இந்திய ஆன்டிசேட்லைட் ஆயுதம் வெற்றி: பாக். சவுக்கால் அடித்த சவுக்கிதார் மோடி.!
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியா தற்போது 4வது நாடாக இந்தியா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், சவுக்கிதார் மோடியின் செயல்பாடுகள் பாகிஸ்தானுக்கு கவுக்கிதார் மோடி சவுக்கால் அடித்த மாதிர
இந்தியாவின் ஆன்டி சேட்லைட் எதிர்ப்பு ஆயுதம் எனப்படும் செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இந்தியா.
மேலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியா தற்போது 4வது நாடாக இந்தியா இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், சவுக்கிதார் மோடியின் செயல்பாடுகள் பாகிஸ்தானுக்கு கவுக்கிதார் மோடி சவுக்கால் அடித்த மாதிரி உருவெடுத்துள்ளது. விண்வெளி வல்லரசாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.

ஆன்டி சேட்லைட் ஆயுதம் வெற்றி:
இந்தியாவின் ஆன்டி சேட்லைட் ஆயுதம் எனப்டும் செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதம் வெற்றியடைந்துள்ளது.
மேலும், குறைந்த புவிவட்ட பாதையில், செயற்கைகோளை எதிர்த்து வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சோதனையில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. மேலும், விண்வளெ வல்லரசு ஆகவும் உருவெடுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

4 வது நாடான இந்தியா:
இதன் மூலம் ஆன்டி சேட்லைட் ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் பட்டியில் இந்தியா தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து 4 வது நாடாக உருவாகியுள்ளது.
வானில் உளவு பார்க்கும் செயற்கைகோள்களை இந்தியா எளிதாக தாக்கி அழிக்க முடியும்.

குறைந்த புவி வட்ட பாதை:
மேலும், குறைந்த புவி வட்ட பாதையில் இந்தியா செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுத்தால் சுட்டு வீழ்த்தியுள்ளது. இது மூன்று நிமிடத்தில் நிகழ்த்தப்பட்டது. இது இது மிஷன் சக்தியின் கீழ் நடத்தப்பட்டது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

2000 கி.மீ உயரத்தில் அழிக்கும்:
மேலும், குறைந்த புவிவட்ட ஆர்பிட் எனப்படும் 2000 கி.மீ உயரத்தில், ஏ-சாட் செயற்கை ஆயுதங்களை அழிக்க அல்லது இது செயலிக்க செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு ஆயுதமாகும்.
இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பாதுகாப்பதற்காக மிஷன் சக்தி ஒரு முக்கிய படிக்கல்லாக இருக்கின்றது.

A-SAT ஏவுகணை :
இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு A-SAT ஏவுகணை புதிய பலத்தை தருவதாக பிரதமர் கூறினார். மேலும், எங்கள் திறனை யாருக்கும் எதிராக பயன்படுத்த முடியாது. சர்சதே நாடுகளுக்கும் உறுதியளித்தார். இந்தியாவின் பாதுகாப்புத் திட்டமாகும். நாம் விண்வெளியில் ஆயுதங்களை எதிர்த்து நிற்கிறோம். இந்த சோதனையானது சர்வதேச சட்டம் அல்லது ஒப்பந்தங்களை மீறுவதாக இல்லை. "

ஒரு சிறப்பு நாடு :
பிரதமர் மோடி இரண்டு காரணங்களுக்காக மிஷன் சக்தி விசேஷத்தை விவரித்தார் - 1. இந்தியா போன்ற ஒரு சிறப்பு மற்றும் நவீன திறனை பெற இந்தியா மட்டும் 4 வது நாடு. 2. இந்திய விண்வெளித்துறை உயர்ந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

விஞ்ஞானிகளுக்கு பாராட்டு :
பிரதம மந்திரி மோடி அறிவித்த பிறகு, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளை பாராட்டினார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானிகளால் மிஷன் சக்தி நிறைவேற்றப்பட்டதாக பிரதம மந்திரி தனது உரையில் தெரிவித்தார்.

மிஷன் சக்தி:
"மிஷன் சக்தி" வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக அனைத்து அறிவியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள். மோடி தலைமையின் கீழ், ஒரு சூப்பர் பொருளாதார சக்தியாக மட்டுமல்லாமல், ஒரு சூப்பர் விஞ்ஞான சக்தியாகவும் மாறியுள்ளது "என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. கூறியுள்ளது.

காங்கிரஸ் பாராட்டு :
A-SAT இன் வெற்றிகரமான பரிசோதனையின்போது இந்த திட்டத்தில் வேலை செய்யும் அரசாங்கத்தையும் விஞ்ஞானிகளையும் காங்கிரஸ் பாராட்டியுள்ளது.

பாகிஸ்தானுக்கு கவுக்கடி:
இந்தியா விண்வெளியில் துறையில் வளர்ந்து கொண்டடே செல்கின்றது. மேலும், இந்தியாவின் அனைத்து செயல்பாடுகளும் வல்லரசு நாடு என்ற கனவு திட்டத்தை நோக்கியுள்ளது. அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இது சவுக்கிதார் மோடியின் நடவடிக்கையால் இது சவுக்கடியாகவும் மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications