ஆகாய அசுரனை களமிறங்கிய இந்தியா: நடுங்கும் சீனா-பாகிஸ்தான்.!
இதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாட பொருட்களையும், வெளிநாட்டில் இருந்தும் அணு ஆயுதங்களையும், ஹெலிகாப்டர்களையும் சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவிடம
இந்தியா தனது ராணுவத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்தியா தனது ராணுவத்தை பலமிகுந்தாக உருவாக்கி வருகின்றது.

இதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாட பொருட்களையும், வெளிநாட்டில் இருந்தும் அணு ஆயுதங்களையும், ஹெலிகாப்டர்களையும் சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து சினூக் ரக விமானத்தை இந்தியா தனது ராணுவத்தில் தற்போது சேர்க்க துவங்கியுள்ளது. இதனால் சீனா-பாகிஸ்தானுக்கு கிலி ஏற்பட்டுள்ளது.

சீனா:
இந்தியாவை ஒட்டி இருக்கும் சீனாவிடம் எப்-16எஸ், ஜே ஜே 17 போர் விமானங்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், சீனாவிடம் 1,700 போர் விமானங்களும் இருக்கின்றன. 4ம் தலைமுறைக்கான 800 போர் விமானங்களும் இருக்கின்றன. டிரோன்களும் இருக்கின்றன.

பாகிஸ்தானிடம்:
பாகிஸ்தானிடம் 20 அதிநவீன போர் விமானங்களும், சீனாவிடம் இருந்து ஏராளமான ஆள்ளில்லா டிரோன்களையும் வாங்கு குவித்து வருகின்றது.

மலை உச்சியில் இருந்து தாக்குதல்:
இந்தியா மீது பாகிஸ்தான் அவ்வபோது, மலை உச்சியில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. சீனா இந்தியாவை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் தனது ராணுவ நிலைகளையும் அமைத்து வருகின்றது. மேலும், பாகிஸ்தான் வரை தார் சாலை அமைத்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல்:
பாகிஸ்தான் ராணுவம் தனது எல்லையை மீறி வந்து இந்தியா நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலை தொடர்ந்து வருகின்றது. மேலும், இந்தியாவும் பதில் அடித்து கொடுத்து வருகின்றது. இதில் தீவிரவாதிகளையும் பயன்படுத்தி வருகின்றது.

அத்துமீறும் சீனா:
இந்தியாவின் எல்லையான அருணாச்சல பிரதேசத்திலும் சீனா ராணுவம் நுழைந்தது. தனது முகாம்களையும் அமைத்து. இந்தியா கண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், சீனா திரும்பி விடும். பிறகு வந்து அத்துமறீ நுழைந்து தனது முகாமிடும். இந்த போக்கு தொடர்ந்ததால் இந்தியா-சீனாவுக்கும் போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்தியா மாறுப்பட்ட பிளான்:
எல்லையில் ஊருடுவும் தீவிரவாதிகளை தாக்கவும், போர் ஏற்பட்டால், அதிக எடையுள்ள தளவாட பொருட்களையும் கொண்டு செல்லும் விதத்தில் அமெரிக்காவிடம் இருந்து சினூக் ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டது. இதற்காக இந்தியா ஒப்பந்தமும் போட்டிருந்தது.

அப்பாசி ஹெலிகாப்டர்கள், சினூக் விமானம்:
இந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிக்கும் விதத்தில், 2500 கோடி டாலர் மதிப்பில் 22 அபாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும், 15 சினூக் ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

4 ஹெலிகாப்படர்கள் வந்தன:
அதில் முதல்கட்டமாக 4 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு குஜராத் மாநிலம் முந்ரா துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர் சுமார் ஒன்பதரை டன் அளவுக்கு ராணுவ தளவாடப் பொருட்களை அதிக உயரமான இடத்திற்கு கொண்டு செல்லும் திறன் படைத்தது.

இந்திய விமானப்படையில் இணைப்பு:
குஜராத்தில் சினூக் ஹெலிகாப்டரின் பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, சண்டிகர் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் இந்தியா விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்-சீனாவுக்கு கிலி:
இந்தியா நாளுக்கு நாள் தனது படைபலத்தை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிலி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications