன பிரையன் டோனின் கருத்துப்படி, அணு ஆயுத போர் ஆனது சில உணவு பயிர்களைக் கொன்றுவிடும் என்கிறார்.

 சுமார் 50 டிகிரி செல்சியஸ்

சுமார் 50 டிகிரி செல்சியஸ்

இந்த அளவிலான புகை மண்டலம் ஆனது பூமியின் அடுக்கு மண்டலத்தின் வெப்பநிலையை சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும், அதனால் ஏற்படும் இயற்கை எதிர்வினைகள் ஆனது ஓசோன் படலத்தை தாக்கும். "இதுவரை, இதற்கு முன் யாரும் நினைக்காத அளவிலான பாதிப்புகள் ஏற்படும்" என்றும், இறுதியில் "வெகுஜன பட்டினிக்கு ஒரு சாத்தியம் இருப்பதாக நான் நினைக்கிறேன்." என்றும் அவர் கூறியுள்ளார்.

பேரழிவிற்குள் தள்ளும்

பேரழிவிற்குள் தள்ளும்

இத்தகைய கொடூரமான கணிப்புக்களை அணு வல்லுனர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நாடாகும் ஒரு அணுசக்தி யுத்தம் ஆனது அவைகளுக்கு மட்டுமின்றி இதர நாடுகளையும் பேரழிவிற்குள் தள்ளும் என்கிறார் அமெரிக்க தின்க் டேங்க்கின் இயக்குனர் ஜான் பைக். அதாவது "உள்ளூர் நிகழ்வுகள் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும்." என்றார்.

Best Mobiles in India

English summary
Indo-Pak nuclear war could block sunlight, bring ice age, and kill two billion people: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X