காற்று மாசுபாட்டிலிருந்து இருந்து மை உருவாக்கும் இந்திய குழு..!
மனிதர்களாகிய நாம் மிக நீண்ட காலமாக படிம எரிபொருட்களை நம்பி வாழ்ந்து வருகிறோம். பல அகால மரணங்கள் நேரடியாக படிம எரிபொருட்களை எரிய விடும் புகைக்கரி தொடர்பான தயாரிப்புகள் மூலம் நிகழ்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டே தான் வருகின்றனர்.
உடன் இயந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் மாறிகளை வைத்து பார்க்கும் போது சுமார் 80 முதல் 90 சதவிகித வாகனங்கள் கார்பனை அடிப்படையாக கொண்டவைகள் தான், இதனை மையமாக கொண்டு உருவானது தான் ஏர் இன்க் ( Air Ink) இது க்ராவிக்கி லேப்ஸ்-ன் எனப்படும் ஆய்வகத்தின் இந்திய கூட்டு சிந்தனையில் உருவான ஒர் இந்திய குழுவாகும்.

30-50 நிமிடங்கள் :
இந்த குழு தயாரிக்கும் ஒவ்வொரு பேனாவும் கார்கள் மூலம் வெளியேற்றப்படும் சுமார் 30-50 நிமிடங்கள் வரையிலான காற்று மாசுபாட்டை கொண்டு உருவாகிறது.

சுற்றுச்சூழல் :
இதன் மூலம் நம்முடைய நுரையீரல்களை அடைய வல்ல சுற்றுச்சூழல் புகைக்கரியானது குறிப்பிட்ட அளவில் தடுக்கப்படுகிறது.

மாசு கலை :
தங்கள் இணையதளத்தில் இதுவொரு 'மாசு கலை' என்று ஏர் இன்க் குறிப்பிடுகிறது. உடன் மில்லியன் கணக்கான மக்களின் நுரையீரல்களில் இருந்திருக்க கூடுய மாசு அமைதியான கலைகளாக உறங்குகிறது என்றும் ஏர் இன்க் குறிப்பிடுகிறது.

யோசனை :
இந்த யோசனை முதன்முதலில் 2013-ல் நிகழ்ந்த இன்க் (INK) மாநாட்டில் வழங்கப்பட்டது என்பதும் பின்னர் க்ராவிக்கி ஆய்வகம் சாத்தியமான ஆராய்ச்சிகளுக்கும், கூறுகளுக்கும் நேரம் ஒதுக்கிய பின்பு தயாரிப்பை கையில் எடுத்துளள்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேனாக்கள் :
தற்போது இது சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறையின் கீழ் இருக்கிறது. அது கிடைக்கப்பெறவும் வணிக பயன்பாடு பேனாக்கள் உற்பத்தி தொடங்கப்படும்.

மேலும் படிக்க :
சாத்தியமே : கிழிந்தால் 'காயம் போல தானாக ஆற்றிக்கொள்ளும்' துணி வகை..!
இந்தியன் ஐயன் மேன் ரெடி : பொறியியல் மாணவர் அசத்தல்!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications