Just In
- 1 hr ago கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- 2 hrs ago மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
- 2 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 2 hrs ago Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
Don't Miss
- News என் மகன்கள் இருவருமே ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர்.. ஏன் தெரியுமா? சீமான் சொன்ன அடடே காரணம்!
- Movies ஊரே இளையராஜா பாட்டு கேட்கும்.. ஆனால் அவரோ.. இயக்குநர் சொன்ன சுவாரஸ்யமான விஷயம்
- Lifestyle எலுமிச்சை சாறுடன் இந்த 3 பொருட்களில் ஒன்றை சேர்த்து குடிப்பது பானை மாறி உள்ள தொப்பையை சர்ருனு குறைக்குமாம்...!
- Automobiles ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
- Sports எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
2பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.!
இதுவரை எந்த நாடும் நிலவில் தரையிறக்காத பகுதியில் விண்கலனை தரையிறக்க இருக்கின்றது இஸ்ரோ. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதில் மற்றொரு ஆர்ச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னென்வென்றால்,
சந்திராயன் 2 விண்கலன் வரும் ஜூலை 15ம் தேதி ஸ்ரீஹரிகோட்ட விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுவதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து இஸ்ரோ இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இஸ்ரோ அனுப்பும் சந்திராயன் 2 விண்கலன் மீது உலக நாடுகளின் பார்வையும் திரும்பியுள்ளது.
இதுவரை எந்த நாடும் நிலவில் தரையிறக்காத பகுதியில் விண்கலனை தரையிறக்க இருக்கின்றது இஸ்ரோ. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதில் மற்றொரு ஆர்ச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னென்வென்றால், நிலவில் தரையிறங்கும் விண்கலனை இரண்டு இந்திய பெண்கள் வடிவமைத்துள்ளனர் என்பது தான். இன்று இது டாப் டிரெண்டிங்காகவும் இருக்கின்றது.
சந்திராயன் 1 வெற்றி:
கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் 1 நிலவுக்கு முதல் முயற்சியிலேயே இந்தியா செலுத்தி வெற்றி கண்டது. இது மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளையம் தன் திரும்பி பாரக்கும் வகையில் இது அமைந்தது.
நிலவில் உறைந்த நிலையில் தண்ணீர் இருக்கின்றது என்று கண்டுபிடித்து உலகிற்கு முதலில் கூறியது.இதை நாசா விஞ்ஞானிகளும் சந்திராயன் கூறியது உண்மை தான் என்று கூறினர்.
சந்திராயன்-1 செயலிழந்தால், இஸ்ரோவின் முழுமையான ஆராய்ச்சி பாதியிலேயே தடைபட்டது. இதையடுத்து இஸ்ரோ சந்திராயன்-2 திட்டத்தையும் தயார் செய்தது.
சந்திராயன் 2 திட்டம் தயார்:
இதற்காக வரும் 19ம் தேதி பெங்களூர் இஸ்ரோ மையத்திற்கு சந்திராயன் 2 திட்ட விண்கலன் மற்றும் உதிரிபாகங்கள் கொண்டு வரப்படுகின்றது. பிறகு அங்கியிருந்து மறுநாள் வரும் 20ம் தேதி ஸ்ரீஹரிகோட்ட ராக்கெட் ஏவுதளத்திற்கு ராக்கெட் மற்றும் விண்கலன் கொண்டு செல்லப்படுகின்றது.
பிறகு ஜூலை 15ம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுவரை எந்த நாடும் நிலவில் நிலவின் தென்துவருவத்தில் இறக்கியது இல்லை. இந்த சாதனையும் இஸ்ரோ செய்ய இருக்கின்றது.
சந்தியராயன்-2 உருவாக்கிய 2 பெண்கள்:
இஸ்ரோ விண்வெளி மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளர்களாக நீண்ட காலம் அனுபம் வாய்ந்த இரண்டு பெண்கள் விஞ்ஞானிகளான வனிதா மற்றும் ரித்து கரிதால் இவர்கள் தாம் பெரும் பொறுப்பையும் முன்னெடுத்து சென்றுள்ளனர்.
முத்தையா வனிதா:
சந்தியரான் திட்டத்தில் இயக்குநராகச் செயல்படுறார். மொத்த விண்கலன் தயாரிப்பு மற்றும் உறுப்பு ஆகியவற்றை சரிபார்ப்பது, இதை இறுதி வடிவமாக்கி விண்ணுக்கு அனுப்புவது வரை எல்லாம் இவர் தான். மேலும் இதற்கு முன்பு வனிதா கார்டோசார்-1 ஓசன்சட் 2 ஆகிய விண்கல தயாரிப்புகளில் பணியாற்றியுள்ளார்.
ரித்து கரிதால்:
மற்றொரு பெண் விஞ்ஞானியான ரித்து கரிதால் சந்திராயன் திட்டத்தின் துணை செயல்பாடு இயக்குநராக உள்ளார். இவர் விண்கலகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து இவரின் பணி. இவர் மங்கல்யான் விண்கல தயாரிப்பில் பணியாற்றியுள்ளார்.
இரு பெண்களே செய்துள்ளனர்-சிவன்:
இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் இதற்கு முன்பு பெண்கள், தகவல் தொடர்பு மற்றும் பிற விண்கலன்கள் ஏவுதும் பொறுப்பிலிருந்துள்ளனர். ஆனால் விண்கலத்தின் பாகங்கள் தயாரிப்பது முதல் அதன் செயல்பாடு என அனைத்து வேலைகளும் இரு பெண்களின் தலைமையில் நடப்பது இதுவே முதல்முறை. சந்தியரான் 2 இந்தியாவுக்கு மிகவும் சவாலான விண்கலன் என்றும் குறித்து பேசியுள்ளார்.
சந்திராயன்-2 மூலம் பிற நாடுகளையும் திரும்பி பார்க்க வைக்கும் இஸ்ரோ.!
மயில்சாமி அண்ணாதுரை கருத்து:
முத்தையா வனிதா விண்கலனத்தின் இயக்குரான நியமிக்கபட்டுள்ளது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர் அவர் விண்கல தயாரிப்பில் வேலை செய்துள்ளார்.
ஆனால் அதில் அவரின் வேலைகள் அனைத்தும், தரவு கையாளுதல் தொடர்பாக மட்டுமே இருக்கும். தன் ணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது வனிதாவுக்கு நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சந்திராயன்-2 ரகசியம் அம்பலம்- மயில்சாமி: நிலவில் தரையிறங்கும் இடம்?
ரித்து கரிதால் பணி:
1997-ம் ஆண்டு முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். அவர் 2007-ம் ஆண்டு இளம் விஞ்ஞானிக்கான விருதையும் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாகப் பல விண்கலத்தின் தயாரிப்பில் இருந்துள்ளார். இது தொடர்பாக ரித்து கூறும்போது, துணை செயல்பாட்டு இயக்குநர், இதுதான் எனக்கும் எனது குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ள வேலை. விண்கலத்தின் இயக்கத்தை நாங்கள் கவனித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.
சந்திராயன்-2 விண்கலம் ஏவுதல் தள்ளிவைப்பு: பின்னணி என்ன?
முழுமையாக இந்தியாவில் தயாரிப்பு:
சந்திரயான் 2 தான் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு நிலவுக்குச் செல்லும் முதல் விண்கலம். அதற்கான அனைத்துத் திறன்களையும் சந்திரயான் கொண்டுள்ளது. இஸ்ரோவில் உள்ள ஆண் விஞ்ஞானிகளுக்கு இணையாகப் பெண்களின் செயல்பாடும் சந்திரயான் 2 விண்கலத்தில் வெளிப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470